பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள்- ஆள்வினை உடைமை / 10th THIRUKKURAL - AALVINAI VUDAIMAI -

 

 பத்தாம் வகுப்பு - தமிழ் 

    இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம் 

                         திருக்குறள் 

              ஆள்வினை உடைமை ( 62 ) 


****************    ***********   ***********

              வணக்கம் அன்பு நண்பர்களே !  வாழ்வியல் இலக்கியமாம் திருக்குறளை நாம் கடந்த ஐந்து   வகுப்புகளில் கற்றுவருகிறோம்.  இன்றைய  வகுப்பில் ஆள்வினை உடைமை என்ற  அதிகாரத்திலுள்ள  ஐந்து   குறட்பாக்களையும் , அதற்கான  விளக்கத்தையும் காண்போம்.

          முதலில் நம்முடைய பெரும்புலவர்.திரு. மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.



நண்பர்களே ! ஆள்வினை  உடைமை அதிகாரத்திலுள்ள குறட்பாக்களின் சுவையை இரசித்தீர்களா ? 

14 ) அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.*

பொருள் :

                  ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.


15 ) தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 

வேளாண்மை என்னும் செருக்கு . 

பொருள் :  விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.


16 ) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.*

பொருள் : 

                  முயற்சி செய்தால் ஒருவருக்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.


17 ) பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறித்

தாள்வினை இன்மை பழி

பொருள் : 

                  ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.


18 ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 

தாழா துஞற்று பவர்.

பொருள் : 

                  சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்.

***********   *************   ********  ********

Post a Comment

0 Comments