ஒப்படைப்பு - விடைகள்
வகுப்பு : 6
பாடம்: தமிழ் - அலகு 2
பகுதி - அ
1.ஒரு மதிப்பெண்வினா
1. கதிரவனின் மற்றொரு பெயர்?
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ)செவ்வாய்
விடை : ஆ ) ஞாயிறு
2. வெண்குடை என்ற சொல்லை பிரித்தெழுதுக........
அ) வெண்+குடை
ஆ) வெண்மை+குடை
இ) வெம்- குடை
ஈ) வெம்மை குடை
விடை : ஆ ) வெண்மை + குடை
3. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் .......
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
விடை : ஆ ) கேணி
4. நில + ஒளி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்.........
அ) நிலா ஒளி
ஆ) நில ஒளி
இ) நிலா வொளி
ஈ) நிலவு ஒளி
விடை : இ ) நிலாவொளி
5. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக
அ) வேதி+யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ)வேதி + உரங்கள்
ஈ) வேதியு+ரங்கள்
விடை : ஆ ) வேதி + உரங்கள்
6. நன் மாடங்கள் என்னும் சொல்லை பிரித்தெழுதுக
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
விடை : இ ) நன்மை + மாடங்கள்
7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி...........
அ) துருவப் பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
விடை : அ ) துருவப் பகுதி
8. வழி தடம் என்பதனைச் சேர்த்து எழுதுக
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
விடை : ஆ ) வழித்தடம்
9. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது...........
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ)வன்சொல்
ஈ) சிறிய செயல்
விடை : ஆ ) அறிவுடைய மக்கள்
10. ஒருவருக்குச் சிறந்த அணி...........
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ)வன் சொல்
விடை : இ ) இன்சொல்
பகுதி-ஆ
IL. சிறுவினா
1. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
* வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.
* கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது.
* மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.
* எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.
2. காணி நிலம் பாடலின் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?
காணி - காணி = கா
பத்துப் - பக்கத்திலே = ப
முத்துச் சுடர் - முன்பு = மு
3. பறவைகள் எக்காரணங்களுக்கு இடம் பெயர்கின்றன?
உணவு , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.
4. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?
* சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .
* கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.
* மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான்.
* சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும் திகழ்கிறார்.
5. எழுத்துக்களுக்குத் தொடக்கமாக அமைவது?
முதலெழுத்துகள்
பகுதி - இ
III. பெருவினா
1 பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றி சிந்தித்து எழுதுக?
* ஆல் , அரசு போன்ற மரங்களையும் அவரை , புடலை பொன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
* நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
* தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பகுதி-ஈ
IV.செயல்பாடு
1 சாண்டியாகோவைப் போன்று உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோ
சவாலாக இருந்த ஒருநிகழ்வை அரைப்பக்க அளவில் எழுதுக.
மாணவர்கள் தங்கள் மனதில் படும் கருத்துகளை எழுதுக.
*********** *********** **************
விடைத்தயாரிப்பு
திருமதி. ஐ. செல்வகுமாரி ,
தமிழாசிரியை , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி .
இளமனூர் , மதுரை .
************* *************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments