PG - TRB - TAMIL - 2005 - 2006 , ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு -

 

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2005 - 2006

வினாக்களும் விடைகளும் 

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2005 - 2006

QUESTION & ANSWER



***************   ************   ************

1 . திராவிட மொழிகளில் மிகப் பழமையான எழுத்துருவத்தைக் கொண்ட மொழி

A) தெலுங்கு

B) கன்னடம்

C ) துளு 

D) தமிழ்

2 . நன்னூலார் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் வகைகள்

A ) ஆறு

B) எட்டு

C) பத்து

D) பன்னிரண்டு

3 . பின்வருவனவற்றுள் ஓரெழுத்து ஒரு மொழியாக நின்று பொருள் தருவது

A) அ

B) ஆ

C) இ

D) எ

4 . தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை

A) 217

B) 227

C) 237

D) 247

5 . எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் உரைக்கும் நூல்கள் 

A) எட்டு

B) இரண்டு

C) மூன்று

D) எதுவுமில்லை

6 . தீர்மானம் செய்தலின் ஒருங்கிணைந்த பகுதி

A) திட்டமிடல்

B) இணைந்து செயலாற்றுதல்

C) மதிப்பிடல்

D) ஆய்வு செய்தல்

7 . ஏதேனும் ஒரு முடிவு அல்லது குறிக்கோளை அடைவதற்கு உதவும் உயர்தகவு என்பது

A) கருவிசார் உயர்தகவு

B) மரபுசார் உயர்தகவு

C) உள்ளார்ந்த உயர்தகவு

D) ஊக்குவிக்கப்பட்ட உயர்தகவு

8 .மக்கள் தேவைக்கேற்ற மற்றும் அவர்களது சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய கல்வி

A) முதியோர்க்கான கல்வி 

B) செயல்முறைக் கல்வி

C) தொழில்முறைக் கல்வி 

D) சூழ்நிலைக் கல்வி

9 . இந்தியாவிலுள்ள 'பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம்

A) வறுமை

B) மக்கள்தொகைப் பெருக்கம்

C) சூழ்நிலை பற்றிய எதிர்மாறான நம்பிக்கை

D) மக்களின் அறியாமை

10. சிறந்த கல்வியை அளிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும்தத்துவமான பங்களிக்கும் நீதி என்பது

A) சமூகக் கல்வி

B) பெண் சமத்துவத்திற்கான கல்வி

C) அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி

D) கல்வியில் சமவாய்ப்பு அளித்தல்

11. மருந்து பற்றிக் கூறாத நூல் இது

A) திரிகடுகம்

B) ஏலாதி

C) இன்னிலை

D) சிறுபஞ்சமூலம்

12. பக்தி இயக்கக் காலம் என்பது

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம் 

D) பல்லவர் காலம்

13. திராவிட வேதம் என்று கூறப்படுவது

A) திருவாய்மொழி 

B) திருமந்திரம்

C) திருக்குறள்

D) திருவிருத்தம்

14. சுந்தரர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ள திருமுறை

A) 1, 2, 3 ஆம் திருமுறை 

B) 4, 5, 6 ஆம் திருமுறை

C) 7-ஆம் திருமுறை 

D) 8-ஆம் திருமுறை

15. பெருங்காதையின் மூல நூல்

A) மகாபாரதம்

B) கம்பராமாயணம்

C) மத்தவிலாசப் பிரகசனம்

D) பிருகத்கதா

16. 'திராவிட சிசு' என்று அழைக்கப்படுபவர்

A) திருநாவுக்கரசர் 

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

17. சகஸ்ரநாமம் நிறுவிய நாடகக் குழுவின் பெயர்

A) சேவா ஸ்டேஜ் 

B) ஷண்முகானந்த சபை

C) சுகுணவிலாச சபை 

D) இயலிசை நாடக மன்றம்

18. மறைமலையடிகள் நடத்திய இதழ்

A) சுதேசமித்திரன் 

B) இந்தியா

C) சரஸ்வதி

D) ஞானசாகரம்

19. 'மாங்கனி' எனும் சிறுகாப்பியத்தை இயற்றியவர்

A) தேசிக விநாயகம் பிள்ளை

B) கண்ணதாசன்

C) வாணிதாசன்

D) வெ. இராமலிங்கம் பிள்ளை

20. தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்

A) லக்ஷ்மி

B) இராஜம் கிருஷ்ணன்

C) அனுத்தமா

D) ஆர். சூடாமணி

21. அன்பே சிவமென்றது

A) கபிலர்

B) சுந்தரர்

C) பரணர்

D) திருமூலர்

22. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களின் எண்ணிக்கை

A) 9

B) 19

C) 99

D) 109

23. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல்கள்

A) 1

B) 11

C) 6

D) 5 

24. கார்நாற்பதின் ஆசிரியர் சார்ந்திருந்த சமயம்

A) சைவம்

B) வைணவம்

C) பௌத்தம்

D) சமணம்

25. காரைக்காலம்மையாரின் இயற்பெயர்

A) குந்தவை

B) அமராவதி

C) திலகவதி

D) புனிதவதி

26. "அணைந்த மெழுகுவர்த்தி இன்னொரு மெழுகுவர்த்தியை
ஒளி ஏற்றாது” எனக் கூறியவர்

A) ஜவஹர்லால் நேரு

B) தாகூர்

C) சுவாமி விவேகானந்தா 

D) டாக்டர். இராதாகிருஷ்ணன்

27. திறனுள்ள பயிற்சி பெற்ற நபர்கள் வெளிநாடு செல்வதற்குப் பெயர்

A) மூளை வழிந்தோடல்

B) திறனுள்ளவர்களைச் சரியாகப் பயன்படுத்தாமை

C) கருத்துப் புயல்

D) தனிப்பட்ட நபரின் விருப்பம்

28. காந்திஜியின் கருத்தான ஆதாரக் கல்வியின் சிறப்பம்சம் யாதெனில்

A) தன்னைத்தான் அறிதல் 

B) சுய ஆதாரம்

C) சுய கற்றல்

D) தொழில் மையமானது

29. தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தத் தேவையானவற்றுள் முதன்மையானது

A) தேசிய நாட்களைக் கொண்டாடுதல்

B) மத ஒப்பீட்டினைப் போதித்தல்

C) தேசிய ஒருமைப்பாட்டுக்
 கூடாரங்களை அமைத்தல்

D) உணர்வுபூர்வமான ஒருமைப் பாட்டினைக் கொணர்தல்

30. கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை

A) குடியாட்சி

B) அறிவியல் சார்ந்தது

C) சமூகவியல் சார்ந்தது

D) அதிகரிக்கப்பட்ட எழுத்தறிவு தரம்

31. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்

A) பெரியாழ்வார் 

B) நம்பியாண்டார் நம்பி

C) நாற்கவிராச நம்பி 

D) நாதமுனி அடிகள்

32 தொல்காப்பியத்திற்கு முழுமையும் உரை எழுதிய உரை ஆசிரியர்

A) பேராசிரியர்

B) இளம்பூரணர்

C) நச்சினார்க்கினியர் 

D) சேனாவரையர்

33. சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை

A) 14

B) 41

C) 144

D) 114

34. சிற்றிலக்கியங்களின் வகை

A) 98

B) 89

C) 69

D) 96

35. கிறிஸ்துவக் கம்பர் என்று போற்றப்படுபவர்

A) வீரமாமுனிவர்

B) சாமுவேல் பிள்ளை

C) ஹெச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை

D) வேதநாயகம் பிள்ளை

36. மனித உரிமைக் கல்வியின் நோக்கம்

A) மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இவற்றை பயன்படுத்தும் வழிகளை ஏற்படுத்தல்

B) குடிமக்களை தங்களுடைய உரிமைக்குப் போராட தயார்படுத்துவது

C) ஏழைகள் மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களைப் பாதுகாத்தல்

D) குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லங்களை அமைத்தல்


37. ஒரு பெண் இரட்டைப் பொறுப்பு கொள்ள வேண்டியதன் காரணம்

A) அவள் ஒரு தாயும், ஒரு மனைவியுமாதலால்

B) அவள் ஒரு மனைவியும், ஒரு மருமகளுமாக இருப்பதால்

C) அவள் ஆட்சியும், சேவையும் செய்வதால்

D) அவள் வீட்டையும் காத்து, வருமானமும் ஈட்டுவதால்

38. ஒரு நல்ல தலைவரானவர்

A) பின்பற்றுகிறவர்களிடமிருந்து மனமுவந்தால் ஒத்துழைப்பைப் பெறுபவர்

B) பின்பற்றுபவரின் விருப்பத்திற்கேற்ப செயல்படுபவர்

C) எப்போதும் நேரம் தவறாதவர்

D) தாமதமாக முடிவுகள் எடுப்பவர்

39. கல்வியில் வழிகாட்டுதல் என்பது

A) வட்டத் துளைகளுக்கு ஏற்ற வட்ட முளைகளையே ஒதுக்கீடு செய்தல்

B) குறையறிதலும், உள்ளார்ந்த திறன்களை முன் கூட்டியே அறிதலும்

C) மாணவர்களைச் சோதித்தலும், அளவிடுதலும்

D) மாணவர்களைச் சமூக எதிர்பார்ப்பு களுக்கேற்ப தயார் செய்தல்

40. சமுதாயக் கல்வியின் நோக்கமாவது

A) சமுதாய மாற்றத்தின் உருவாக்கல் மட்டும்

B) வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்

C) சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் சமுதாய மாற்றத்தை உருவாக்குதல்

D) அறியாமையைப் போக்கல்

41 "உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படுவது

A) ஜுன் 5

B) ஜூலை 10

C) டிசம்பர் 8

D) மார்ச் 8

42 இந்தியாவில் முதன்முதலில் "பஞ்சாயத்து ராஜ்” என்ற அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்

A) பஞ்சாப்

B) இராஜஸ்தான்

C) தமிழ்நாடு

43. "பேக்கிங் சோடா”வின் வேதிப் பெயர்

A) சோடியம் கார்பனேட்

B) சோடியம் பைகார்பனேட்

C) சோடியம் நைட்ரைட்

D) சோடியம் நைட்ரேட்

44. "இரத்தம் உறைதலில்” எந்த வைட்டமின் உதவி புரிகிறது ?

A) A

B)'D

C) E

D) 'K


45. இந்தியாவின் தலைமை நீதிபதி

A) ஆர்.சி. லஹோதி 

B) சுபாஷன் ரெட்டி

C) ஜி.பி. பட்டநாயக்

D) ஏ.ஆர். லட்சுமணன்

46. 'கண்டதும் கேட்டதும்” என்ற உரைநடை நூலை எழுதியவர்

A) ஆறுமுக நாவலர்

B) உ.வே. சாமிநாதையர்

C) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

D) சி.வை. தாமோதரம் பிள்ளை

47. பஞ்சதந்திரக் கதையின் ஆசிரியர்

A) தாண்டவராய முதலியார்

B) செல்வக் கேசவராய முதலியார்

C) வ.வே.சு. ஐயர் 

D) பி.எஸ். இராமையா

48. 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலை இயற்றியவர்

A) டாக்டர். கைலாசபதி

B) எஸ். வையாபுரிப் பிள்ளை

C) கா. சிவத்தம்பி 

D) கோ. கேசவன்

49. கஜூராகோ கோயில்கள் அமைந்துள்ள மாநிலம்

A) ஆந்திரப் பிரதேசம் 

B) மத்தியப் பிரதேசம்

C) உத்திரப் பிரதேசம் 

D) கர்நாடகம்

50. 'மணிக்கொடி' எனும் பத்திரிகை தோன்றிய ஆண்டு

A) 1903

B) 1913

C) 1923

D) 1933

51 தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசிரியர்

A) ஆறுமுக நாவலர்

B) பண்டிதமணி மு. கதிரேகச் செட்டியார்

C) மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

D) கா.சு. பிள்ளை

52 இசைப் பேரிலக்கணம் என்று போற்றப்படும் நூல்

A) கருணாமிர்த சாகரம்

B) சர்வசமய சமரசக், கீர்த்தனை

C) தேவாரம்

D) திருவாசகம்

53. பிள்ளைத் தமிழில் உள்ள பருவங்கள்

A) பத்து

B) எட்டு

C ) ஆறு

D) ஒன்பது

54. இராமச்சந்திரக் கவிராயரிடம் தமிழ் பயின்ற கிறிஸ்துவர்

A) இரேனியஸ்

B) ஜி.யூ. போப்

C) எல்லீஸ் துரை

D) கால்டுவெல்

55. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் தலைமை சான்ற நூல்

A) சிவப்பிரகாசம்

B) சிவஞான போதம்

C) சிவஞானசித்தியார்

D) இருபா இருபஃது

56. போர் பற்றிய நூல்

A) நற்றிணை

B) பரிபாடல்

C) குறிஞ்சிப்பாட்டு 

D) கலிங்கத்துப் பரணி

57. பின்வருவனவற்றுள் ஒன்று இலக்கியங்களில் தூதாக
அனுப்பப்பட்டுள்ளது.

A) அன்னம்

B) புலி

C) கொக்கு

D ) கரடி 

58. விருத்தப்பாவால் இயன்ற காப்பியம்

A) பெருங்கதை 

B) வளையாபதி

C) சீவகசிந்தாமணி 

D) குண்டலகேசி

59, திவாகரம் எனும் நூல் எவ்வகையைச் சார்ந்தது?

A) சிறுகதை

B) நிகண்டு

C) நாடகம்

D) காப்பியம்

60. மனம் எனும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடும் சித்தர்

A) பாம்பாட்டிச் சித்தர் 

B) குதம்பைச் சித்தர்

C) அகப்பேய்ச் சித்தர் 

D) கடுவெளிச் சித்தர்

61 'ரப்பர்' எனும் நாவலின் ஆசிரியர்

A) ஜெகசிற்பியன் 

B) பொன்னீலன்

C) கி. ராஜநாராயணன் 

D) ஜெயமோகன்

62 தமிழில் முதல் சிறுகதையை எழுதியவர்

A) வ.வே.சு. ஐயர் 

B) புதுமைப்பித்தன்

C) கு.ப. ராஜகோபாலன் 

D) தி. ஜானகிராமன்

63. தமிழ்நாட்டின் மாப்பசான்

A) ஜெயகாந்தன் 

B) அசோகமித்ரன்

C) புதுமைப்பித்தன் 

D) பி.எஸ். இராமையா

64. தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர்

A) அண்ணா

B) ஜீவானந்தம்

C) திரு.வி.க.

D) பெரியார்

65. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி இவர் தலைமையின் கீழ் உருவானது

A) எஸ். வையாபுரிப்பிள்ளை

B) மு. இராகவையங்கார்

C) இரா. இராகவையங்கார்

D) டாக்டர். கைலாசபதி

66. தஞ்சைவாணன் கோவையை இயற்றியவர்

A) அருணந்தி சிவாச்சாரியார் 

B) பொய்யாமொழியார்

C) சிவஞான சித்தியார்

D) மெய்கண்டார்

67. கனவியல் எனும் நூலுக்கு இவர் எழுதிய உரையே மிகப் பழமையானது

A) நக்கீரர்

B) இறையனார்

C) நச்சினார்க்கினியர் 

D) பேராசிரியர்

68. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்

A) மணக்குடவர் 

B) பரிமேலழகர்

C) மயிலைநாதர்

D) டாக்டர். மு.வ.

69. பட்டினத்தார் சார்ந்திருந்த சமயம்

A) எதுவுமில்லை

B) வைணவம்

C) பௌத்தம்

D) சைவம்

70. இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் எழுத்துகளில் அச்சிடும் முயற்சி மேற்கொண்ட ஆண்டு

A) 1517

B) 1527

C) 1577

D) 1587

71. வடமொழி மிருச்சகடிகத்தை - மண்ணியல் சிறுதேர் என்ற நாடகமாக மொழி பெயர்த்தவர்

A) மறைமலையடிகள் 

B) மு. கதிரேசச் செட்டியார்

C) ஆறுமுக நாவலர் 

D] மு. இராகவையங்கார்

72. மு. வரதராசனாரின் இறுதி நாவல்

A) கரித்துண்டு 

B) அகல் விளக்கு

C) வாடாமலர்

D) கயமை

73. தமிழில் முதன்முதலில் ஞானபீடப் பரிசினைப் பெற்ற நாவலாசிரியர்

A) நா. பார்த்தசாரதி

B) டாக்டர். மு.வ.

C) கல்கி

D) அகிலன்

74. வரலாற்று நாவல் துறையின் தந்தை என்று போற்றப்படுபவர்

A) கல்கி

B) அகிலன்

C) சாண்டில்யன்

D) விக்கிரமன்

75. 'Novel' எனும் ஆங்கிலச் சொல் எம்மொழியிலிருந்து வந்தது?

A) கிரேக்கம்

B) இலத்தீன்

C) பிரெஞ்சு

D ) ஜெர்மன்

76. அடிநாவும் அண்ணமும் உறுதலால் பிறக்கும் எழுத்துக்கள்

A) க, ங

B ) ச , ஞ 

C) ட, ண

D ) த , ந

77. நா உறாமலே இதழால் பிறப்பவை

A) வ

B) த, ந

C) ப, ம

D) ல,ள

78. மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் கல்யாணபுரி, சந்திரகிரிஎன்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள பகுதியில்
வாழும் மக்கள் பேசும் மொழி

A) கன்னடம்

B) துளு

C) தெலுங்கு

D) கோலமி

79. தமிழிலக்கியத்தில் புதுக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர்

A) பாரதிதாசன்

B ) சுரதா

C) வாலி

D) ந. பிச்சமூர்த்தி

80. இரங்கலுக்குரிய அகத்திணை எது?

A) குறிஞ்சி

B) மருதம்

C) நெய்தல்

D) பாலை

81 சீறாப்புராணம் இயற்றுவதற்குப் பொருளுதவி செய்த வள்ளல்

A) சடையப்ப வள்ளல்

B) சீதக்காதி வள்ளல்

C) பனு அகமது மரைக்காயர்

D) முகம்மது உசேன்

82. ' அகர வரிசையில் சொற்களை அமைத்துப் பொருள் தரும் முறையாகிய அகராதி முறையில் முதன்முதலில் தமிழில் நூல் தந்தவர்

A) கால்டுவெல்

B) தத்துவபோதகர்

C) வீரமாமுனிவர் 

D) ஜி.யூ. போப்

83. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலை எழுதியவர்

A) தொல்காப்பியர் 

B) ஜி.யூ. போப்

C) கால்டுவெல்

 D) பவணந்தியார்

84. திறனாய்வினை இரண்டு வகைப்படுத்திக் கூறுபவர்

A) ஆபர் குரோம்பி 

B) வின்செஸ்டர்

C) யெஸ்பர்ஸன்

D) விக்டர் ஹியுகோ

85. ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் தரத்தை ஆய்வது

A) இலக்கியக் கொள்கை 

B) இலக்கியத் திறனாய்வு

C) இலக்கியக் கலை 

D) இலக்கிய மரபு

86. தமிழர் திருநாள் எனும் பெயரால் கொண்டாடப்படுவது

A) தீபாவளி

B) தமிழ்ப் புத்தாண்டு

C) பொங்கல்

D) கிறிஸ்துமஸ்

87. மகளிர் தினம் கீழ்க்கண்ட நாளில் கொண்டாடப் படுகிறது

A) மார்ச் 8

B) மார்ச் 18

C) மார்ச் 28

D) மே 8

88. 'திருப்பாவை ஜீயர்' என்று புகழப்பட்டவர்

A) பெரியாழ்வார்

B) பெரியவாச்சான் பிள்ளை

C) இராமானுஜர்

D) ஆண்டாள்

89. 'சொத்து' என்ற சொல் பின்வரும் திராவிட மொழிகளில் ஒன்று

A) தமிழ்

B) தெலுங்கு

C) கன்னடம்

D) மலையாளம்

90. 'பீரோ' என்ற சொல் பின்வரும் அயல் மொழியிலிருந்து நாம் பெற்றது

A) ஆங்கிலம்

B) டச்சு

C) பிரெஞ்சு

D) போர்த்துக்கீசியம்

91 இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு என்று கூறியவர்

A) வால்டர் பேட்டர் 

B) ஸ்பிங்கான்

C) வின்செஸ்டர்

D) விக்டர் ஹியுகோ

92 ‘வேதாரண்யம்' எனும் ஊரின் வரலாற்றுப் பெயர்

A) திருமறைக்காடு 

B) திருவாலங்காடு

C) திருபோரூர்

D) திருவள்ளூர்

93. கையிலுள்ள கம்பினை வீசி ஒலியெழுப்பி விளையாடும் விளையாட்டின் பெயர்

A) உறியடி

B) எருது கட்டு

C) சிலம்பாட்டம்

D) கிட்டிப்புள்

94. பிட்டுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் மாவட்டம்

A) திருச்சி

B) திருநெல்வேலி

C) தஞ்சாவூர்

D ) மதுரை

95. திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுப்புற தெய்வங்களுக்குக் கொண்டாடப்படும் விழா இவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) சாமி கும்பிடுதல் 

B) கொடை

C) பொங்கல் வைத்தல் 

D) காப்புக் கட்டுதல்

96. பிராகூய் மொழி பின்வரும் பகுதியில் பேசப்படுகிறது

A) இராஜஸ்தான் 

B) நாகாலாந்து

C) பலுசிஸ்தானம்

D ) ஒடிசா

97. தமிழர்கள் சங்க இலக்கியத்தைப் பின்வருமாறு குறிப்பார்கள்

A) பதினெண்மேற்கணக்கு

B) பதினெண்கீழ்க்கணக்கு

C) அகப்புற நூல்கள்

D) அற நூல்கள்


98. சந்திரகுப்த மௌரியன் காலத்தில் கிரேக்க தூதராக வந்தவர்

A) பிளைனி

B) தாலமி

C) யுவான் சுவாங்

D) மெகஸ்தனீஸ்

99. விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர்

A) சங்கரர்

B) இராமானுஜர்

C) திருமூலர்

D) இராமலிங்க அடிகளார்

100. வடமொழியில் மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை இயற்றிய அரசன்

A) மகேந்திரவர்மன் 

B) விஷ்ணுகுப்தன்

C) அதிவீரராம பாண்டியன்
 
D) நந்திவர்மன்

101. 'சாமான்' என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) தமிழ்

B) கன்னடம்

C) உருது

D) பாரசீகம்

102. சேர மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆழ்வார்

A) நம்மாழ்வார்

B) குலசேகராழ்வார்

C) திருமங்கையாழ்வார் 

D) பெரியாழ்வார் 

103. பலவகைப் பொருள் பற்றிப் பலவகைச் செய்யுள்களால் நூறு பாட்டுகள் அமைந்த நூல்

B) உலா

C) பிள்ளைத் தமிழ் 

D) கலம்பகம்

104. பேதைப் பருவம் என்பது

A) 5 வயதிலிருந்து 7 வயது வரை

B) 7 வயதிலிருந்து 9 வயது வரை

C) 12 வயதிலிருந்து 13 வயது வரை

D) 14 வயதிலிருந்து 19 வயது வரை

105. 'கோப்பை' என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) ஆங்கிலம்

B) போர்த்துக்கீசியம்

C) பாரசீகம்

D) சீனம்

106. டெல்லியில் உள்ள செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது?

A) ஷாஜஹான்

B) ஜஹாங்கீர்

C) ஔரங்கசீப்

D) அக்பர்

107. சீனா மற்றும் ஜப்பானில் வீசும் வெப்பமண்டல புயல் காற்றிற்குப் பெயர்

A) ஹரிகேன்

B) டொர்னேடோ

C) டைபூன்

D) வில்லி - வில்லீ

108. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

a) அன்னிபெசன்ட் 1. யங் இந்தியா

b) ஜி.சுப்பிரமணிய அய்யர் 2. தி ஹிந்து


c) மோதிலால் நேரு  3. நியூ இந்தியா

d) எம்.கே. காந்தி       4. இன்டிபெண்டன்ட்

குறியீடுகள்:

    a)     b)      c)      d)

A) 1      2        3        4

B) 3      4         2        1

C) 1       4         3         2

D) 3        2        4          1

109. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடம்

A) லண்டன்

B) பீஜிங்

C) சிட்னி

D) பாரீஸ்

110. ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டது?

A) மகாநதி

B) கோதாவரி

C) நர்மதை

D) ரவி

111. மக்கள் தொகைக் கல்வியின் முக்கிய நோக்கம்

A) மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது

B) குடும்பக் கட்டுப்பாட்டுக் கல்வியை அளித்தல்

C) சிறு குடும்பம் அமைக்க மக்களைத் தூண்டுதல்

D) குடும்ப மற்றும் உடல்நலக் கல்வியை அளித்தல்

112 மதிப்பு , தன்மதிப்பு தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றுவது என்பது

A) சாதனைகள் மூலமாக

B) சமூக இணைப்பின் மூலமாக

C) காப்புணர்ச்சி மூலமாக

D) தோல்வி மூலமாக

113. இலக்கியம், ஓவியம், இசை மற்றும் பிற நுண்கலைகள் யாவும் உருவாவதற்கு அடிப்படை

A) மீள் ஆக்கக் கற்பனை 

B) பயன்வழிக் கற்பனை

C) அழகுணர் கற்பனை 

D) பின்பற்றும் கற்பனை

114. நுண்ணறிவு சோதித்தல் என்பது பயன்படுவது

A) பாடத்திட்ட மாற்றத்திற்கு

B) கற்றுக் கொள்ளும் திறனைக் கண்டறிய

C) மாறுபாடுள்ள குழுக்களை ஒப்பிடுவதற்கு

D) அதிகப்படியான கற்பித்தலுக்கு

115. குழந்தையின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது

A) பயிற்சிகள்

B) உடல் வளர்ச்சியின் விகிதம்

C) சூழ்நிலையின் தரம்

D) நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி


116. எரிக் எரிக்சன் என்பார் குறிப்பிடுகின்ற சமுதாய அடிப்படையில் ஏற்படும் வளர்ச்சி நிலைகளில் குமரப் பருவத்தில் ஏற்படக்கூடிய 'தன்முனைப்பு-ஒப்புமை' (Ego Identity) நெருக்கடி ஏற்படுவது

A) மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்வதால்

B) சமூகத்தில் மற்றவர்களோடு ஏற்படும் போராட்டங்களால்

C) 'ஈகோ' அல்லது 'தான்' என்ற உயர்வு மனப்பான்மையால்

D) சமூகத்தில் தனக்கென ஒரு வாழ்க்கைப் பங்கினை அறிந்து கொள்வதில் உண்டாகும் நெருக்கடி நிலையால்

117. நியாயமான சிந்தனையைப் பாதிக்கக்கூடியது

A) மன எழுச்சிகள் 

B) தவறான எண்ணம்

C) சூழ்நிலை

D) மனப்பான்மை

118. வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வியானது உள்ளடக்கியது

A) எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு

B) எண்ணாற்றல்

C) எழுத்தறிவு மற்றும் தொழிலறிவு

D) எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தொழிலறிவு

119. மிகப் பிரபலமான தொழில்நுட்பம் அமைந்த புதுமையான கற்பித்தல் தொடர்புடையது

A) அறிவியல் ஆய்வகம் 

B) மொழி ஆய்வகம்

C) கணினி ஆய்வகம் 

D) தொழில்நுட்ப ஆய்வகம்

120. செயல்படுவதற்கான உந்துதல் செயலில் இருப்பின் ஆவ்வூக்கமானது

A) புற ஊக்கி

B) அக ஊக்கி

C) அக மற்றும் புற ஊக்கி

D) அடைவைச் (Achievement) சார்ந்தது

121 பொருநராற்றுப்படை என்பது எந்த அரசனைப் பற்றிப் பாடப்பட்டது?

A) சோழன்

B) சேரன்

C) பாண்டியன்

D) பல்லவன்

122 மலைபடுகடாம் என்ற நூலின் மற்றொரு பெயர்

A) பெரும்பாணாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) கூத்தராற்றுப்படை

123. வடநாட்டு அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற் பொருட்டுப் பாடப்பட்ட நூல்

A) குறிஞ்சிப்பாட்டு 

B) முல்லைப்பாட்டு

C) பட்டினப்பாலை 

D) தமிழ்விடு தூது

124. மதுரைக் காஞ்சியில் மாலை நேரக் கடைகள் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

A) நாளங்காடி

B) அல்லங்காடி

C) வணிகச் சந்தை 

D) கடை வீதி


125. நீதி நூல்களின் காலம்


A) கி.பி. 100 - 600 

B) கி.பி. 600 - 850

C) கி.பி. 850 - 1200 

D) கி.பி. 1350 - 1750


126. பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள் 782 அடிகளையுடைய நூல்

A) நெடுநல்வாடை 

B) குறிஞ்சிப்பாட்டு

C) முல்லைப்பாட்டு 

D) மதுரைக்காஞ்சி


127. சங்க இலக்கியத்துள் அமைந்துள்ள பாடல்கள் பெரும்பாலும் இப்பா வகையைச் சார்ந்தவை

A) வெண்பா

B) கலிப்பா

C) ஆசிரியப்பா

D) வஞ்சிப்பா

128. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மக்களுக்கும் பகைமை ஏற்பட்டபோது அது போராக மூளாதபடி தடுத்த புலவர்

A) கண்ணகனார்

B) புல்லாற்றூர் எயிற்றியனார்

C) மாங்குடி மருதனார்

D) ஔவையார்

129. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்;” எனத் தொடங்கும் பாடலை இயற்றிய புலவர்

A) கபிலர்
B) பரணர்
C) கணியன் பூங்குன்றனார்
D) நக்கீரனார்


130. நாட்டியக் கலையில் சிறப்புப் பெற்ற பெண்கள் இப்பெயரில் அழைக்கப்பட்டனர்


A) கூத்தர்

B) பொருநர்

C) பாணர்

D) விறலியர்


131. நான்கு சீர்களையும் துள்ளித் துள்ளி வரும் ஓசையையும் உடையது

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

132. பகைவனின் மதிலை முற்றுகையிடுதல்

A) தும்பை

B) உழிஞை

C) காஞ்சி

D) வஞ்சி


133. ஓர் இடம் குறித்து இருவர் படையும் எதிர்ப்பட்டுப் போர் செய்தல்

A) தும்பை

B) வெட்சி

C) வஞ்சி

D) காஞ்சி

134. சங்க இலக்கியங்களில் ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையில் பாடல்கள் காணப்பெறும் தொகுப்பு

A) குறுந்தொகை

B) அகநானூறு

C) நற்றிணை

D) புறநானூறு

135. நெடுந்தொகை எனச் சிறப்புப் பெயர் பெற்றது

A) அகநானூறு

B) புறநானூறு

C) கலித்தொகை 

D) ஐங்குறுநூறு

136. நாலடியார் என்னும் நீதிநூலை முழுவதும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

A) கால்டுவெல்

B) இரேனியஸ்

C ) ஜி.யு.போப்

D) இராபர்ட்-டி-நொபிலி

137. கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போர் பற்றிக் கூறும் நூல்

A) கார் நாற்பது

B) களவழி நாற்பது

C) இன்னிலை

D) இன்னா நாற்பது

138. மூவேந்தர்களை வெண்பாக்களால் புகழ்ந்து பாடிய பழைய நூல்

A) சிலப்பதிகாரம் 

B) முத்தொள்ளாயிரம்

C) நந்திக்கலம்பகம்

D ) மூவருலா

139. பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை நாம் இந்நூலின் வழி அறியலாம்

A) முக்கூடற்பள்ளு 

B) திருக்குறள்

C) சிலப்பதிகாரம் 

D) பழமொழி நானூறு

140. மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லை இல்."
எனும் வரிகள் இடம் பெறும் இலக்கிய நூல்

A) ஆசாரக் கோவை 

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம் 

D) கம்பராமாயணம்

41 மன எழுச்சி என்பது

A) சிக்கலான உளநிலை

B) மனதின் தூண்டப் பெற்ற அல்லது சலனமடைந்த நிலை

C) பாதிக்கப்பட்ட மனநிலை

D) தூண்டலுக்கு வினை புரிய தயார் நிலை

142 முன்பிள்ளைப் பருவத்தில் மிகக் கடினமான வளர்ச்சிசார்செயல்களுள் ஒன்று

A) மன எழுச்சியுடன் பிறருடன் தொடர்பு கொள்வதைக் கற்றுக்கொள்ளுதல்

B) நடக்கக் கற்றுக் கொள்ளுதல்

C) படிக்கக் கற்றுக் கொள்ளுதல்

D) தானே உணவு உண்ணக் கற்றுக் கொள்ளுதல்

143. எந்த ஓர் உயிரின வகையிலும் மரபு நிலைக் கூறுகனைப் பரம்பரையாகக் கடத்தக் கூடியது.

A) செல்கள்

B) திசுக்கள்

C) ஜீன்கள்

D) சைட்டோபிளாசம்

144. தனி மனிதனுன் வேறுபாடுகள் என்பது

A) ஒரே நபரின் பல்வேறு திறன்களின் வேறுபாடுகள்

B) வெவ்வேறு நபரிடையே ஏற்படும் வேறுபாடுகள்

C) வெவ்வேறு நபரிடையேயுள்ள ஆளுமை வேறுபாடுகள்

D) வெவ்வேறு நபரிடையேயுள்ள மனப்பான்மை வேறுபாடுகள்

145. ஆசிரியரின் விசாரணை ஆர்வத்தைத் தூண்டக் கூடிய கல்வி

A) பொது உளவியல்

B) மருத்துவ உளவியல்

C) கல்வி உளவியல்

D) பரிசோதனை உளவியல்

146. 'கறுப்பு மலர்கள்' எனும் புதுக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

A) மு. மேத்தா

B) வைரமுத்து

C) வாலி

D) நா. காமராசன்

147. இராவண காவியத்தின் ஆசிரியர்

A) புலவர் குழந்தை

B) கண்ணதாசன்

C) பெரியார்

D) வாணிதாசன்

148. எதிர்பாராத முத்தம் எனும் காவியத்தை எழுதியவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன் 

D) கண்ணதாசன்

149. தமிழில் முதன்முதலில் தோன்றிய சமூக நாடகம்

A) டம்பாச்சாரி விலாசம்

B) நந்தனார் சரித்திரம்

C) மனோன்மணியம்

D) அனிச்ச அடி

150. 'தமிழ் நாடகத் தந்தை' என்று போற்றப்படுபவர்

A) அண்ணா

B) சங்கரதாஸ் சுவாமிகள்

C) பம்மல் சம்பந்த முதலியார்

D) கோமல் சுவாமிநாதன்

*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments