பெண் எனும் பெருந்தகை !

பெண் எனும் பெருந்தகை
           பாடல் - மு.மகேந்திர பாபு.

மாற்றம் வேண்டி புறப்பட்டு வந்தோம் !
ஏற்றம் பலவும் இன்றே தந்தோம் !
பொறுமை யோடு இருந்தும் வந்தோம் !
புரட்சிப் பெண்ணாய்ப் பெருமையும் தந்தோம் !

அடுப்படியில் இருந்தது அது அந்தக் காலம் !
அகிலம் போற்ற உலவுவது இந்தக் காலம் !
காக்கிச் சட்டையில் காப்பதும் நாங்கதான் !
கலெக்டராகி கனவை நனவாக்குவதும் நாங்கதான் !

மண்ணைக் கீறி பயிரும் செய்தோம் !
விண்ணில் ஏறி வெற்றியும் கொய்தோம் !
வீட்டில் இருந்து விளக்கும் வைத்தோம் !
நாட்டை ஆண்டு நன்மையும் செய்தோம் !

மிரட்சி யோடு இருந்ததெல்லாம் அன்று !
புரட்சி செய்து வாழ்கின்றோம் இன்று !
பூவுலகை அன்பினாலே தினம் வென்று !
மூவுலகை ஆட்சி செய்வோம் நின்று !

Post a Comment

0 Comments