TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - புதுக்கவிதை - இரா.மீனாட்சி / TNPSC - TAMIL - PUTHUKKAVITHAI - IRA.MEENACHI

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 3

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை 

இரா.மீனாட்சி 

* 23 .01 . 1941 ல் திருவாரூரில் பிறந்தவர்

* பெற்றோர் - இராமச்சந்திரன் - மதுரம்

எழுதிய நூல்கள்:

கவிதை நூல்கள்: நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப் பகல், உதய நகரிலிருந்து, மறு பயணம், வாசனைப்புல், கொடிவிளக்கு.

* ஆங்கிலப் படைப்பு: இந்தியப் பெண்கவிகள் பேசுகிறார்கள்.

* எழுத்து, கணையாழி, தீபம்,  அன்னம்விடு தூது, கவி ஆகிய சிற்றிதழ்களில் கவிதை எழுதியர்.

* Seeds France, Dust and Dreams என்ற கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர்.

* பாரதி, பாரதிதாசனுக்குப் பின் பெண் உரிமை குறித்து அதிகம் எழுதியவர்.

* இவர் கவிதை முழுவதும் மீனாட்சி கவிதைகள் என்ற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. 191 கவிதைகள் உள்ளன.

மேற்கோள்:

"எவனோ எழுதி வைத்த

நிர்ணயிப்புகளை

அன்றாடம் ஒப்பிக்கும்

பேராசிரியப் பெருமக்களே

எங்களை

கீறல் இசைத்தட்டாக்காதீர்கள்”

"சொந்தக் கருப்பையைக்

குத்தகைக்கு ஏன் விடனும்

நாங்கள் கூட்டமாய்க் குரவையிட்டுக்

கன்னியராய் வீடு செல்வோம்”.

Post a Comment

0 Comments