மகனும் மகளும்
மணமாகிச் சென்றபின்னர்
இனி என்னோடும்
இம்மண்ணோடும்
இருக்கப் போவது
நீ மட்டும்தான் மரமே !
என்னுடலில் இணைந்திராத
மூன்றாவது கரமே !
உன் வளர்ச்சி
என் வளர்ச்சி .
மனங்களை விட
மரங்களே சிறந்தது என்பதை
உணர்ந்தேன் நான் முதுமையில் !
மு.மகேந்திர பாபு
படம் - Thambirasu Thambimarimuthu நண்பருக்கு நன்றி.
0 Comments