TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - பொதுத்தமிழ் - பகுதி இ - 3 , புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா / TNPSC - TAMIL - PUTHUK KAVITHAI - CHELLAPPA

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 3

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா

சி.சு. செல்லப்பா

29.09.1912 இல் சின்னமனூரில் பிறந்தவர். வத்தலகுண்டில் வளர்ந்தவர்.

*பி.ஏ. படித்தபோது மகாத்மா காந்தியின் கொள்கை ஈடுபாட்டால் விடுதலைப்   போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

* சுதந்திர சங்கு என்ற இதழில் முதன் முதலாக எழுதத் தொடங்கினார்.

* மணிக்கொடி என்ற இதழ் இவரின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது.

* சரசாவின் பொம்மை” என்ற சிறுகதை வரைச் சிறந்த எழுத்தாளராக
அறிமுகப்படுத்தியது.

1947 - 1953 இல் தினமணிக் கதிரில் பணிபுரிந்தார்.

* 1958 இல் "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார்.

* மணிக்கொடி, கலாமோகினி இதழ்கள் நின்று போன தால் மறுமலர்ச்சி
எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உறுதுணையாக நின்றது “எழுத்து” என்ற இதழ்.
(119 இதழ்கள் மட்டுமே வெளிவந்தன).

* தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி “எழுத்து”.


எழுதிய நூல்கள்

* புதுக்கவிதை: மாற்று இதயம்

* சிறுகதைகள்: சரசாவின் பொம்மை, மணல்வீடு, அறுபது, சத்தியாக்ரகி, வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள்.

* நாவல்: வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திரதாகம்.

* விமர்சனம்: தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

* குறுங்காவியம்: இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது)

* பதிப்பித்த நூல்: புதுக்குரல்கள், பிச்சமூர்த்தி கவிதைகள்

* சுதந்திர தாகம் என்ற நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.

18.12.1998 இல் இயற்கை எய்தினார்.



Post a Comment

0 Comments