மிரட்டி வந்த மழையில்
விரட்டி விளையாட ,
உச்சி முதல் உள்ளங்கால்வரை
உணர்வு ஜில்லிட ,
உடை களைந்து,
ஊர் முழுவதும் அலைந்து ,
தெருவெங்கும் மழைநீர் சேமிப்பு
தொட்டியென காட்சிதர ,
ஓலைக் குடிசையின்
ஓட்டை வழி
உள்வந்து உரையாடிய் மழைத்துளிகளின் நினைவுகளோடு
அப்படியேதான் இருக்கிறது
கிராமம் எந்த மாற்றமுமின்றி ,
அடிக்கடி பெய்த
மழை ஒன்றைத் தவிர !
மு.மகேந்திர பாபு
( புகைப்படம் - தோழர் ப.கவிதா குமார் )
0 Comments