ஞாயிறு கொண்டாட்டம்
போட்டித்தேர்வில் வெற்றி!
கவிஞர்களும் பிறந்த ஊர்களும்.
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
1) தேசியக் கவிஞர் பாரதியார் பிறந்த ஊர் -----
அ) எட்டயபுரம்
ஆ) தளவாய்புரம்
இ) பொன்னையாபுரம்
விடை : அ ) எட்டயபுரம்
2) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) புதுச்சேரி
இ) விளாச்சேரி
விடை : ஆ ) புதுச்சேரி
3) கலிங்கத்துப்பரணி இயற்றிய
செயங்கொண்டார் திருவாரூர் மாவட்டம்
------ என்னும் ஊரில் பிறந்தார்.
அ) முத்துப்பேட்டை
ஆ) திருவாஞ்சியம்
இ) பங்குடி
விடை : இ ) பங்குடி
4) கம்பர் பிறந்த ஊர் -----
அ) தேரெழுந்தூர்
ஆ) நாகூர்
இ) பாப்பாவூர்
விடை : அ ) தேரெழுந்தூர்
5) சேக்கிழார் , காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ------- என்னும் ஊரில் பிறந்தார்.
அ) குன்றத்தூர்
ஆ) ஏனாத்தூர்
இ) காழியூர்
விடை : அ ) குன்றத்தூர்
6) திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்திலுள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்.
அ) திருவந்திபுரம்
ஆ) திருவாமூர்
இ) திருமாணிகுழி
விடை : ஆ ) திருவாமூர்
7) அப்பூதியடிகள் பிறந்த ஊர் -----
அ) பொங்கலூர்
ஆ) வெள்ளலூர்
இ) திங்களூர்
விடை : இ ) திங்களூர்
8) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் -----
அ) திருமறைக்காடு
ஆ) திருப்புவனம்
இ) திருவாரூர்
விடை : அ ) திருமறைக்காடு
9) புகழேந்திப் புலவர் பிறந்த ஊர்
தொண்டை நாட்டில் உள்ள ------
அ) படமாத்தூர்
ஆ) குளத்தூர்
இ) களத்தூர்
விடை : இ ) களத்தூர்
10 ) இராமலிங்க அடிகள் கடலூர்
மாவட்டத்திலுள்ள ------ எனும் ஊரில்
பிறந்தார்.
அ) மருதூர்
ஆ) மருதாடு
இ) மதலப்பட்டு
விடை : அ ) மருதூர்
11 ) வீரமாமுனிவர் பிறந்த நாடு -----
அ) பிரான்சு
ஆ) இத்தாலி
இ) ஜெர்மனி
விடை : ஆ ) இத்தாலி
12) ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலுள்ள ------ எனும் ஊரில் பிறந்தார்.
அ) நல்லூர்
ஆ) வில்லூர்
இ) செல்லூர்
விடை : அ ) நல்லூர்
13) ஜி.யு.போப் ------ நாட்டில் பிறந்தார்.
அ) கனடா
ஆ) ஆஸ்திரேலியா
இ) பிரான்சு
விடை : இ ) பிரான்சு
14 ) கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் ----- ல் பிறந்தார்.
அ ) காரைக்குடி
ஆ) வேட்டங்குடி
இ) சிறுகூடல்பட்டி
விடை : இ ) சிறுகூடல்பட்டி
15) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் -----
அ) திருவாதவூர்
ஆ) திருமோகூர்
இ) திருமங்கலம்
விடை : அ ) திருவாதவூர்
16) திரு.வி.க. சென்னைக்கருகில் உள்ள
------ என்னும் ஊரில் பிறந்தார்.
அ) மயிலம்
ஆ) துள்ளம்
இ) ஆலந்தூர்
விடை : ஆ ) துள்ளம்
17) உவமைக்கவிஞர் சுரதா பிறந்த ஊர் ----
அ) குன்றத்தூர்
ஆ) சென்னை
இ) பழையனூர்.
விடை : இ ) பழையனூர்.
18) நாமக்கல்லில் ------ என்னும் ஊரில்
இராமலிங்கம் பிறந்தார்.
அ) மோகனூர்
ஆ) கீரனூர்
இ) மலையனூர்
விடை : அ ) மோகனூர்
19 ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்தில் ----- எனும் ஊரில் பிறந்தார்.
அ) வாழப்பாடி
ஆ) இரும்பாலை
இ ) சமுத்திரம்
விடை : இ ) சமுத்திரம்
20 ) கவிஞர்.மீரா பிறந்த ஊர் -----
அ) மதுரை
ஆ) காரைக்குடி
இ) சிவகங்கை
விடை : இ ) சிவகங்கை
************** ************** ************
தேர்வு எழுதுவதற்கான இணைப்பு
0 Comments