ஆறாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 1 - 6th Tamil Worksheet 1 - இயல் 1 - இன்பத்தமிழ் - வினா & விடை


ஆறாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் 1 - 

6th Tamil Worksheet 1 - 

இயல்  1 - இன்பத்தமிழ் - வினா & விடை



பருவம்-1 - பயிற்சித்தாள் -1

கவிதைப்பேழை இன்பத்தமிழ் - இயல்1

1..பிரித்து எழுதுக.

அ) அமுதென்று- அமுது + என்று

ஆ) மணமென்று - மணம் + என்று

2 கோடிட்ட இடத்தை நிரப்புக.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ்  இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

3. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

தமிழ் நிலவென்று எங்கள் பேர் - சமூகத்தின்
தமிழுக்கு இன்பத் விளைவுக்கு நீர்.

விடை:

தமிழுக்கு நிலவென்று பேர் - - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

4. பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளை எழுதுக.

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்.

விடை:

மணமென்று - வாசமென்று

நிருமித்த  - உருவாக்கிய


5. கீழ்க்காணும் பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களை எடுத்தெழுதி எதிர்ச்சொல் எழுதுக.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்.

விடை : இளமை × முதுமை
                இன்பம் × துன்பம்
                நல்ல      × தீய
                 புகழ்      × இகழ்

6. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

அ ) உயிருக்கு - வேர் 
ஆ) விளைவுக்கு – நீர்
இ) புலவர்க்கு - வேல்
ஈ ) வயிரத்தின் - தேன் -

விடை:

அ) உயிருக்க - வேர்
ஈ) வயிரத்தின் - தேன்

7. கீழ்க்காணும் குறிப்புகள் யாரை எனக் குறிப்பிடுக.

சுப்புரத்தினம் - புரட்சிக்கவி - பாவேந்தர்

விடை: பாரதிதாசன்

8. சரியா? தவறா?

அ) தமிழ், தமிழர்களின் உயிருக்கு நேர் -  ( சரி )

ஆ) தமிழ், புலவர்களுக்கு வாளைப் போன்றது.  ( தவறு )

9. தொடரில் அமைத்து எழுதுக.

அ) அமுது

தமிழுக்கு அமுது என்று பெயர்.

ஆ) தமிழ்

தமழ் மிகவும் தொன்மையான மொழி ஆகும்.

10 ) கீழ்க்காணும் பாடலடிகள் உணர்த்தும் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்-இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்.

விடை:

தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத் தமிழ் எங்கள் சோர்வை நீக்கிஒளிரச் செய்யும் தேன் போன்றது.

********************   ********************

மேலே உள்ள வினாக்களுக்கான விடையை எளிமையான விளக்கத்துடன் காட்சிப்பதிவில் கண்டு மகிழலாம்.




வாழ்த்துகள் மாணவ நண்பர்களே ! விடுமுறையில் அமிழ்தத் தமிழை அகம் நிறைந்து கற்போம் !

வாழ்த்துகளுடன்,

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410



Post a Comment

0 Comments