ஒரு காலை நேர கிராமத்துப் பேருந்தில் ......
@ ஒவ்வொரு நிறுத்தத்திலும்
நின்று நின்று
செல்லும் டவுன் பஸ் .
@ சட்டுன்னு இறங்கித் தொலையேன் ....
ஒன்னாருபா டிக்கெட் எடுத்திட்டு
நடுவுல போய் நிக்கலாட்டி என்ன ?
ஸ்டாப் வந்த உடன்
வாசலுக்குப் பக்கத்தில வந்து
நிக்க வேண்டியதானே ?
கண்டக்டரின் கண்டிப்பு
சில வேளைகளில் ....
@ ஸ்டாப் கடந்தும்
மெதுவாய்
உருட்டிக் கொண்டே
போகும் டிரைவர் .
@ வேகமா மிதிச்சா
கால்ல என்ன
தேளா கொட்டிரப் போகுது ?
தனக்குத் தானே
முனகும் பயணி .
@ வீட்டிலிருந்து
அவசரமாய் ஓடி வந்து ,
சட்டையை கையில்
வைத்துக் கொண்டு
பஸ்ஸில் ஏறி ,
சட்டை மாட்டும் பயணி .
@ இவ்வளவு நேரம் வரைக்கும்
வீட்ல செரச்சிக்கிட்டு
இருந்தான் போல ...
அருகில் உள்ளவரிடம்
காதைக் கடிக்கும் ஒருவன் .
@ கால் வைக்க முடியாதபடி
கூட்டம் இருந்தாலும்
முண்டியடிக்கும் கல்லூரி மாணவர்கள் ,
தங்கள் புத்தகங்களை
உட்கார்ந்திருக்கும்
சக கல்லூரிப் பெண்களிடம்
இளித்தவாரே கொடுப்பது .....
@ இதே சோலியாப்
போச்சு இவங்களுக்கு .....
@ ரெண்டு ரூபா டிக்கெட்டுக்கு
நூறு ரூபா எடுத்து
நீட்டும் ஒருத்தர் .
''வீட்ல இருந்து சில்லரை
கொண்டு வந்தா என்ன
தேஞ்சா போயிருவ ?''.....
@ எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு
கெடா குட்டியை விக்க ,
தன் கால் இடுக்கில்
வைத்திருக்கும் ஒருவன் .
@ கூட்டம் கண்ட மிரட்சியில்
சிறுநீரும் ,புழுக்கையும் போட...
விட்டா....மாட்டையும்
ஏத்துவாங்க போல ...ச்சே ....
@ பஸ் ஸ்டாண்டில்
பஸ் நின்றவுடன் ,
வேகமாய் இறங்கி ஓடும்
என் கால்கள் .....
புறப்பட்டுக் கொண்டிருக்கும்
அடுத்த பஸ்ஸ பிடிப்பதற்கு ...
@ இவ்வளவு வேகமா
ஆளத் தள்ளிவிட்டு இறங்கி ,
மயித்துல மலையைக் கட்டி
இழுக்கப் போராம் போல .....
என் மனம் எனக்கே சொல்லும் .....
மு.மகேந்திர பாபு
4 Comments
Arumai superb
ReplyDeleteஅருமை அருமை ஐயா. அனுபவம் சிறப்பு... எனக்கும் ஏற்பட்டது. மகிழ்ச்சியான பயணம்.
ReplyDeleteஎன்ன ஒரு அனுபவம் சூப்பர்
ReplyDeleteஎன்ன ஒரு அனுபவம் சூப்பர்
ReplyDelete