கனவு நாயகனுக்கு கவிதாஞ்சலி - மு.மகேந்திர பாபு.

 

கனவு நாயகனுக்கு கவிதாஞ்சலி

அக்னிச் சிறகொன்றின் வானம்
சுருங்கியதே !
அனைவரின் இதயமும் கண்ணாடியென  நொறுங்கியதே !
வானத்தை அளந்த தலைமகன் தூங்குகிறானோ ?
வாழ்க்கை கனவுகளை தந்தவன்
ஏங்குகிறானோ ?

கடல்காற்று பட்டதாலே கடல்கடந்தும் நின்றாயோ ?
கனவுகளை விதைப்பதற்கு  மாணவர்களிடத்தில் சென்றாயோ ?
விதைத்த விதை விருட்சமாய் வளருதையா !
விதைத்த நீ அறுவடைக்கு வருவாயோ ?

எளிமைக்கும் பெயருண்டு அதுஉம் பெயரே !
நாட்டின் ஏற்றத்தை நோக்கியது உம் உயிரே !
இராமேஸ்வரம் தந்த வரமன்றோ நீங்கள் !
இராஷ்டிரபதி பவனின் மூன்றாம் தமிழ் பூ நீங்கள்.!

குறள் வந்து விழுமய்யா உம் குரலில்
உடல் சோர்ந்து நீயும்தான் விழுந்ததென்ன ?
கடைசிப் பேச்சிலும் கனவுகளைத்  தந்தவனே !
தரணியெங்கும்  தமிழ் மகனாய்  வந்தவனே !

வழிகாட்டி மரமாய் பயணத்திலே வருவீர்கள்  !
எங்கள் வாழ்வெங்கும்  ஏற்றத்தைத் தருவீர்கள் !
கண்ணீரால் கலங்கி நின்றிட  மாட்டோம் !
கனவுகளை நிஜமாக்கி உங்களுக்குத்  தந்திடுவோம்  !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments