9 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு - குடிமையியல் - அலகு 1 - விடைகள் / 9th SOCIAL SCIENCE - ASSIGNMENT - UNIT 1 - QUESTION & ANSWER

 

              ஒப்படைப்பு    -   விடைகள் 

         வகுப்பு - 9  -   சமூக அறிவியல் 

                     குடிமையியல் 

                            அலகு-1 

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

                         பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்வு செய்க

1.ஒரு நபரோ, அரசோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

அ) தனி நபராட்சி          ஆ) முடியாட்சி 

இ) மக்களாட்சி ஈ) குடியரசு

விடை :  ஆ ) முடியாட்சி

2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

அ) சிறுகுழு ஆட்சி 

ஆ) மதகுருமார்களின் ஆட்சி

 இ) மக்களாட்சி         ஈ) தனிநபராட்சி

விடை :  ஈ ) தனிநபராட்சி 

3. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

அ) இந்தியா ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 இ) பிரான்ஸ்             ஈ) வாடிகன்

விடை :   ஈ ) வாடிகன்

4. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

அ) சேரர்கள்       ஆ) பாண்டியர்கள் 

இ) சோழர்கள்    ஈ) களப்பிரர்கள்

விடை :  இ ) சோழர்கள்

5. எந்த மொழியில் இருந்து 'டெமாகிரஸி' என்ற வார்த்தை பெறப்பட்டது?

அ) கிரேக்கம்                  ஆ) லத்தீன் 

இ) பாரசீகம்                  ஈ) அரபு

விடை :  அ ) கிரேக்கம்

                          பகுதி- ஆ

1. சிறு வினா

1. ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.

* மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி ஆகும்.

2 மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக.

மக்களாட்சி அரசாங்க அமைப்புகள்

*  நாடாளுமன்ற அரசாங்க முறை - இந்தியா, இங்கிலாந்து

 * அதிபர் அரசாங்க முறை - அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

3. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.

நேரடி மக்களாட்சி

* பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக்கூடிய அரசு முறையை நேரடி மக்களாட்சி என்கிறோம்.

எ.கா. பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து

மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி)

* பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் முறையே மறைமுக மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.

* (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

                              பகுதி - இ

III. பெரு வினா

1. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?

1. கல்வியறிவின்மை

2. வறுமை

3. பாலினப் பாகுபாடு

4, பிராந்தியவாதம்

5. சாதி, வகுப்பு, சமய வாதங்கள்

6. ஊழல்

7. அரசியல் குற்றமயமாதல்

8. அரசியல் வன்முறை


2. இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?

* சமத்துவம், சுதந்திரம், சமூகநீதி, பொறுப்புணர்வு மற்றும் அனைவருக்கும் மதிப்பளித்தல் போன்ற அடிப்படை மக்களாட்சிப் பண்புகளை, மக்கள் மனதில் கொண்டு செயல்படும் போது, மக்களாட்சி மேலும் துடிப்பானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்கும்.

* மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவை மக்களாட்சியின் தலையாய கொள்கைகளுடன் பொருத்திச் செயல்படவேண்டும்.

* எனவே, மக்களாட்சியின் இலக்குகளை நடைமுறைபடுத்த மக்களே தங்களை
முன்மாதிரியாக பங்கெடுத்துக் கொள்ளவும், கடமையுணர்வோடு செயல்படவும்,
தங்களுக்குள் பொறுப்புணர்வை உருவாக்கவும், தமக்களிக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.


*************     ***************     ***********

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி அவர்கள் , 

பட்டதாரி ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

**************      ***************    **********

Post a Comment

0 Comments