PG - TRB - TAMIL - 2002 - 2003 , ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - GREENTAMIL.IN / ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு - 2002 - 2003 வினாத்தாள்

 

 


ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2002 -2003 

வினாக்களும் விடைகளும் - முழுமையும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2002 - 2003

QUESTION & ANSWER - GREENTAMIL.IN



*****************     **********    *************

1. "அக்னிச் சிறகுகள்” என்ற நூலின் ஆசிரியர்

A) அன்னி பெசன்ட்

B) ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

C) ஜவஹர்லால் நேரு

D) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

2 . கணிப்பொறியின் நினைவாற்றல் பொதுவாக கிலோ பைட்ஸ் அல்லது மெகாபைட்ஸ் என்னும் பதத்தில் அழைக்கப்படுகிறது. பைட்டில் அடங்கியுள்ளது.

A) எட்டு இரும இலக்கங்கள்

B) எட்டு பதின்ம இலக்கங்கள்

C) இரண்டு இரும இலக்கங்கள்

D) இரண்டு பதின்ம இலக்கங்கள்

3 . உலகக் கால்பந்து கோப்பை 2002-இல் வெற்றி பெற்ற நாடு

A) தென்கொரியா 

B) ஜெர்மனி

C) பிரான்ஸ்

D) பிரேசில்

4. உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர்

A) ராய்ப்பூர்

B) டேராடூன்

C) ராஞ்சி

D) திஸ்பூர்

5 . தமிழக அரசு சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் கோபுரம்

A ) மதுரை

B) ஸ்ரீவில்லிபுத்தூர்

C) தஞ்சாவூர்

D) இராமேஸ்வரம்

6 . ஜீன், ஜாக்குயஸ் ரூஸோ என்ற சிறந்த கல்வியாளர் வாழ்ந்த காலம்

A) 16-ஆம் நூற்றாண்டு 

B) 17-ஆம் நூற்றாண்டு

C) 18-ஆம் நூற்றாண்டு 

D) 19-ஆம் நூற்றாண்டு

7 . வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது?

A) தொடர்ச்சி

B) நேர்கோட்டு முறை

C) ஒருமைப்பாடு

D) வளைவான மேம்பாடு

8. நேற்றைய படிப்பை நினைவுகூர்ந்து பார்க்கும்போது இன்றைக்கு படித்த அறிவு அதனுடன் குறுக்கிடுகிறது என்பதை குறிப்பிடுவது

A) தீவிரமான எதிர்ப்பு

B) தீவிரமற்ற எதிர்ப்பு

C) தீவிர எதிர்ப்பிற்கு ஆதரவு

D) மறைவான எதிர்ப்பு

9 .தெளிவான கவனம் என்பது

A) பலன் தரும் உள்ளுணர்வு

B) மீண்டும் மீண்டும் துணிவான செயல்
 மூலம் பெறப்படுவது

C) பலன் தரக்கூடிய உணர்வுகள்

D) ஒரு துணிவான செயல் மூலம் பெறப்படுவது

10 ."உலக உயிரினங்களுக்கு உணவும், இனப் பெருக்கமும் எவ்விதம் இன்றியமையாத ஒன்றோ அதுபோன்றுதான் சமுதாயத்திற்குக் கல்வியும்” என்று கூறியவர்

A) ஜான் டூயி

B) ஏ.எஸ். நீல்

C) ப்ரோபெல்

D) ரூஸோ

11 . முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தைஅறிமுகப்படுத்தியவர்

A) மெக்லிலாண்டு 

B) டெம்போ

C) மாஸ்லோ

D) பினே

12 . இரைச்சலிடும் குழந்தை மற்றும் அமைதியான மனம் என்பவைகளை எழுதியவர்

A) ஜே. கிருஷ்ணமூர்த்தி 

B) ஜான் டூயி

C) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் 

D) ஸ்ரீ அரவிந்தர்

13. ஆக்கநிலையுறுத்தலை ஆராய்ந்த மனோதத்துவ ஞானி யார்?

A) கில்ஃபோர்டு

B) பாவ்லாவ்

C) மாஸ்லோ

D) ஷெல்டன்

14. கல்வி நுட்பத்தின் முக்கியமான நோக்கம்

A) தனித்தனியான குறிப்பு

B) நேரடித் தொடர்பு

C) தொழில் நுட்பங்களை
 மேம்படுத்துவதற்கான நுட்பம்

D) மாற்று தகவல் தொடர்பு முறையை தேர்ந்தெடுத்தல்

15. ஆக்கத்திறன் முறையுடன் தொடர்பு இல்லாத ஒன்று எது?

A) அடைகாத்தல் 

B) தயாரித்தல்

C) ஊக்குவித்தல் 

D) முடிவெடுத்தல்

16. சமயப் போராட்டங் கடந்து சமரச ஒளி கண்டவர் யார்?

A) தத்துவராயர் 

B) தாண்டவராயர்

C) சிதம்பர சுவாமிகள் 

D) இராமலிங்கர்

17. போர் பற்றிப் பாடாத நூலைக் கண்டறிக :

A) தகடூர் யாத்திரை 

B) கைந்நிலை

C) களவழி நாற்பது 

D) கலிங்கத்துப்பரணி

18. சமண சமயக் காப்பியம் அல்லாததைக் குறிப்பிடுக.

A) வளையாபதி

B) குண்டலகேசி

C) நீலகேசி

D) சூளாமணி

19. குரங்கின் ஏற்றினை எப்பெயரிட்டழைத்தனர்?

A) கோட்டான்

B) கடுவன்

C ) பூசை

D) ஏனம்

20. பி.எஸ். இராமையா எழுதாத நாடகம் எது?

A) மல்லியம் மங்களம் 

B) தேரோட்டி மகன்

C) போலீஸ்காரன் மகள் 

D) மேனகா

21 நிகண்டுகள் வரிசையில் அடங்காத நூல் எது?

A) திவாகரம்

B) யாப்பருங்கலம்

C) பிங்கலந்தை

D) சதுரகராதி

22 சட்டத்துறையோடு தொடர்பில்லாத தமிழறிஞர் யார்?

A) பா.வே. மாணிக்க நாயக்கர்

B) கே.எஸ். சீனிவாச பிள்ளை

C) சி.கே. சுப்பிரமணிய முதலியார்

D) சோமசுந்தர பாரதியார்

23. புதுக்கவிதை பாடாத தமிழ்க் கவிஞர்

A) சி.சு. செல்லப்பா 

B) கோபாலகிருஷ்ண பாரதி

C) ந. பிச்சமூர்த்தி 

D) வல்லிக்கண்ணன்

24. வரலாற்று நாவல்களோடு தொடர்பில்லாத எழுத்தாளர்

A) விக்ரமன்

B) ஜெகசிற்பியன்

C) அரு.இராமநாதன் 

D) மு.வரதராசனார்

25. அகிலன் எழுதாத நூல் எது?

A) சித்திரப்பாவை 

B) கயல்விழி

C) அக்கினிக்கோபம் 

D) வெற்றித் திருநகர்

26. "ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்” - இவ்வடியிலுள்ளதொடை எது?

A) அந்தாதி

B) இரட்டை

C) செந்தொடை

D) எதுகை

27. திரிசொற்களால் ஓசை இனிதாகப் புணர்க்கப்படும் செய்யுள் எவ்வனப்பினுள் அடங்கும்?

A) இயைபு

B) இழைபு

C) அழகு

D) அம்மை

28. "கூடார் மண் கொளல்”- எப்புறத் திணையைச் சார்ந்தது?

A) வெட்சி

B) வஞ்சி

C) உழிஞை

D) தும்பை

29. காப்பியப் பண்பை உணர்த்துகின்ற அணி எது?

A) சங்கீரணம்

B) பரிவர்த்தனை

C) பாவிகம்

D) நிதரிசனம்

30. மருதத்திற்குரிய சிறுபொழுது எது?

A) மாலை

B) எற்பாடு

C) நண்பகல்

D) காலை

31 “சரசுவதி” என்ற சொல் எக்கீரை வகையைக் குறிப்பதாக சித்தர் பாடல் குறிக்கின்றது?

A) முளைக்கீரை

B) சிறுகீரை

C) பொன்னாங்கண்ணிக் கீரை

D) வல்லாரைக் கீரை

32 அன்பே சிவம்” என்று கூறியவர் யார்?

A) திருமூலர்

B) திருவெண்காடர்

C) பரஞ்சோதியார் 

D) வில்லிபுத்தூரார்

33. கம்பராமாயணத்தை உரைநடையில் எழுதியவர் யார்?

A) சோமசுந்தர நாயகர்

B) தண்டபாணி சுவாமிகள்

C) திருச்சிற்றம்பல தேசிகர் 

D) விசாகப் பெருமாள் ஐயர்

34. நெஞ்சுவிடு தூதின் ஆசிரியர் யார்?

A) அருள்நந்தி சிவாச்சாரியார்

B) மெய்கண்டார்

C) திருவியலூர் உய்யவந்த நாயனார்

D) உமாபதி சிவாச்சாரியார்

35. இந்திய மக்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்ற நூற்றாண்டு

B) பதினேழு

C) பதினெட்டு

D) பத்தொன்பது

36. கர-மு.ஷெரீப் இயற்றிய நூலெது?

A) இலக்கியப் பூங்கா

B) மோகிதின் புராணம்

C) நபியே எங்கள் நாயகமே 

D) கவிப் பூஞ்சோலை

37. சத்திய வேதக் கீர்த்தனை என்ற இசைப் பாக்களடங்கிய நூலின் ஆசிரியர் யார்?

A) வேதநாயகம் பிள்ளை

B) இரேனியல்

C) கிருஷ்ணப்பிள்ளை

D) சேவியர்

38. கால்டுவெல் எழுதிய உரைநடை நூலெது?

A ) ஞானக்கோயில்

B) இரட்சணிய யாத்ரிகம்

C) இரட்சணிய மனோகரம் 

D) ஆத்ம நிர்ணயம்

39. “உரைநடைக் கோவை” எனும் நூலை எழுதியவர் யார்?

A) பூரணலிங்கம் பிள்ளை

B) சோமசுந்தர பாரதியார்

C) கதிரேசச் செட்டியார்

D) மாணிக்க நாயக்கர்

40. குழந்தை இலக்கியம் வளர்ப்பதையே தன் வாழ்நாள் தொண்டாகக் கொண்டவர்

A) பெ. தூரன்

B) அழ. வள்ளியப்பா

C) தமிழ் ஒளி

D) கா. நமச்சிவாயம்


41 . ஐ , ஔ இவற்றை இலக்கண
நூலார் எவ்வாறழைக்கின்றனர்?

A) உயிர்

B) உயிர்மெய்

C) முதல்

D) சந்தியக்கரம்

42 நாட்டுப்புறப் பாக்கட்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்தவர் யார்?

A) இளங்கோ

B) சீத்தலைச்சாத்தனார்

C) திருத்தக்கதேவர் 

D) கம்பர்

43. சிலப்பதிகாரம் காட்டும் கொடியவன் யார்?

A) கோசிகாமணி 

B) மாசாத்துவான்

C) மாநாய்க்கன் 

D) பொற்கொல்லன்

44. பாக்களேதும் கிடைக்கப் பெறாமல் பெயர் மட்டுமே அறியப்படுகின்ற சிறு காப்பியம் எது?

A) நாக்குமார காவியம் 

B) நீலகேசி

C) உதயணகுமார காவியம் 

D) யசோதர காவியம்

45. முருகனின் அவதாரம் எனக் கருதப்பட்டவர் எவர்?

A) திருநாவுக்கரசர் 

B) திருஞானசம்பந்தர்

C) பரஞ்சோதியார்

D) கருவூர்த்தேவர்

46. பாம்பு வணக்கம், நிறைந்த அளவில் காணப்படும் மாநிலம் எது?

A) மலையாளம்

B) கர்நாடகம்

C) ஆந்திரம்

D) வங்காளம்

47. காமராசர் தாலாட்டுப் பாடிய கவிஞர் யார்?

A) பாரதிதாசன்

B) பொன்னடியான்

C) மீரா

D) கண்ணதாசன்

48. மணம் முடிந்தபின் மணமக்களை நாவிதர்கள் வாழ்த்தும் வழக்கம் காணப்படும் மாவட்டம்

A ) திருச்சி 

B) மதுரை

C) சேலம்

D) தஞ்சை

49. பேய்விரட்டும் வினையில் சிறந்தவர்கள் என்று யாரை நாட்டுப்புறப் பாக்களில் குறிப்பிடுகின்றனர்?

A) கோடாங்கி

B) குடுகுடுப்பை

C ) குறி 

D) இராப்பாடி

50 ) கும்மியைக் ' கொம்மை ' எனக் குறிப்பிட்ட  இலக்கியம் எது ? 

A ) வளையாபதி 

B ) குண்டலகேசி 

C ) சீவகசிந்தாமணி 

D ) சூளாமணி 

51 "மற்ற கலைகளைவிட இலக்கியக் கலைக்கு வடிவம் இன்றியமையாததாகும்” என்றவர் யார்?

A) இரா. சீனிவாசன்

B) வரதராசனார்

C) சக்திவேல்,

D) அகத்தியலிங்கம்

52. கலையின்பம் தவிர வேறொரு பயனும் கருதாமல் புலவர் இயற்றிய இலக்கியம்

A) சார்பு இலக்கியம் 

B) நேர் இலக்கியம்

C) அக இலக்கியம் 

D) இன்ப இலக்கியம்

53. 'திறனாய்வில் ஓரளவு முடிவு கூறும் இயல்பும் அமைந்திருப்பினும் ஒன்றை நல்லது என்றோ கெட்டது என்றோ கூறினால்தான் அது திறனாய்வாகும் என்று கருதுவது தவறு” - யார் கூற்று?

A) அ.ச. ஞானசம்பந்தன் 

B) தா.ஏ. ஞானமூர்த்தி

C) முத்துசண்முகம் 

D) மணவாளன்'

54. மு. வரதராசனார் எழுதிய புதினம் எது?

A) யவன ராணி

B) செந்தாமரை

C) சிவகாமியின் சபதம் 

D) பத்மாவதி சரித்திரம்

55. "குளத்தங்கரை அரச மரம்” சொன்ன கதையின் ஆசிரியர் யார்?

A) புதுமைப்பித்தன்

B) வ.வே.சு. ஐயர்

C) பி.எஸ். இராமையா

D) மௌனி

56. இசையுலகில் "லயம்” என்னும் தாளவகை நிறைந்த களஞ்சியமாகப் போற்றப்படும் இலக்கியம்

A) திருவாசிரியம் 

B) திருப்புகழ்

C) திருவிருத்தம் 

D) திருவாய்மொழி

57. உரையாசிரியர்களில் பழைமையானவர் யார்?

A) நக்கீரர்

B) இளம்பூரணர்

C) பேராசிரியர்

D) சேனாவரையர்

58. மணப்பிரவாள நடையில் உரையெழுதப்பட்ட இலக்கியம் எது?

A) தேவாரம்

B) திருவாசகம்

C) நாலாயிர திவ்ய பிரபந்தம்

D) திருமந்திரம்

59. "தொண்டர் சீர் பரவுவார்” எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?

A) சேக்கிழார்

B) சுந்தரர்

C) கண்டராதித்தர்

D) திருமாளிகைத்தேவர்


60. திருவண்ணாமலைத் தலபுராணம் யார் எழுதியது?

A ) உமாபதி சிவம்

B) வேம்பத்தூரார்

C) நிரம்ப அழகிய தேசிகர் 

D) எல்லப்ப நாவலர்

61 . மணிமேகலை எப்பா வகையில் யாக்கப்பட்டுள்ளது?

A) விருத்தம்

B) கலிப்பா

C) அகவல்

D) வஞ்சிப்பா

62. “முத்தி நூல்” என்று போற்றப்படும் நூலெது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) சீவகசிந்தாமணி 

D) பெருங்கதை

63. சிந்தாமணியோடு ஒத்து இடம் பெறத் தகுதியான காப்பியம் என அறிஞர் கூறும் சிறுகாப்பியம் எது?

A) சூளாமணி

B) நீலகேசி

C) யசோதர காவியம் 

D) நாககுமார காவியம்

64. பல நூற்றாண்டுகட்கு முன்பே பத்து உரைகள் கண்ட நூலெது?

A) திரிகடுகம்

B) திருக்குறள்

C) நாலடியார்

D) ஏலாதி

65. "கழுமலம்” என்ற இடத்தில் நடந்த போரைப்பற்றிப் பாடிய இலக்கியம் எது?

A) கார் நாற்பது 

B) களவழி நாற்பது

C) இன்னா நாற்பது 

D) இனியவை நாற்பது

66. ஆற்றுப்படை இடம் பெறும் படலம் எது?

A) வெட்சி

B) கரந்தை

C) உழிஞை

D) பாடாண்

67. பாக்களுக்குரிய ஓசை எத்தனை என்கிறார் காரிகை ஆசிரியர்?

A ) ஒன்று 

B) நான்கு

C) மூன்று

D) ஐந்து

68. 'தறுகண்' - எம்மெய்ப்பாட்டிற்குரியது?

A) மருட்கை

B) இளிவரல்

C) பெருமிதம்

D) வெகுளி

69. இடையில் நிற்கும் மொழி, முதலிலும் ஈற்றிலும் சென்று பொருள்கூடும் பொருள்கோள்

A) நிரனிறை

B) பூட்டுவில்

C) தாப்பிசை

D) ஆற்று நீர்

70. ஓசைகளின் வருணனையால் பெயர் அமையப்பெற்ற சங்க இலக்கியம் எது?

A) குறிஞ்சிப்பாட்டு 

B) பெரும்பாணாற்றுப் படை

C) மலைபடுகடாம் 

D) பட்டினப்பாலை

71. முன்பு பலவற்றிற்கும் பொதுவாக இருந்த சொல் இப்போது அவற்றுள் ஒன்றையே உணர்த்தல்

A) பொது பொருட்பேறு 

B) சிறப்புப் பொருட்பேறு

C) நுண்பொருட்பேறு 

D) பருப்பொருட் பேறு

72. குறுத்தாட் பூதம் - எவ்விகாரத்துள் அடங்கும்?

A) நீட்டல்

B) குறுக்கல்

C) வலித்தல்

D) மெலித்தல்

73. கடி மணச் சாலை - எக்குணந் தழுவிய உரிச்சொல்?

A) காப்பு

B) கூர்மை

C) நாற்றம்

D) புதுமை

74. எப்பாவினுள் நாலசைச்சீர் வராது?

