ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 3 - அகராதியைப் பார்த்துப் பொருளறிதல் - வினாக்களும் விடைகளும் / 9th REFRESHER COURSE - ACTIVITY 3 - QUESTION & ANSWER

 


         ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

      புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                     2021 - 2022 

                செயல்பாடு - 3

   அகராதியைப் பார்த்துப் பொருளறிதல்

************     *************    **************

    வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். 

     இங்கே , மூன்றாவது  செயல்பாடாக உள்ள  அகராதியைப் பார்த்துப் பொருள் அறிதல் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.


அகராதியைப் பார்த்துப் பொருளறிதல்

கற்றல் விளைவு:

படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

தேவைப்படின்பார்வைநூல்களாகிய அகராதிகள்,தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.

கற்பித்தல் செயல்பாடு:

அகராதி என்ற சொல், 'அகரம்', 'ஆதி' என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் ஆனது. (அகரம் +ஆதி =அகராதி), அகராதி, 'அகரமுதலி' எனவும் வழங்கப்படும் .

அகராதி என்பது அகரவரிசைப்படி அமைக்கப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான பல விவரங்களையும் கொண்டுள்ள நூலினைக் குறிக்கும்.

             தமிழில் அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்து கொள்வதற்கு நிகண்டுகள் பயன்பட்டன.

மேற்கத்திய முறைப்படி அமைந்த முதல் தமிழ் அகராதி சதுரகராதி ஆகும். இது வீரமாமுனிவரால் 1732ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஆயினும், முழுவதுமாக அச்சாகி வெளிவந்தது 1824ஆம் ஆண்டு என்பர்.

              தமிழ் அகராதியில் சொற்கள் அகரவரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்கள், அவற்றின் இரண்டாவது எழுத்தைக்கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறு சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும்.

எடுத்துக்காட்டாக

'குரவை' என்ற சொல்லிற்கு அகராதியில் பொருள் காணவேண்டுமானால், அகராதியின் பக்கங்களில் 'க' 'கர' வரிசையைப் புரட்ட வேண்டும். 'கு' என்ற எழுத்தில் தொடங்கும் பக்கத்தில் இரண்டாம் எழுத்தாக இடம்பெற்றுள்ள 'ர' எழுத்தை அடையாளம் காணவேண்டும். அடுத்து மூன்றாம் எழுத்தான வ வரிசையில் உள்ள வை என்பதைக் கொண்டு குரவை என்ற சொல்லினைத் தேடிப் பொருளைக் கண்டறியலாம்.

             குரவை என்பதற்கு, 'கடல்', 'ஒருவகை மீன்', 'ஒலி' , 'ஒரு கூத்து' எனப் பல
பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் நமக்குச் செய்யுளிலோ, தொடரிலோ
கொடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஏற்பப் பொருள்கொள்ள வேண்டும். 

எவ்வாறெனில்,

'குரவை ஆடினர்' என்ற சொற்றொடரில், குரவை என்பதற்குக் 'கூத்து' என்று
பொருள்.

 'குரவையைச் சமைத்தான்' என்ற சொற்றொடரில், குரவை என்பதற்கு 'மீன்'
என்பது பொருள்.

 'குரவைக்குச் சென்றான்' என்ற சொற்றொடரில், குரவை என்பது கடலைக்
குறிக்கும்.

'குரவைகேட்டது' என்ற சொற்றொடரில், குரவை என்பதற்கு 'ஒலி' என்று பொருள்.
- இவற்றை அறிந்து இடத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ள வேண்டும்.

***************     **************    ***********

       மதிப்பீட்டுச் செயல்பாடு

1.பின்வரும் சொற்களை அகராதியில் கண்டு அதற்கான பொருளை எழுதுக.

அடிசில்,ஆவலி, இம்மி, கல்லல், காசினி, தரு,நண்ணலர், வங்கூழ்,வெஃகல்.

அடிசில் -  உணவு 

ஆவலி   - வரிசை 

இம்மி   - அணு 

கல்லல்  - தோண்டல் 

காசினி   - நிலம் 

தரு        - மரம் 

நண்ணலர்  - பகைவர் 

வங்கூழ்  -  காற்று  , வாதம் 

வெஃகல்   -  பேராசை 

2. கீழுள்ள பத்தியைக் கவனமாய்ப் படித்துக் கொடுக்கப்பட்ட சொற்களுக்குரிய பொருளை அகராதியில் கண்டு எழுதுக.


           அஞ்ஞானம் அகன்றிட, ஆழ்ந்து கற்றிடுவீர்; இறுமாப்பாய் உலவி, ஈறுவரை புகழ்பெற்று வாழ்ந்திடுவீர்; ஊருணியாய்ப் பிறருக்குப் பயன்பட்டு, எஞ்ஞான்றும் சிறந்திடுவீர்:ஏதின்றி மொழிந்திடுவீர்;ஐயம் அகற்றித் தெளிந்திடுவீர்; ஒப்புமையின்றி
உயர்ந்திடுவீர் ; ஓதிஞானம் பெற்றதனால், ஔதாரியமாய் வாழ்ந்திடவே, அஃகலிலும்
கற்றிடுவீர்!

அஞ்ஞானம்  -  அறியாமை 

இறுமாப்பு  -  செருக்கு 

ஈறுவரை     - எல்லை

ஊருணி  -  மக்கள் நீரெடுக்கும் குளம்

எஞ்ஞான்றும்  -  எப்போதும்

ஏதின்றி  -   காரணமின்றி

ஓதிஞானம்  -  கல்வியறிவு 

ஔதாரியம்  -  பெருந்தன்மை 

அஃகல்     -  வறுமை 

3. பொருளை அகராதி உதவியுடன் எழுதுக.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."


மனமெனும் சோலையில் மந்தியாய் ஆடி
கனலான சொல்லாலே காய்த்து மனத்தை
ஊனமாய் மாற்றுமந்த உன்மத்தக் கோபத்தை
ஏனமாய் எஞ்ஞான்றும் எண்

                         கவிஞர் நளினா கணேசன்

காவாதான்  - காக்காதவர்

எரிமுன்னர்  - தீ முன்னர்

வைத்தூறு   - வைக்கோற்போர்

மந்தி              - குரங்கு 

எஞ்ஞான்றும்  - எப்போதும்

**************     ***************    **********




Post a Comment

2 Comments