என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகச் சுட்டுகிறார்.
*********************** ******************
அன்னை மொழியே - கவிதைப்பேழை - பாடல் இனிய எளிய விளக்கம் - பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்.
நெடுவினா
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அனைவருக்கும் வணக்கம்! நம் உயிரினும் மேலானது நம் தமிழ் மொழி , செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது என்று பாரதியும் , தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாரதிதாசனும் கூறுகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க தமிழகத்தில் நம் தமிழ் மொழியின் சிறப்புகளை பேராசிரியரின் பாடலையும் , பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலையும் ஒப்பிட்டு இங்கே மேடைப் பேச்சாய் நிகழ்த்த வந்துள்ளேன்.
தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப் பாட இனிமை பிறக்கும். தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது. மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயைவாழ்த்தியமையைப் பார்ப்போம்.
பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும்
அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வதுபோல் தமிழ்த்தாயும் எல்லாத் திசைகளிலும்
புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து
நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார். அதனையே
ஐம்பெருங்காப்பியங்களாய் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்கிறார்.
உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார். பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்.
சுந்தரனார் தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப் பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது
என்கிறார். மேலும் “வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்.
சுந்தரனார் தமிழே, தமிழாகியபெண்ணே, தாயே உன்னைவாழ்த்துகிறேன் என்கிறார். பெருஞ்சித்திரனார், எம் தனித்தமிழே! உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் என்று
பாடியுள்ளார்.
இவ்வாறு மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனர்.
****************** ***********************
கூடுதல் வினாக்கள்.
பலவுள் தெரிக
1. கீழ்க்காணும் நூல்களில் குழுவில் பொருந்தாத நூல் எது?
ஒழுக்கத்தைச் சுட்டும் 'திணை' என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை' என்னும் பெயர் பெற்றது.
(ii) குறுந்தொகை - குறுமை + தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாகஇருப்பதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.
(iii) ஐங்குறுநூறு : ஐந்து குறுமை + நூறு = ஐங்குறுநூறு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்டதால் “ஐங்குறுநூறு
எனப் பெயர் பெற்றது.
(iv) பதிற்றுப்பத்து : சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய தொகுப்பு நூலாகும்.ஒரு மன்னருக்கு பத்து பாடல்கள் என்னும் முறையில் நூறு பாடல்களைக் கொண்டுள்ளதால்
பதிற்றுப்பத்து' எனப் பெயர் பெற்றது.
v ) பரிபாடல் : வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பல வகைஅடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் ஓசையையுடைய பரி பாட்டுகளின் தொகுப்பாகவிளங்குவதால் இது ‘பரிபாடல்' என்று அழைக்கப்படுகிறது.
(vi) கலித்தொகை : ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பானஅமைப்புகளையும், கொண்ட கலிப்பாக்களால் அமைந்த நூலாதலால் கலித்தொகை எனப் பெயர்
பெற்றுள்ளது.
(vii) அகநானூறு : அகம் + நான்கு + நூறு - அகநானூறு. அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக்கொண்ட நூல் என்பதால் 'அகநானூறு' எனப் பெயர் பெற்றது.
(viii) புறநானூறு : புறம் + நான்கு + நூறு - புறநானூறு. இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக்கொண்ட நூல் என்பதால் ‘புறநானூறு' எனப் பெயர் பெற்றது.
******************** ***********************
“எந்தமிழ் நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில்ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.
உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும்எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறதுநம் தமிழ் மொழி.
அந்தளவிற்கு தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவேபேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜி.யூ.போப்., தமிழை நன்கு கற்று அதன்சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்”
என்று பொறிக்கச் செய்தார்.
உலகின் மூத்த மொழி தமிழ்மொழி மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக்காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம்
முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும்
இல்லையென பெருமையாக எடுத்துரைப்பேன்.
எந்தன் தமிழின் பெருமையை உலக அரங்கு முழுக்க எடுத்துரைப்பேன் அதுவே நான் செய்த பாக்கியம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.
2 Comments
சிறப்பு
ReplyDeleteNot much 😞😟
ReplyDelete