பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - மொழியோடு விளையாடு - பாடப்பகுதி வினாக்களும் & விடைகளும்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2 , இயற்கை 

மொழியோடு விளையாடு 

பாடப்பகுதி வினா & விடை



**************    ************    ************

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

( காடு , புதுமை , விண்மீன் , காற்று , நறுமணம் ) 

1 ) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும் ; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

விடை  : நறுமணம்

2 ) பழமைக்கு எதிரானது - எழுதுகோலில் பயன்படும்.

விடை : புதுமை.

3 ) இருக்கும்போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை.

விடை  : காற்று.

4 ) நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விடை : விண்மீன்.

5 ) ஓரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம்.

விடை : காடு.

****************    *************   ***********

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

விடை : காற்றின் பாடல்.

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

விடை : மொட்டின் வருகை.

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன்  வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

விடை : மிதக்கும் வாசம்.

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்: மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

விடைஉயிர்ப்பின் ஏக்கம்.

5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும்மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

விடை : நீரின் சிலிர்ப்பு.

6. குயில்களின் கூவலிசை, புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.

விடை : வானத்தின் நடனம்.

**************    **************   ***********

அகராதியில் காண்க

1. அகன்சுடர் - ஞாயிறு

2. ஆர்கலி  -  கடல்

3. கட்புள்- ஒரு கண் பார்வையுடைய காகம்

4. கொடுவாய் - வளைந்த வாய்

5 . திருவில் - வானவில்

***********    ***************   *************

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.




மரமே ! 

இயற்கை தந்த வரமே !

உன் அருமை தெரியாமல்

பலம் கொண்டமட்டும்

வெட்டி வீழ்த்தினோம் !

இப்போது நாங்கள் பலவீனமானபின்

உன்னைக் குடுவையில் அடைத்து

சுவாசித்து வாழ்கிறோம்.

மரம் நடச்சொன்னபோதெல்லாம்

உன் மகத்துவம் அறியாத 

எங்கள் மனம் 

இப்போதுதான் விழித்திருக்கிறது.

இனி , 

மரங்களுடன் கரம் கோர்த்து , 

இருக்கும் மரங்களைக் காத்து 

சுத்தமான காற்றைப் பெற்று

சுகமாய் வாழ்வோம் !

உருளைக்குள்  மட்டுமல்ல ...

உலகெங்கும் இனி நீ உலவு.

மு.மகேந்திர பாபு.

*************    **************    ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments