TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி - பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தொண்டும் பகுதி - 4 , கவிமணி / TNPSC - TAMIL -TAMIL ARIGNARKALUM TAMILTH THONDUM - PART - 4

 


TNPSC - தமிழ்

பகுதி - இ 

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்



கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

* பெற்றோர் - சிவதாணு பிள்ளை, ஆதிலட்சுமி

* ஊர் - நாகர்கோயிலை அடுத்த தேரூர்

* இவரின் ஆசிரியர் சாந்தலிங்க தம்பிரான்

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியரானவர்.

நூல்கள்

*  மலரும் மாலையும்

* ஆசிய ஜோதி

* நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

*  காந்தளூர் சாலை

* தேவியின் கீர்த்தனைகள்

* உமர்கய்யாம் பாடல்கள்

* ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஏசியா' என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஆசிய ஜோதி

* இசைப் பாடல் நூல் - தேவியின் கீர்த்தனைகள்

மேற்கோள்

"உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்ப

ஊற்றெடுப்பது கவிதை

தெள்ளத்தெளிந்த தமிழில் -உண்மை

தெரிந்து உரைப்பது கவிதை”


“மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா”


"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - 

அவன்

பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பையடா"

Post a Comment

0 Comments