மழையாட்டாம் - பாடல் ( மு.மகேந்திர பாபு )

 

மழையாட்டாம் - பாடல்  ( மு.மகேந்திர பாபு )

சிங்காரச் சென்னை இப்போ மிதக்குது
சீற்றம் கொண்ட மழையினாலே தவிக்குது
சிறுமழைக்கே தாங்காத ஊருங்க - இப்போ
பெருமழைதான் பெய்ததே பாருங்க.

தாகம் கொண்ட  பூமி மேலே
மோகம் கொண்டு மேகம் ஊத்துது
காய்ந்து கிடந்த மண்ணும் மனசும்
பாய்ந்து சாய்ந்து கையை விரிக்குது !

மொதநாளில் சந்தோசம்தான் நின்னுச்சு - மழ
மூனாம் நாளில் சிலபேர கொன்னுச்சு
கடலூரு கடல்போல ஆனது - முன்பே
ஆறும் குளமும் காணாமத்தானே போனது !

ஆறும் குளமும் வீடாச்சு பாருங்க
அதாலே வீடெங்கும் வெள்ளக்காடாச்சு பாருங்க
வானிலையைப் பாக்கப் பாக்கத் தோணுது
நம்ம வாழ்நிலையோ தீவாகிப் போனது !

படகு போன ஆத்த இப்பக் காணோம்
ரோடே ஆறாக படகுதான் போனோம்
இயற்கை மேலே கையைவச்சா இயல்புதானே போகும்
இப்படியே போனா நம்ம நெலம என்னவாகும் ?

மக்கள் தொகை பெருகப் பெருக
நீர் நிலைய நாமதானே அழிச்சோம் ?
மழைத் தண்ணி வந்து வீடுபாய
மலங்க மலங்க மனசொடிஞ்சு முழிச்சோம் ?

மழையச் சபிக்கும் இரக்கமில்லாக் கூட்டமே !
ஆறு குளம் தேட எடு பெரு ஓட்டமே !
நாளைய சந்ததி நலமாக வேண்டுமே !
இருக்கின்ற இயற்கையைக்  காத்திட கைகோர்ப்போமே !

பாடலாக்கம்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர்.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments