சங்கம் வச்சு - பாடல் - மு.மகேந்திர பாபு.
சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த மதுரதானடா - என்றும்
தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !
எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு! - இங்க
சிங்கம்போல நடையைத் தினமும் நீயும் பாரு
முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக ! - நாங்க
முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !
வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம்தான்டா ! - இது
மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தான்டா !
மாதங்களால் அழகு பெறும் வீதிதான்டா - இங்கு
மனசு நிறையக் கொட்டிக் கிடக்கு சேதிதான்டா !
மலை இருக்கும் இடங்களெல்லாம் கலை இருக்குமே - இங்க
சினம் இருக்கும் மனங்களிடம் குணம் இருக்குமே !
நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக்கூட - எங்க
கூடச்சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆட !
ஆட்டம் என்றாலும் பாட்டம் என்றாலும்
மனசு விடிய விடியக் கூத்துதானடா !
- சங்கம்
எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்
நட்பும் கற்பும் ஒன்னுதான்
நாங்க அடிச்சிடுவோம் பாட்டாலே
பிடிச்சிருவோம் கூட்டாளி
போகுது பார் மலர்க்கொடி
இங்கு பறக்குது பார் மீன்கொடி
குடிக்கனுன்டா ஜிகர்தண்டா !
இங்க படிக்க வந்தா பவர்தான்டா !
பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்கதான்டா !
சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்கதான்டா !
தலைகளாலே நிறைஞ்சிருக்கு தமுக்கம் பாரு
இந்தத் தரணியில மதுர போல இருக்கா ஊரு ?
மதுரயின்னா மல்லிகைப் பூ வாசம் வீசும்
மதுரக்காரன் பாசம்னா நாடே பேசும்
ஜல்லிக்கட்டு காளைபோல துள்ளிக் குதிப்பான்
கபடியினு வந்துபுட்டா கில்லி அடிப்பான்
ஏடு மறைஞ்சாலும் வீடு மறைஞ்சாலும்
உலகை ஆளும் தமிழன் நாங்க தானடா !
- சங்கம் வச்சு ...
0 Comments