திருவள்ளுவர் தினம்
சிறப்பு இயங்கலைத் தேர்வு
வினாக்களும் விடைகளும்
வினா உருவாக்கம்.
திருமதி.சிவலட்சுமி ரமேஷ்குமார் , ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர் ,
கள்ளக்குறிச்சி.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
மதுரை. - 97861 41410
**************** ************* **********
1) திருவள்ளுவர் தினம் இடம்பெறும் தமிழ் மாதம் ------
அ) தை
ஆ) மாசி
இ) சித்திரை
விடை : அ) தை
2) ஐ.நா சபையில் இடம்பெற்ற இரு
இந்தியர்கள் ------ -------
அ) திருவள்ளுவர் , பாரதியார்
ஆ) திருவள்ளுவர் , சர்தார் வல்லபாய் படேல்
இ ) திருவள்ளுவர், காந்தியடிகள்
விடை : இ ) திருவள்ளுவர், காந்தியடிகள்
3) அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள் என்று கூறியவர் ---
அ) இடைக்காடர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
விடை : இ) ஒளவையார்
4) ------ நாட்டின் கிரெம்ளின் மாளிகையில்
அணு துளைக்காத பெட்டியில் நமது
திருக்குறளும் வைக்கப்பட்டுள்ளது.
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இங்கிலாந்து
விடை : ஆ) ரஷ்யா
5 ) திருவள்ளுவர் , திருக்குறளில்
பயன்படுத்தாத உயிரெழுத்து
அ) ஒ
ஆ) ஔ
இ) ஆ
விடை : ஆ) ஔ
6) 1 முதல் 10 வரையிலான எண்களில்
திருவள்ளுவர் பயன்படுத்தாத எண்
அ) 7
ஆ) 8
இ) 9
விடை : இ) 9
7) திருக்குறளில் இடம்பெற்ற
ஒரே ஒரு பழம் ------
அ) நெருஞ்சிப்பழம்
ஆ) நாவற்பழம்
இ) சீதாப்பழம்
விடை : அ) நெருஞ்சிப்பழம்
8) திருவள்ளுவரின் உருவப்படத்தை
வரைந்து தமிழக அரசுக்கு வழங்கியவர் ------
அ ) இராஜகோபால்
ஆ) வேணுகோபால்சர்மா
இ) ஞானவேல்
விடை : ஆ) வேணுகோபால்சர்மா
9 ) திருவள்ளுவரின் உருவப்படத்தை
வரைவதற்கு ஏற்பாடு செய்தவர் -----
அ) பாரதியார்
ஆ) சுரதா
இ) பாரதிதாசன்
விடை : இ) பாரதிதாசன்
10) பொதுமக்களுக்கு முதன்முதலாக
திருக்குறள் வகுப்பு நடத்தியவர் ------
அ) பெரியார்
ஆ) அண்ணா
இ) வள்ளலார்
விடை : இ) வள்ளலார்
11) திருக்குறளில் இரண்டு முறை
இடம்பெற்றுள்ள அதிகாரம் -----
அ) குறிப்பறிதல்
ஆ) கல்லாமை
இ) காலமறிதல்
விடை : அ) குறிப்பறிதல்
12) திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள மூன்று வடசொற்கள்
அ) படிறு , இலங்கு , செப்பம்
ஆ) ஆதி , பகவன் , பாக்கியம்
இ) வீவர் , கணிச்சி, தொடி
விடை : ஆ) ஆதி , பகவன் , பாக்கியம்
13 ) திருக்குறளில் அதிகம் விற்பனையான உரைநூல் ஆசிரியர் ----
அ) பரிமேலழகர்
ஆ) வீ.முனுசாமி
இ) மு.வரதராசனார்
விடை : இ) மு.வரதராசனார்
14) தமிழில் முதல் எழுத்தான அ - வில்
தொடங்கி கடைசி எழுத்தில் முடியும்
நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) மூதுரை
விடை : அ) திருக்குறள்
15 ) நரிக்குறவர்களின் மொழியான
வாக்ரிபோலி மொழியில் திருக்குறளை
மொழி பெயர்த்தவர் -----
அ) மல்லர்
ஆ) கிப்ட்சிரோமணி
இ) சலய்யா
விடை : ஆ) கிப்ட்சிரோமணி
16) திருக்குறளை வடமொழியில் மொழி
பெயர்த்தவர் ------
அ) கலியண் இராமானுஜ ஜீயர்
ஆ) வித்தியானந்தன்
இ) இராமலு
விடை : அ) கலியண் இராமானுஜ ஜீயர்
17) துணைக்கால்கள் இல்லாத
திருக்குறள்கள் மொத்தம் ------
அ) 38
ஆ) 31
இ) 35
விடை : ஆ) 31
18) வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ள
மாநகரம் -----
அ) மதுரை
ஆ) திருச்சி
இ) சென்னை
விடை : இ) சென்னை
19 ) திருக்குறளில் உதடு ஒட்டாத
திருக்குறள்களின் எண்ணிக்கை ------
அ) 24
ஆ) 25
இ) 26
விடை : அ) 24
20 ) குறளோவியம் என்ற நூலை எழுதியவர் -----
அ) சாலமன் பாப்பையா
ஆ) மு.வரதராசனார்
இ) மு.கருணாநிதி
விடை : இ) மு.கருணாநிதி
0 Comments