ஆழ்துளைக்கிணறு - விழிப்புணர்வுப் பாடல்.
பாடல் - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு.
மூடுங்க உடனே மூடுங்க
மூடுங்க அண்ணே மூடுங்க
தோண்டிவச்ச ஆழ்துளை கிணறத்தானே மூடுங்க
தேடுங்க உடனே தேடுங்க
திறந்திருக்கும் குழிகளைத்தான் தேடுங்க ...
குடும்பம் காக்க வந்த குலவிளக்கு ... நம்ம குலவிளக்கு
குழிக்குள்ளே போகலாமா ?
வீணாகச் சாகலாமா ?
நூறாண்டு வாழுகின்ற பச்சமண்ணு
ஈராண்டில் இறக்கலாமா ? குழிய மூட மறக்கலாமா ?
( மூடுங்க...)
அஞ்சு நிமிசம் கூட பிரியாது பெத்த மனம்
உன்னைப் பெத்த மனம் அது பித்து மனம்
வேர்த்தாலே விசிறி வீசும் பெத்த மனம்
இப்போ பார்த்தாலே பதறித்தான் போகுதைய்யா !
இருட்டான குழிக்குள்ள இருக்கின்றானே !
இதயத்தில் துடிப்பும்தான் இருக்குமாய்யா ?
மீண்டு வந்து மீண்டும் வந்து
அம்மானு சொல்லுவானா ? அப்பானு சொல்லுவானா ?
( மூடுங்க ...)
தண்ணீரைத் தருகின்ற குழிகள் எல்லாம்
கண்ணீரைத் தரலாமா ? கண்ணீரைத் தரலாமா ?
ஒத்த உயிர் போனாலும் இழப்புதானே ?
மத்த உயிர் போகாமல் காக்க வேணும் !
விழிப்பு வேணும் விழிப்பு வேணும் நண்பர்களே !
ஆழ்துளை கிணறையெல்லாம் மூடிடவே !
விழிப்பு வேணும் விழிப்பு வேணும் நண்பர்களே !
கவலையில்லா காலை ஒன்று விடிந்திடவே !
( மூடுங்க ...)
பாடலாக்கம்.
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
0 Comments