எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 23 - இயல் 6 - மதிப்பீடு - எழுத்து & காட்சிப்பதிவாக / 6 TAMIL - WORKSHEET - 23 QUESTION & ANSWER

 எட்டாம் வகுப்பு - தமிழ்   - இயல் - 6

பயிற்சித்தாள் - 23   -  மதிப்பீடு




**********************   *******************

1. மூவேந்தர் குறித்த செய்தி இடம்பெறாத நூலைத் தேர்ந்தெடுக்க.

அ) மகாபாரதம்

ஆ) ஆசியஜோதி

இ) வால்மீகி இராமாயணம் 

ஈ) அர்த்தசாத்திரம்

விடை ஆ ) ஆசியஜோதி


2. சரியானதைத் தேர்தெடுத்து எழுதுக.

மண் + அளவு = மண்ணளவு என்பது,

அ )உயிரீற்றுப்புணர்ச்சி 

ஆ) மெய்யீற்றுப்புணர்ச்சி

இ) மெய்முதல் புணர்ச்சி

ஈ) இயல்பு புணர்ச்சி


விடை அ) உயிரீற்றுப் புணர்ச்சி


3. கீழ்க்காணும் சொற்களைக்கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.

(சேரநாடு , கப்பற்படை, முசிறி, உள்நாட்டு வணிகம், தத்தம்)

கடல்வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. சேரர்கள் வலிமை   மிகுந்த கப்பற்படை - வைத்திருந்தனர். முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகமாக விளங்கியது. சேரநாட்டில் உள்நாட்டு வணிகம் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து   தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர்.

4. கீழ்க்காணும் சொற்களைக்கொண்டு தொடர் அமைக்க.

அ) மூவேந்தர் : பண்டைய தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டனர்.

ஆ) திரைகடல்

திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டும்.

இ) தேயிலைத் தோட்டம்

நீலகிரி, தேயிலைத் தோட்டம் நிறைந்த மாவட்டம் ஆகும்.

5. பொருத்துக.

வ.எண்       சொல்                           விடை

அ ) முருங்கைச்செடி - தோன்றல் விகாரம்

ஆ ) கொல்லிமலை - இயல்பு புணர்ச்சி

இ ) கடற்போர் - திரிதல் விகாரம்

ஈ  ) பண்டமாற்று - கெடுதல் விகாரம்


6. கீழ்க்காணும் சொற்களிலுள்ள இயல்புபுணர்ச்சிச் சொற்களை எடுத்தெழுதுக.

கலையழகு, பழனிமலை, பூச்செடி, பொன்மாடம் , பின்னலாடை, கொடிமரம், பந்தாட்டம், காய்கறி

விடை:

1. பழனி மலை 2. பொன் மாடம்

3 .கொடிமரம் 4. காய்கறி


7, உரைப்பகுதியில் அமைந்துள்ள வினைமுற்றுகளை எடுத்தெழுதுக.

தென்னந்தோப்பில் தென்றல் வீசியது. மகிழ்ந்த காளைக்கன்று துள்ளி   விளையாடியது. மாமரக் கிளையில் அமர்ந்து குயில்கூவியது. அதைக் கேட்ட மயில் அகவியது, காகம் கரைந்தது.

விடை: 1. வீசியது 2. விளையாடியது 

3. கூவியது 4. அகவியது 5. கரைந்தது.

8. கீழ்க்காணும் தொடர்களை மாற்றுக,

அ) ஆ! இராமு கீழே விழுந்து விட்டானே! (செய்தித் தொடராக்குக)

விடை: இராமு கீழே விழுந்விட்டான்.

ஆ) கயல்விழி சென்னை சென்றாள். (வினாத் தொடராக்குக)

விடை: கயல்விழி எங்கு சென்றாள்?

இ) மனிதநேயம் வளரட்டும். (விழைவுத்தொடராக்குக)

விடை: மனித நேயம் வளருங்கள்.

9 ) ' கற்பாறை '  - இச்சொல்லைப் பிரித்துப் புணர்ச்சியை விளக்குக.

விடை - கல் + பாறை = கற்பாறை - திரிதல் புணர்ச்சி. காரணம் ல் என்ற எழுத்து ற் ஆக மாறியுள்ளது.

**********************   ********************


வணக்கம் நண்பர்களே ! மேலே உள்ள பயிற்சித்தாள் வினாக்களை எளிய விளக்கத்துடன் நேரடிக் காட்சிப் பதிவாக கீழே உள்ள காணொலியில கண்டு மகிழலாம்.





********************   ***********************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.



GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

அழைத்து மகிழ - 97861 41410








Post a Comment

0 Comments