PG - TRB - தமிழ் - சங்க இலக்கியம் - 3 , நற்றிணை - முதன்மைக் குறிப்புகள் / PG - TRB - TAMIL - SANGA ILAKKIYAM - 3 , NATRINAI - IMPORTANT POINTS

 

தமிழ் - முதுகலை

PG TRB - தமிழ்

7 , சங்க இலக்கியம்



3. நற்றிணை

நூற்குறிப்பு :

*எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் 'நல்' என்னும் அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே ஆகும்

* நற்றிணை பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பு நூல் ஆகும்.

* ஓரறிவு உயிர்களைக்கூட விரும்பும் உயரிய பண்பு விருந்தோம்பல்.   அறவழியில் பொருளீட்டல் முதலான தமிழர்தம் உயரிய பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூல் இது

* குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளுக்கும் பாடல்கள் உள்ளன.

* இதில் உள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும், பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை. (அதாவது, குறைந்தது ஒன்பது அடியிலிருந்து 12 அடி வரை பாடல்கள் அமைந்துள்ளன)

* இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி

*  நற்றிணைப் பாடல்கள் நானூறு பாடிய புலவர்கள் 275 பேர்.

* இதற்கு கடவுள்வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

* இந்நூலை 1915-இல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் முதன்முதலாகப் பதிப்பித்தார்.

***************   *************   *************

கல்விப் பணியில் ,

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் . மதுரை - 97861 41410 

YOU TUBE - GREEN TAMIL

**************    ***********   **************

Post a Comment

0 Comments