கோடை விடுமுறையும் , குடும்ப விவாதமும்

 கோடை விடுமுறையும் ,குடும்ப விவாதமும் 


கோடை விடுமுறைக்கு 

குற்றாலம் செல்வோம் என்கிறாள் மகள் .

கொடைக்கானல்,ஊட்டி 

செல்வோம் என்கிறான் மகன் .

திருசெந்தூர் ,பழனி 

செல்வோம்  என்கிறாள் மனைவி .

புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறான் 

கணவன் .


ஹாய்...டாட் ...

சம்மர் வெகேசன்க்கு 

சிங்கப்பூர் ,மலேசிய வேண்டாம் 

பாரிஸ் போகலாம் என்கிறாள்  மகள் .

லண்டன் போலாம் என்கிறான்   மகன் .

ஆஸ்திரேலியாவில் உள்ள தன 

சிஸ்டர் வீட்டிற்குப் போலாம் 

என்கிறாள் அம்மா .

எனி ஒன ஒ.கே என்கிறார் அப்பா .


லீவுக்கு விறகு பொறுக்க போ 

என்கிறாள் அம்மா .

செங்கல் சூளைக்கு போ 

என்கிறார் அப்பா .

வெயிலுக்குள்ள படிக்கிற புள்ள 

எதுக்கு  ?

தீப்பெட்டி ஆபிஸ் போ 

என்கிறான் அண்ணன் .


இப்படியாக விவாதம் 

நடக்கிறது 

அவரவர் வீட்டில் .


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments