வகுப்பு 11 - வணிகவியல்
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளி
1 ) பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ----- என்று பெயர்.
அ ) அங்காடி
ஆ ) சந்தை
இ ) நாளங்காடி
ஈ ) அல்லங்காடி
2 ) இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது.
அ ) போக்குவரத்து
ஆ ) பண்டகசாலை
இ )விற்பனையாளர்
ஈ ) காப்பீடு
3 ) அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
அ ) கௌடியல்யர்
ஆ ) சாணக்கியர்
இ ) திருவள்ளுவர்
ஈ ) இளங்கோவடிகள்
II ) குறுவிடை வினாக்கள்
4 ) பண்டமாற்று முறை என்றால் என்ன ?
5 ) நாளங்காடி என்றால் என்ன ?
6 ) அல்லங்காடி என்றால் என்ன ?
III ) சிறுவிடை வினாக்கள்
7 ) வணிகம் பொருள் தருக.
8 ) மருவூர்ப்பாக்கம் மற்றும் பட்டினப் பாக்கம் - விளக்குக.
9 ) பண்டைய தமிழ் நாட்டின் வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன ?
10 ) பாண்டியர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட துறை முகங்கள் யாவை ?
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments