வகுப்பு - 10 , தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 4
பழமொழி , மரபுத்தொடர் , செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்
( வினாக்களும் விடைகளும்
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே நான்காவது செயல்பாடாக உள்ள பழமொழி , மரபுத்தொடர் , செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
4 பழமொழி, மரபுத்தொடர்,செய்யுள்
அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்
கற்றல் விளைவு :
படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளைப் பழமொழி என்பர். ஒரு கருத்தை, பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்குவன பழமொழிகள். மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்வதே பழமொழியாகும். பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது.
(எ.கா.)
"மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே"
விளக்கம் :
ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது.
(குறிப்பு-மண்குதிர்- மண்மேடு/ மண்திட்டு)
பழமொழியைச் சொற்றொடரில் அமைத்தல்:
"குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான்.
பழமொழித் தொடரை நிறைவு செய்க.
அகத்தின் அழகு
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அறிமுகம்:
சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்ப்பொருளை உணர்த்தாமல் வேறு குறிப்புப் பொருளைத் தந்து நிற்பது மரபுத்தொடர் எனப்படும்.
விடைத்தயாரிப்பு
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி ,மேலூர் , மதுரை.து
************* ************* **************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments