பேருந்து பயணத்தில்...
தம்பி ... இங்க வாங்க , இப்டி உக்காருங்க ...
எந்த ஊரு தம்பி நீங்க ? அப்டியா ? நான் இந்த ஊரு. என்ன படிக்கிறிங்க ? ஓகோ வேலயா பாக்குறிங்க ?
இப்படியெல்லாம் இப்போது உரையாடல்களைக் கேட்க முடிவதில்லை பேருந்தில். உட்கார இடம் கிடைத்ததும் அவரவர் கையடக்க செல்போனை எடுத்து அடக்கமாகி விடுகிறார்கள் வாட்சாப்பிற்குள்ளும் , முகநூலிலும்.
தோளைத் தட்டி , நடத்துனர் பயணச் சீட்டுக்கு பணம் கேட்கிறார். தான் இறங்க வேண்டிய நிறுத்தம் கடந்த பிறகு கத்திக் கொண்டே பேருந்தை நிறுத்தச் சொல்கிறார் ஒருவர்.
ஒரே பேருந்திற்குள்தான் அறுபது பேரும் இருக்கிறார்கள் தனித்தனித் தீவுகளாக !
ஓட்டுநரையும் , நடத்துனரையும் தவிர்த்து.
மு.மகேந்திர பாபு.
0 Comments