பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3
மொழியை ஆள்வோம்
பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்
மொழிபெயர்க்க ,
பழமொழிகளை நிறைவு செய்க ,
சுருக்கி எழுதுக.
************ ************ **************
மொழிபெயர்க்க
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should proud about our culture. Thank you one and all.
விடை :
மதிப்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நம் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிப் பேச இங்கு வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்கள் தமிழர்கள் கலாசாரத்திலும், நாகரிகத்திலும் சிறந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றன. தமிழர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல், வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். இந்தியா, ஸ்ரீலங்கா, மலேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறைகளில் தமிழ் கலாச்சாரம் ஊறியுள்ளது. நம் தமிழ் கலாச்சாரம் பழமையாக இருந்தாலும் தொடர்ந்து மேம்படுத்தப் படுகிறது. நம் கலாசாரத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். அனைவருக்கும் நன்றி!
************** ************** **********
பழமொழிகளை நிறைவு செய்க
1 ) உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
2 ) ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
3 ) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
4 ) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
5 ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
***************** ************* **********
பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக
பழையசோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து,
குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர்
பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல்
குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது
உப்பு நாரத்தாங்காய் அதனுடன் சேர்ந்து கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை, சுண்ட வைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு - அது கிராமத்து உன்னதம்.
“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" முக்கூடற்பள்ளு
- கண்ணன், பிரசாந்தி சேகரம் - அடிசில் 2017
விடை :
பழைய சோறு - அது கிராமத்து உன்னதம்
நெல், வயலில் இருந்ததிலிருந்து, நீராவியில் வேகும் மணம் வரை புலன்களால் சுவைப்பது இன்பம். நெல்லை அவித்து காயவைத்துக் குத்திய புழுங்கல் அரிசையைச் சோறாகுமுன் மென்று தின்பதும் சுவையானது. பகலில் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் நீரில் ஊறிய பின் அதன் பெயர் பழையசோறு
அல்லது பழையது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன் நீராகரம் போல் குடிக்கலாம். அச்சோற்றுடன் வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காயுடன் உண்ணலாம். சுண்ட வைத்தக் குழம்புடன் உண்பதின் சுவையே தனி. நல்ல பழையது மாம்பழ வாசம் வீசும் என்பார்கள்.
************* ************** ***********
கதையாக்குக
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக...
இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
விடை :
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒரு சிறுவனை நாங்கள் எங்கள் வீட்டிற்கே அழைத்து
வந்துவிட்டோம். அச்சிறுவனின் தாய், தந்தை சுனாமியால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவனுடைய அண்ணனும் எங்குச் சென்றான் என்றே தெரியவில்லை. அச்சிறுவன் மட்டுமே அக்குடும்பத்தில் தப்பினான். நான் என் பெற்றோருடன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களைக் காணச் சென்றேன்.
அங்கு இச்சிறுவனுக்கு யாரும் இல்லையென்பதை அறிந்து நான் என் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவனை என்னுடன் என் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டேன். நான் படிக்கும் பள்ளியிலேயே
அவனைச் சேர்த்துவிட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வோம். தொடக்கத்தில் அவன் என்னிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் தயங்கினான். நாளாக நாளாக என் உடன் பிறந்த சகோதரனாகவே மாறிவிட்டான். அவனுடைய பெற்றோரையோ அண்ணனையோ இழந்துவிட்டோமென்ற எண்ணம்கூட
அவனுக்கு வந்ததில்லை. இந்நிலையில் ஒருநாள் அவன் என்னிடம் மனம் விட்டுப் பேசினான். அவனுடைய மகிழ்ச்சிக்கு நான்தான் காரணம் என்று மனம் நெகிழ்ந்து பேசினான். அன்று நான் மகிழ்ந்ததற்கு எல்லையே இல்லை.
**************** *************** **********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments