வயலும் வாழ்வும்
பௌர்ணமி நாளின்
இரவொன்றில்
குடும்பத்தினரோடு
வயலுக்குச் சென்று ,
கருக்கரிவாளால் நெற்கதிர்களை
விடிய விடிய ஏதோ ஒரு கதைபேசி
அறுத்துவிட்டு ,
பகல் முழுவதும் கதிரடித்துவிட்டு ,
இரவில் பிணையல் மாடுகளால்
சூட்டடி நெல்லை நசுக்கவிட்டு
பரபரப்பாய் வேலை பார்த்த
நினைவுகள்தான் நெஞ்சில்
மோதிச்செல்கின்றன இப்போது.
வீடுகளாகிவிட்ட வயல்களைப் பார்க்கும்போது !
மு.மகேந்திர பாபு
0 Comments