TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி - தமிழ் - பகுதி இ - 2 , தமிழ் அறிஞர்கள் - மரபுக்கவிதை / TNPSC - TAMIL - VAO - GROUP II , III , IV

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 2

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை

உடுமலை நாராயணகவி

* நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்

* சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்

* திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்

* பெற்ற பட்டம் கவிராயர்

பாடல்கள்

“போகாதே போகாதே என்கணவா
பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்”-மாயாஜோதி (கட்டபொம்மு கூத்து)

“பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே” - தூக்குத் தூக்கி

* "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பது ஏது” ரத்தக் கண்ணீர்

**************    *************   ************


பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம்

* பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்

* 'எனது வலதுகை' என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்

* முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா" என்பது

* சினிமாவில் இருந்தது ஒன்பது ஆண்டுகள் (1951 - 1959)

பாடல்கள்

* ' தூங்காதே தம்பி தூங்காதே
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கொண்ட கொள்கையில் தூங்கியவன் புகழ் இழந்தான்”

* “திருடாதே பாப்பா திருடாதே”

"காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்”

********************   ********  *************

மருதகாசி

* இவரின் ஆசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரர் ராஜகோபாலையர்


* முதல் முதலில் எழுதிய படம் மாயாவதி

* சம்பூர்ண ராமாயணப் படப் பாடல்கள் முழுவதும் எழுதியவர்

* “ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே"
53 வரிகளில் இராமாயணச் சுருக்கமாக அமைந்தது

* 1968இல் கலைமாமணி விருது

*  “மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது


பாடல்கள்


“ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை”
பிள்ளைக் கனியமுது

“நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" - சதாரம்

“வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகுதூரமில்லை” -  மந்திரிகுமாரி



Post a Comment

0 Comments