A) வெண்பா

B) அகவற்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

75. ஒழுக்கிய வண்ணங்களின் எண்ணிக்கை எத்தனை?

A) நூறு

B) தொண்ணூற்றாறு

C) நூற்றியெட்டு

D) தொண்ணூற்றைந்து

76. தர்க்கரீதியான சிந்தனை என்பது

A) குவி சிந்தனை

B) விரி சிந்தனை

C) ஆராய்தல்

D) ஆக்கபூர்வமான சிந்தனை

77. குழப்பமான கோட்பாடுடைய புத்திகூர்மை என்பதைத் தெரிவித்தவர்

A) கில்போர்டு

B) தார்ண்டைக்

C) தர்ஸ்டன்

D) ஸ்பியர்மேன்

78. ரோஸ்சாக் என்பவரின் மைத்தடம் சோதனையில் கீழ்க்காணும் எந்த ஒன்று அடங்காது?

A) உள்ளடக்கம்

B) தனித்தன்மை

C) அமைவிடம்

D) ஓங்கு தன்மை

79. பயிற்சி மாற்றத்தில் இணையான மூலகங்கள் எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்

A) வுட்வொர்த்

B) ஜட்

C) தார்ண்டைக்

D) பாக்லே

80. இந்திய அரசியலமைப்பில் சட்டப்பகுதி 45-ன் கல்வியின் முக்கியத்துவம் யாது?

A) நல்ல வாழ்க்கைத் தர அமைப்பை உறுதிப்படுத்தும் பணிமுறை

B) வேலை செய்வதற்கான உரிமையை பெறுவதற்கான சட்ட நிபந்தனை

C) இலவச கல்விக்கான சட்ட நிபந்தனை

D) உலக ஆரம்பக் கல்விக்கான முக்கியத்துவம்

81 தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி அமைந்துள்ள இடம்

A) காவேரி நகர் 

B) அமராவதி நகர்

C) கொங்கு நகர் 

D) அசோக் நகர்


82. "தேர்வுகள் எதற்காக?” என்ற எண்ணம் கொண்டவர்

A) ஸ்கின்னர்

B) ஏ.எஸ்.நீல்

C) ஸ்ரீ அரவிந்தர் 

D) இவான் இல்லிச்

83. எளிதில் கோபப்படும் குணமுடையவர்களின் மனநிலை
இயல்பானது

A) உணர்ச்சி வசப்படுபவர்

B) உணர்ச்சி வசப்படாதவர்

C) உடல் ரீதியாக பலஹீனமானவர்கள்

D) ஆன்மிக ரீதியில் உறுதியுள்ளவர்கள்

84. "மனித உரிமைகள்" எனும் உலக பிரகடனத்தில்அனைவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் மனித
பாதுகாப்பு என்பது எந்த சட்ட பகுதியில் கூறப்பட்டுள்ளது?

A)1

B) 2

C) 3

D) 4

85. ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி உண்மையான கற்றுவித்தலின் முதல் கொள்கையானது

A) செய்முறை கற்றல்

B) தானே கற்றல்

C) வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கற்றல்

D) வாழ்க்கை சம்பந்தமான கல்வி

86. "வெற்றியைப்போல் பின்தொடர்வது வேறொன்றுமில்லை” என்ற கருத்துரையை விளக்கும் சட்டம்

A) தயார் நிலையில் இருத்தல்

B) பலன்

C) உபயோகம்

D) உபயோகமின்மை

87. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது அறியப்படுவது

A ) கற்பனை

B) மனமயக்கம்

C) உணரும் ஆற்றல் 

D) கருத்தியல் எண்ணம்

88. உன்மனதிலிருந்து வேண்டுமென்றே கட்டாயமாக துன்பம் தரக்கூடிய மனப்பாங்கை தவிர்ப்பது

A) தேர்ந்தெடுத்து மறத்தல் 

B) ஒடுக்குதல்

C) அடக்குதல்

D) ஒதுங்குதல்

89. பருப்பொருட்களின் இயக்கத்தை எடுத்துக்காட்டும் மூன்று தத்துவங்கள்

A) நஷ்ட ஈடு, தன்னலம் மற்றும் பிடிவாதம்

B) நஷ்ட ஈடு, மாற்றி அமைத்தல் மற்றும் ஒத்திருத்தல்

C) தன்னலம், உயிருள்ள உயிரற்ற அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்னும் கொள்கை மற்றும் யதார்ரத்தவியல்

D) உயிருள்ள உயிரற்ற அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்னும் கொள்கை மாற்றி அமைத்தல் மற்றும் பிடிவாதம்

90. ரோஸ்சாக் என்பவரின் மைத்தடச் சோதனை மிகவும் இதற்கு பிரசித்தமானது

A) நுண்ணறிவு 

B) ஆர்வம்

C) ஊக்கி

D) ஆளுமை

91. பிற சங்க நூல்களினின்றும் மொழி நிலையில் மாறுபட்டு நிற்கின்ற எட்டுத் தொகை நூலெது?

A) பரிபாடல்

B) அகநானூறு

C) குறுந்தொகை 

D) புறநானூறு

92. தென் திராவிட மொழியல்லாத மொழியைக் கண்டறிக.

A ) குடகு 

B) கோண்டி

C) துளு

D) தோடா

93. பிறவியிலேயே கண் பார்வையற்றிருந்த தமிழ்ப் புலவர் யார்?

A) வீரராகவ முதலியார் 

B) அதிமதுரகவி

C) குமரகுருபரர் 

D) சிவப்பிரகாசர்

94. மதங்க சூளாமணி என்ற நாடக நாட்டிய நூலின் ஆசிரியர் யார்?

A) சி.வை. தாமோதரம் பிள்ளை

B) ஆறுமுக நாவலர்

C) விபுலாநந்தர்

D) கனகசபை புலவர்

95. ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத நூலெது?

A) நாலடியார்

B) திருக்குறள்

C) திருவாசகம் 

D) ஆசாரக்கோவை

96. மொழி அமைப்பின் ஆய்வில் அடங்கியுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும் ஒன்றைத் தருக.

A) மரபியல்

B) ஒலியனியல்

C) உருபனியல்

D) தொடரியல்

97. மொழியில் அமைந்துள்ள மூவகைச் சொல்லமைப்போடு பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.

A) தனிநிலை

B) ஒட்டுநிலை

C) உட்பிணைப்பு நிலை 

D) புதை நிலை

98. கோபாலகிருஷ்ண பாரதி பாடிய கீர்த்தனை வடிவிலான இசைப் பாக்களோடு பொருந்தாதது எது?

A) திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை

B) மெய்ப்பொருள் நாயனார் கீர்த்தனை

C) இயற்பகை நாயனார் கீர்த்தனை

D) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

99. தாலாட்டுகளின் ஒருங்கமைவு நடத்தையில் அடங்காத கூறு எது?

A) தூண்டல் உணர்வு 

B) புலனுணர்வுக் காட்சி

C) அலைவுகள்

D) கற்றல்

100 . மயிலை சீனி வேங்கடசாமி எழுதாத நூல் எது ? 

A ) சமணமும் தமிழும்

B ) சிலம்பும் மேகலையும்

C ) கிறித்தவமும் தமிழும்

D ) பௌத்தமும் தமிழும்

101. இராமலிங்கரின் 'அருட்பாவிற்கு' மறுப்புத் தெரிவித்து வழக்கிட்டவர் யார்?

A) மீனாட்சிசுந்தரம் பிள்ளை

B) ஆறுமுக நாவலர்

C) கோபாலகிருஷ்ண பாரதி

D) முத்துசாமிப் பிள்ளை

102. மெய்ப்பாட்டை அல்லது மனநிலையை வெளியிட்டாடுகின்ற கூத்து

A) சொக்கம்

B) மெய்க்கூத்து

C) அவிநயக் கூத்து 

D) நாடகம்

103. காண்டேகரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்

A) த.நா. சேனாபதி 

B) ஸ்ரீராம்

C) கா.ஸ்ரீ.ஸ்ரீ.

D) ஜயராம்

104. ஞாயிறு மலர்களில் நாட்டுப்புறப் பாக்களை ஓராண்டுகாலம் தொடர்ந்து வெளியிட்ட நாளிதழ் எது?

A) தினத்தந்தி

B) தினமணி

C) தினகரன்

D) தினமலர்

105. குழுமியாடுதலைக் குரவை' என்ற பெயரால் முதன் முதலில் சுட்டிய நூல்

A) சிலப்பதிகாரம் 

B) கலித்தொகை

C) அகநானூறு

D) தொல்காப்பியம்

106. திருப்பள்ளி எழுச்சி சங்க காலத்தில் எவ்வாறு அழைக்கப்பெற்றது?

A) துயிலெடை நிலை 

B) பூவை நிலை

C) வெள்ளி நிலை 

D) கொடி நிலை

107. வால்மீகி பாடாத, கம்பன் பாடிய படலம் எது?

A) அதிகாயன் வதைப்படலம்

B) மாயாசனகப் படலம்

C) நாகபாசப் படலம்

D) பிரமாத்திரப் படலம்

108. பரிமேலழகர் உரையெழுதிய எட்டுத்தொகை நூலெது?

A) நற்றிணை

B) ஐங்குறுநூறு

C) பரிபாடல்

D) புறநானூறு

109. 'பழமொழி' என்ற சொல்லை முதன் முதலில் எடுத்தாண்ட சங்க இலக்கியம் எது?

A) குறுந்தொகை 

B) கலித்தொகை

C) அகநானூறு

D) பதிற்றுப்பத்து


110. தொல்காப்பியர் விடுகதையை எப்பெயரால் குறிப்பிடுகின்றார்?

A) வாய்மொழி

B ) பிசி

C) அங்கதம்

D) முதுசொல்

111 ) போர் பற்றி எழுந்த தனி நூல்

A) உலா

B) பரணி

C) புகழ்ச்சி மாலை

D) அங்க மாலை

112. பின்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு முதன் முதலில் வித்திட்டவர் யார்?

A) மதுரகவியாழ்வார் 

B) பேயாழ்வார்

C) நம்மாழ்வார்

D) பெரியாழ்வார்

113. அந்தாதி முறையில் நூறு பாக்களாகப் பாடப்பட்ட நூலெது?

A ) பள்ளு 

B) குறவஞ்சி

C) நந்திக் கலம்பகம் 

D) தமிழ்விடு தூது

114. நளன் கதையை வெண்பா யாப்பில் பாடியவர்

A) செயங்கொண்டார் 

B) புகழேந்தி

C) ஒட்டக்கூத்தர் 

D) பரஞ்சோதியார்

115. 'பெண் புத்தி மாலை'யை எழுதிய புலவர் யார்?

A) அப்துல் மஜீது 

B) சவ்வாதுப் புலவர்

C) முகம்மது உசேன் 

D) முகம்மது கான்

116. 'அஆ' இரண்டும் எவ்வுயிர் வகையில் அடங்கும்?

A) முன்னுயிர்

B) குவியுயிர்

C) மூடுயிர்

D) அங்காப்புயிர்

117. சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூலெது?

A) முல்லைப்பாட்டு

B) நற்றிணை

C) திருக்குறள்

D) மணிமேகலை

118. யார் பாடிய தேவாரத்தில் அருள், இரு, ஒழி, பெறு போன்றவை துணை வினைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன?

A) சம்பந்தர்

B) அப்பர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

119. ஆய்த எழுத்தைத் தனி ஒலியாகக் கருதும் இலக்கண நூல் எது?

A) தொல்காப்பியம்

B) வீரசோழியம்

C) அகத்தியம்

D) இலக்கண விளக்கம்

120. இருதிணை ஐம்பாலுக்கு உரியதாக அன்று, அல்ல என்ற எதிர்மறைச் சொற்களைப் புதிதாகச் சொன்ன நூலைக்
குறிப்பிடுக.

A) நேமிநாதம்

B) வச்சணந்திமாலை

C) நன்னூல்

D) யாப்பருங்கலம்


121 மூட நம்பிக்கையை எதிர்த்துக் கல்கி எழுதிய சிறுகதை எது?

A) வீணை பவானி

B) கணையாழியின் கனவு

C) கேதாரியின் தாயார் 

D) காதறாக் கள்ளன்

122. ஆங்கிலத்திற்கு ஷேக்ஸ்பியர் அமைந்தது போலத் தமிழுக்கு
அமைந்தவர்

A) பம்மல் சம்பந்த முதலியார்

B) இலட்சுமண பிள்ளை

C) சங்கரதாஸ் சுவாமிகள்

D) பொன்னுசாமி பிள்ளை

123. தமிழ்நாட்டு நாடகக் குழுவை இங்கிலாந்து வரை அழைத்துச் சென்றவர்

A) பவானந்தம் பிள்ளை

B) எஸ்.டி. சுந்தரம்

C) டி.கே. முத்துசாமி

D) தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்

124. ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட சாமிநாத சர்மாவின்  நாடகம் எது?

A) பாணபுரத்து வீரன்

B) அபிமன்யூ

C) வித்யாசாகரர் 

D) காளமேகம்

125. தாலாட்டுப் பாட்டின் இராகம் எது?

A) மோகனம்

B) சிந்து பைரவி

C) நீலாம்பரி

D) இந்தோளம்

126. வில்லிபுத்தூரார் தன் பாரதத்தை எத்தனை பருவங்களாக வகுத்துள்ளார்?

A) பத்து

B) பன்னிரண்டு

C) முப்பது

D) இருபது

127. வையை பற்றித் தனிப்பாக்கள் அமைந்துள்ள இலக்கியம் எது?

A) பதிற்றுப்பத்து

B) பரிபாடல்

C) புறநானூறு

D) ஐங்குறுநூறு

128. மிகப்பழைய தமிழ் எழுத்து எது?

A) வட்டெழுத்து

B) கிரந்த எழுத்து

C) பிராமி எழுத்து

D) தேவநாகரி

129. புணர்ச்சியில் தோன்றும் உடம்படு மெய்கள் யாவை?

A) க்,ச்

B) ன், ற்

C) ய், வ்

D) ட், ண்

130.  "தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் திராவிட” என்பதாம் என்றவர் யார்?

A) ஹீராஸ்

B) கால்டுவெல்

C) கமில் கவலபில் 

D) ஹால்

131. "வன்தொண்டர்” என்று குறிக்கப் பெறுகின்ற சைவ அடியவர் யார்?

A) திருநாவுக்கரசர் 

B) சுந்தரர்

C) பரஞ்சோதியார்

D) கருவூர்த்தேவர்

132. "த்ரியெம்பாவ- த்ரிபாவ” என்ற பெயரில் திருவெம்பாவை, திருப்பாவை விழாக் கொண்டாடும் நாடு எது?

A) சயாம்

B) இந்தோனேசியா

C) மலேசியா

D) தாய்லாந்து

133. திருப்பாவை ஜீயர் என்றழைக்கப்படுபவர் யார்?

A) மணவாள முனிவர் 

B) ஆளவந்தார்

C) நஞ்சீயர்

D) இராமானுஜர்

134. பெண்களின் மடலேற்றம் பற்றிப் பாடிய ஆழ்வார் யார்?

A) மதுரகவி ஆழ்வார்

B) நம்மாழ்வார்

C) திருமங்கை ஆழ்வார்

D) குலசேகர ஆழ்வார்

135. பத்திரகிரியாரின் ஆசிரியர் யார்?

A) பட்டினத்தார் 

B) வில்லிபுத்தூரார்

C) காளமேகம்

D) ஒட்டக்கூத்தர்

136. பாட்டுள் அமைந்த வருணனைத் தொடரையே பாட்டுக்குத் தலைப்பாகக் கொண்ட இலக்கியம்

A) அகநானூறு

B) பரிபாடல்

C) பதிற்றுப்பத்து 

D) நற்றிணை

137. அன்பு கொண்ட பெண்பாற் புலவர் யார்?

A) ஔவையார்

B) வெண்ணிக்குயத்தியார்

C) காவற்பெண்டு 

D) நக்கண்ணையார்

138. நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல் எது?

A) மதுரைக்காஞ்சி 

B) நெடுநல்வாடை

C) முல்லைப்பாட்டு 

D) சிறுபாணாற்றுப்படை

139. "சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக” என வஞ்சினம் கூறிய அரசன் யார்?

A) நலங்கிள்ளி

B) அறிவுடை நம்பி

C) பூதப்பாண்டியன் 

D) நல்லுருத்திரன்

140. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை?

A) இரண்டு

B) மூன்று

C) ஐந்து

D) நான்கு

141 .  ''கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்” - இக்குறளில் அமைந்துள்ள அணி எது?

A) உவமை அணி

B). உருவக அணி

C) தன்மை அணி

D) ஏகதேச உருவக அணி

142. ஏறிய மடல் திறம் எத்திணைக்குரியது?

A) கைக்கிளை

B) குறிஞ்சி

C) பெருந்திணை

D) பாலை

143. சேயோன் மேய உலகம் எது?

A) காடு

B) வரை

C) புனல்

D) பெருமணல்

144. "ஊரன், மகிழ்நன் இப்பெயர்கள் எத்திணைக்குரிய கருப்பொருள்கள்?

A) குறிஞ்சி 

B) முல்லை

C) மருதம்

D) பாலை

145. இரங்கலுக்குரிய அகத்திணை எது?

A) நெய்தல்

B) பாலை

C) முல்லை

D) குறிஞ்சி

146. ஒலியை ஆராயும் முறையை எத்தனையாக வகுக்கின்றனர்?

A) இரண்டு

B) நான்கு

C ) மூன்று

D) ஐந்து

147. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை.ஆராய்வதை மொழியியலாளர் என்னவென்று குறிப்பர்?

A) உருபனியல்

B) எழுத்தியல்

C) உறுப்பியல்

D) பொருளியல்

148. "கூயி” மொழி எம்மாநிலத்தில் பேசப்படுகின்றது?

A) கேரளம்

B) ஒரிசா

C) மைசூர்

D) பீஹார்

149. மெய்ப்பாட்டிற்குத் தனி இயலை வகுத்தவர் யார்?

A) அமிர்தசாகரர் 

B) தொல்காப்பியர்

C) நன்னூலார்

D) தண்டி

150. சங்கம் மருவிய கால நூல் எது?

A) குறுந்தொகை 

B) நற்றிணை

C) கலித்தொகை 

D) திருக்குறள்


***************    **************    ************

தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை . 97861 41410

*****************   *************   ************

Post a Comment

0 Comments