அரசுக்கு நன்றி - பாடல் - மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

 

அரசுக்கு நன்றி - பாடல்  - மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

பல்லவி

ஏழைப் பிள்ளை கனவு இன்று நனவானதே !
இல்லமெங்கும் மகிழ்ச்சி பூக்க சுகமானதே !
எதிர்காலம் வளமாக்க நம் அரசு வந்ததே !
ஏற்றம் கண்டு மாற்றம் பெற சலுகை தந்ததே !

சரணம் - 1

வீறு கொண்டு நடை போட சீருடைதானே !
சமத்துவத்தைக் காட்டிடும் ஓருடைதானே !
புத்தகங்கள் தூக்கிச் செல்ல பை கொடுக்குதே !
புதுமை கண்டு வளமை காண கை கொடுக்குதே !

ஏட்டைத் தந்து எழுதச் சொல்லும் அரசினாலே
நாட்டை நாமும் நாளை நன்றாய் ஆளலாமே !
வயிற்றுப் பசியைப் போக்கத் தினமும் உணவைத்தானே
வகை வகையாய்த் தந்து நம்மில் பாலை வார்க்குதே !

சரணம் 2

காலை மாலை சென்று வர இலவச பயணம்
பேருந்தில் பள்ளி செல்ல இலவச பயணம்
பதினொன்றாம் வகுப்பு பயிலும் போது மிதிவண்டிதானே !
விரும்பித் தினமும் பள்ளி செல்ல மிதிவண்டிதானே !

ஊக்கம் தந்து ஆக்கம் பெற உதவுது அரசு
ஊக்கத் தொகை தந்து நமக்கு உதவுது அரசு
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கணினிதானே !
பணக்காரரின் கணினி இன்று நம் கையில்தானே !

சரணம் 3

பெண்கல்வி ஊக்குவிக்க தங்கம் தானே !
தாலிக்குத் தங்கம் தானே !
பெருமையோடு சொல்வோம் நாம் அங்கம் தானே !
அரசின் அங்கம் தானே !

ஞாலம் உள்ள காலம் வரை நினைத்திருப்போமே !
சாதனைகள் படைத்து நாமும் நிலைத்திருப்போமே !
உதவி செய்யும் அரசோடு இணைந்திருப்போமே !
உள்ளமெங்கும் மகிழ்ச்சியாலே நனைந்திருப்போமே !

பாடல்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

Post a Comment

0 Comments