தேசிய கல்வி தினம் - அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் ( 11 - 11 - 2021 ) சிறப்பு இயங்கலைத் தேர்வு / NATIONAL EDUCATION DAY 11 - 11 - 2021 - ONLINE TEST

 

தேசிய கல்வி தினம் ( நவம்பர் 11) 

சிறப்பு வினாடி வினா - இயங்கலைத் தேர்வு 


மௌலானா அபுல்கலாம் ஆசாத் 

                  பிறந்த தினம்

வினா உருவாக்கம் - 

'பைந்தமிழ் மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர், மதுரை .


80% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
கிடைக்கவில்லை எனில்
97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

*****************   *************   *********

1) தேசிய கல்வி தினம் இந்தியாவில் ----- நாளில் கடைப்பிடிக்கப் படுகிறது.

அ) நவம்பர் 1

ஆ) நவம்பர் 11

இ) டிசம்பர் 01

ஈ) டிசம்பர் 11

விடை : ஆ ) நவம்பர் 11

2) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ----- 

அ) அபுல்கலாம் ஆசாத்

ஆ) அப்துல்கலாம்

இ) அம்பேத்கர்

ஈ) நரசிம்மராவ்

விடை : அ ) அபுல்கலாம் ஆசாத்.

3) ஆசாத் என்ற சொல்லின் பொருள் -----

அ) மகிழ்ச்சி

ஆ) விடுதலை

இ) நேர்மை

ஈ) கண்ணியம்

விடை : ஆ ) விடுதலை

4) 1992 ஆம் ஆண்டு அபுல்கலாம்
ஆசாத் மறைவிற்குப் பின் வழங்கப்பட்ட விருது

அ) பாரத ரத்னா

ஆ) தாமரைத்திரு

இ) பத்மவிபூஷன்

ஈ) பத்மபூஷன்

விடை : அ ) பாரத ரத்னா


5 ) ' கற்கை நன்றே கற்கை  நன்றே பிச்சை புகினும் கற்கை
நன்றே ' என்று கூறும் நூல் -----

அ ) நீதிநெறி விளக்கம்

ஆ) வெற்றி வேற்கை

இ) புறநானூறு

ஈ) ஆத்திசூடி

விடை : ஆ ) வெற்றி வேற்கை 

6) ' கல்வி கரையில் கற்பவர்
நாள் சில' என்று ------ நூல் கூறுகிறது.

அ ) நாலடியார்

ஆ) நான்மணிக்கடிகை

இ) ஏலாதி

ஈ) திருக்குறள்

விடை : அ ) நாலடியார்

7) கற்கக் கசடற' - என்று கூறும் நூல்

அ) ஆத்திசூடி

ஆ) இன்னிலை

இ) திருக்குறள்

ஈ) பழமொழி

விடை : இ ) திருக்குறள்

8) ' கல்விக்கழகு ------  மொழிதல்

அ) கவனமுடன்

ஆ) இனிமையுடன்

இ) மகிழ்வுடன்

ஈ) கசடற

விடை : ஈ ) கசடற

9 ) ' வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது' அது ------

அ) புகழ்

ஆ) கல்வி

இ ) மானம்

ஈ) செல்வம்

விடை : ஆ ) கல்வி 

10) ' கண்ணுடையர் என்போர் ------

அ) கற்றோர்

ஆ) பெற்றோர்

இ) மற்றோர்

ஈ) உற்றோர்

விடை : அ ) கற்றோர் 

11 ) ' எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து " என்று கூறிய நூல் -------

அ) திருக்குறள்

ஆ) ஆசாரக்கோவை

இ) திரிகடுகம்

ஈ) நாலடியார்

விடை : ஈ ) நாலடியார்

12) மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் சிறப்புடையவன் ------

அ ) மன்னன்

ஆ) அமைச்சன்

இ) ஒற்றன்

ஈ) கற்றவன்

விடை : ஈ ) கற்றவன்

13) ' நீரளவே ஆகுமாம் நீராம்பல்
தான்கற்ற நூலளவே ஆகுமாம்
நுண்ணறிவு ' என்று கூறும் நூல்

அ) பழமொழி நானூறு

ஆ) மூதுரை

இ) புற நானூறு

ஈ) இனியவை நாற்பது


விடை : இ ) மூதுரை 

14) ' சங்கத் தமிழ் மூன்றும் தா
என விநாயகரிடம் கேட்டவர் ------

அ) ஔவையார்

ஆ) பாரதியார்

இ) பொன்முடியார்

ஈ) நாகம்மையார்

விடை : அ ) ஔவையார்

15 ) ' கற்றலின் ------ நன்று'

அ) கேட்டல்

ஆ) பார்த்தல்

இ) பேசுதல்

ஈ) எழுதுதல்

விடை : அ ) கேட்டல்

16 ) ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது
என்றவர் -----

அ) காமராசர்

ஆ) பாரதிதாசன்

இ) பாரதியார்

ஈ) அண்ணா

விடை : இ ) பாரதியார் 

17) கல்விக் கண்திறந்தவர் என்று புகழப்படுபவர் ------

அ ) இராஜாஜி

ஆ) பக்தவச்சலம்

இ ) காமராசர்

ஈ) எம்.ஜி.ஆர்.

விடை : இ ) காமராசர்

18 ) யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி தினமாகக் கொண்டாட்டப்படுகிறது?

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) அப்துல்கலாம்

இ) அபுல்கலாம் ஆசாத்

ஈ) அம்பேத்கர்

விடை : இ ) அபுல்கலாம் ஆசாத் 

19 ) தமிழகத்தின் தற்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு -------

அ) துரைமுருகன்

ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இ) தங்கம் தென்னரசு

ஈ) பொன்முடி

விடை : ஆ ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

20 ) தற்போது தமிழக அரசால்
அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் -------

அ ) இல்லம் தேடிகல்வி

ஆ) உள்ளம் தேடி கல்வி

இ ) வீட்டைத்தேடி கல்வி

ஈ) நாட்டைத்தேடி கல்வி

விடை : அ ) இல்லம் தேடி கல்வி

************************    *****************
தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.

Post a Comment

0 Comments