பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள் - நன்றிஇல் செல்வம் - முன்னுரிமைப் பாடத்திட்டம் 2021 - 22 / 10th TAMIL - EYAL 3 - THIRUKKURAL - NANRIIL SELVAM

 

               பத்தாம் வகுப்பு - தமிழ் 

         இயல் - 3 , வாழ்வியல் இலக்கியம் 

                           திருக்குறள் 

                நன்றிஇல் செல்வம் ( 101 ) 

***********    ***********   **********   ********

                         வணக்கம் அன்பு நண்பர்களே ! வான்புகழ் வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் . ஆம் ! வாழ்வியல் இலக்கியமாக அமைந்துள்ள குறட்பாக்கள் மூலமாக ! 

                   வள்ளுவனைப் பெற்றதால் , பெற்றது புகழ் வையகம் என்பதற்கேற்ப குறள் நம்மை வழிநடத்திச் செல்கிறது. இன்றைய வகுப்பில் நாம் நன்றிஇல் செல்வம் என்ற அதிகாரத்திலிருந்து இரண்டு குறட்பாக்களைக் காண்போம்.

                   அதற்கு முன்பாக , நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போமா ?



 

நண்பர்களே ! இரண்டு குறட்பாக்களையும் காண்போம்.


19 ) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய 

கோடிஉண் டாயினும் இல்.

பொருள் : 

                  பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.


20 ) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

       நச்சு மரம்பழுத் தற்று.

பொருள் : 

                  பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் , ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

அணி : உவமையணி 

************   *************    ***************

          மகிழ்ச்சி நண்பர்களே ! இன்றைய வகுப்புடன் வாழ்வியல் இலக்கியமாக அமைந்த திருக்குறளில் உள்ள குறட்பாக்கம் இருபதையும் மிகத் தெளிவாகக் கற்றுக் கொண்டோம். பெற்றுக் கொண்டோம். நன்றி.

*************   ****************   ***********

Post a Comment

0 Comments