உ.வே.சா பிறந்த நாள் ( பிப்ரவரி 19 )
சிறப்புஇயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம்
திருமதி உமா மகேஸ்வரி,
முதுகலைத்தமிழாசிரியை & தலைமையாசிரியை
அ.மே.நி.பள்ளி,
சத்திரரெட்டியபட்டி, விருதுநகர்.
பைந்தமிழ் மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர், மதுரை.
1) உவே.சா. பெயர் விரிவாக்கம் -----
அ) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
ஆ) உலகனேரி வேங்கையன் சாமிநாதன்
இ ) உடுமலை வேலுச்சாமி சாமிநாதன்
ஈ) உத்தரமேரூர் வேங்கடப்ப சாமிநாதன்
விடை : அ) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
2) தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் உ.வே.சா. பெற்ற சிறப்புப் பெயர் ------
அ) தமிழ்க்கடல்
ஆ) பதிப்புச்செம்மல்
இ) தமிழ்த்தாத்தா
ஈ ) கவியோகி
விடை : இ) தமிழ்த்தாத்தா
3) உ.வே.சா. அவர்கள் பிறந்த ஆண்டு ----
அ) 1845
ஆ) 1855
இ ) 1865
ஈ ) 1875
விடை : ஆ) 1855
4) உ.வே.சா.தம் 17 ஆம் வயதில் ------
ஆதினத்தில் தமிழ் பயின்றார்.
அ) மதுரை ஆதினம்
ஆ) குன்றக்குடி
இ) திருப்பனந்தாள்
ஈ) திருவாவடுதுறை
விடை : ஈ) திருவாவடுதுறை
5) உ.வே.சா அவர்களின் ஆசிரியர் -----
அ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஆ) சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார்
இ) கும்பகோணம் சுப்பிரமணிய முதலியார்
ஈ) சேலம் சிங்காரவேலர்.
விடை : அ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
6) உ.வே.சா.ஆசிரியராகப் பணியாற்றிய
கல்லூரிகள் ------ , ------- ல் உள்ளன.
அ) மதுரை , நெல்லை
ஆ) கும்பகோணம் , சென்னை மாநிலக்கல்லூரி
இ) திருச்சி, தஞ்சை
ஈ) சேலம் , கோவை
விடை : ஆ) கும்பகோணம் , சென்னை மாநிலக்கல்லூரி
7) சீவகசிந்தாமணி நூலைப்
பதிப்பிப்பதற்குப் பெரிதும் துணையாக
இருந்தவர் ------
அ) தந்தை பெரியார்
ஆ) அறிஞர் அண்ணா
இ) சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்
இ) தீரர் சத்தியமூர்த்தி
விடை : இ) சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்
8) புறநானூற்றை உ.வே.சா.அவர்கள் -----
ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.
அ) 1890
ஆ) 1892
இ) 1894
ஈ) 1890
விடை : இ) 1894
9) உ.வே.சா. அவர்கள் எழுதிய வாழ்க்கை
வரலாற்று நூலின் பெயர் -----
அ ) என் சரித்திரம்
ஆ) தமிழர் வரலாறு
இ) தமிழ்மொழி வரலாறு
ஈ) தமிழ்ச்சரித்திரம்
விடை : அ ) என் சரித்திரம்
10) உ.வே.சா. அவர்களின் முயற்சியால் 1889 ஆம் ஆண்டில் ------ நூல் பதிப்பிக்கப்பட்டது.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
விடை : ஆ) பத்துப்பாட்டு
11) உ.வே.சா.உரை எழுதிய முதல் நூல் -----
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
விடை : ஆ) மணிமேகலை
12) சென்னைப்பல்கலைக்கழகம் உ.வே.சா. அவர்களுக்கு ------ பட்டம் வழங்கியது.
அ) மதிப்புறு முனைவர்
ஆ) தமிழ்ச்செம்மல்
இ) தமிழ்ப்பேரறிஞர்
ஈ) பதிப்புச்செம்மல்
விடை : அ) மதிப்புறு முனைவர்
13) உ.வே.சா.அவர்களுக்குப் பொருந்தாத
அடைமொழி எது?
அ) மகாமகோபாத்தியாய
ஆ) தக்ஷிண கலாநிதி
இ) மகாவித்துவான்
விடை : இ) மகாவித்துவான்
14) உ.வே.சா.பெயரில் சென்னையில்
நூலகம் அமைந்துள்ள இடம் ------
அ) அண்ணா நகர்
ஆ) கலைஞர் நகர்
இ) சைதாப்பேட்டை
ஈ) பெசன்ட்நகர்
விடை : ஈ) பெசன்ட்நகர்
15 ) உ.வே.சா அவர்கள் எழுதிய என் சரித்திரம் தொடர் இதழில் வெளிவந்தது.
அ ) கல்கி
ஆ) ஆனந்த விகடன்
இ) குமுதம்
ஈ ) கலைமகள்
விடை : ஆ) ஆனந்த விகடன்
16 ) சிலப்பதிகாரம் ----- ஆண்டில் உ.வே.சா.
அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
அ) 1892
ஆ) 1893
இ) 1894
ஈ) 1895
விடை : அ) 1892
17) இந்திய அரசு தமிழ்த்தாத்தா உ.வே.சா.
அவர்களுக்குச் செய்த சிறப்பு -----
அ ) அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தது
ஆ) சிலை அமைத்தது
இ) நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது
ஈ) நினைவு இல்லம் அமைத்தது
விடை : இ) நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது
18) உ.வே.சா.அவர்கள் பிறந்த
உத்தமதானபுரம் ----- மாவட்டத்தில்
தற்போது உள்ளது.
அ) தஞ்சாவூர்
ஆ) நாகைப்பட்டினம்
இ) திருவாரூர்
ஈ) திருச்சி
விடை : இ) திருவாரூர்
19 ) சீவகசிந்தாமணி நூலை உ.வேசா. அவர்களுக்குப் படிக்கக் கொடுத்தவர் -----
அ) மாயூரம் முன்சிப் வேதநாயகம்பிள்ளை
ஆ) முன்சிப் சேலம் இராமசாமி முதலியார்
இ) தண்டபாணிதேசிகர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
விடை : ஆ) முன்சிப் சேலம் இராமசாமி முதலியார்
20 ) சீவகசிந்தாமணி ----- காவியம்.
அ) சைவக்
ஆ) வைணவக்
இ) சமணக்
ஈ) பௌத்தக்
விடை : இ) சமணக்
0 Comments