8 - சமூக அறிவியல் - ஒப்படைப்பு - வரலாறு - விடைகள் - அலகு 1 / 8th SOCIAL SCIENCE - ASSIGNMENT - HISTORY - UNIT - 1 - QUESTION & ANSWER

 

                 பாடம்: சமூக அறிவியல்

               ஒப்படைப்பு     வகுப்பு: 8

                      வரலாறு -   அலகு - 1

                              பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1. சென்னை நாட்குறிப்பு பதிவுகள் எப்போது வெளியிடப்பட்டது?

அ) 1916   ஆ ) 1917 இ ) 1949  ஈ ) 1935

விடை : ஆ ) 1917

2. இந்தியாவின் முதல் நாணயம் ஆட்சியில் வெளியிடப்பட்டது

அ) பிரெஞ்சுக்காரர்கள் 

ஆ) போர்ச்சுகீசியர் 

இ) ஆங்கிலேயர் 

ஈ)  டேனியர்

விடை :  இ ) ஆங்கிலேயர்

3. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்

அ) நினோ-டி-குன்கா 

ஆ) வாஸ்கோடகாமா

இ) அல்மெய்டா

ஈ)  அல்போன்சோ-டி-அல்புகர்க்

விடை : ஈ ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

4. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை - பகுதியில் நிறுவனர்.

அ) ஆக்ரா                   ஆ) சூரத் 

இ) மெட்ராஸ்      ஈ) மசூலிப்பட்டினம்

விடை : ஈ ) மசூலிப்பட்டினம்

5. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.

அ) சூரத்                  ஆ) மசூலிப்பட்டினம் 

இ) பாண்டிச்சேரி         ஈ) மாஹி

விடை : இ ) பாண்டிச்சேரி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியாவின் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை நிறுவியவர் -------

விடை :  கரோன்.

2. -------  ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர். 

விடை : 1845

3. 1690 ஆம் ஆண்டு ------- பகுதியில் ஆங்கிலேய வர்த்தக மையம் நிறுவப்பட்டது.

விடை : சுதாநுதி

4.  -----------   பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.

விடை :  பழவேற்காட்டில்

5. வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி இந்தியாவிற்கு வருகை புரிந்தவர் --------------- 

விடை :  பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்

                             பகுதி-ஆ

1. குறுவினா

1. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?

* இது தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும். அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

* மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாகபதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.

2. டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த இந்திய பொருட்கள் யாவை?

* பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்தபொருட்களாகும்.

* கருப்பு மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர்,

3. சர் தாமஸ்ரோ எந்த இடத்தில் வணிக மையங்கள் நிறுவினார்?

* ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச்


4. எந்த போர்களுக்கு பிறகு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது?

* 1757இல் பிளாசி போர் மற்றும் 1764இல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.

5. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின்
பெயரை எழுதுக.

* சூரத், மசூலிப்பட்டினம், பாண்டிச்சேரி, மாஹி. காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார்.

                                பகுதி.இ

III. பெரு வினா

1. பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

* பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்டது.

* இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிகமையத்தை கரோன் என்பவர் சூரத் நகரில் நிறுவினார்.

* 1669இல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.

* 1673இல் பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ்,
மார்ட்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.

* கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்ற இடங்கள் முக்கியமானவையாகும்.

IV. செயல்பாடு

1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அட்டவணைப்படுத்துக.

எழுதப்பட்ட ஆதாரங்கள்

* துண்டுப்பத்திரிக்கை,
* இதிகாசம்,
* அரசு ஆவணம்

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்

* சித்தன்னவாசல் ஓவியம்,
* நாணயம்,
* சிலை,
* செயிண்ட் ஜார்ஜ் கோட்டை,

****************     **********    **************

Post a Comment

1 Comments