11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 30 , பாரதியார்
கற்றல் விளைவுகள்
* பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுதல்.
* பாரதியின் படைப்புகளில் உள்ள சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுதல்.
* பாரதியின் தேசப்பற்று, மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றைப் புரிந்துகொள்ளல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களே! 'மகாகவி' என்று அழைக்கப்படுபவர் யார்? என வினா எழுப்பி மாணவர்கள் விடையளித்தபின் பாரதியின் தோற்றம், சிறப்பு, படைப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு :1
எட்டயபுரம் என்ற ஊரில் சின்னசாமி - இலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதியார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். 11 ஆம் வயதில் கவிபுனையும் ஆற்றல் பெற்றதால் "பாரதி "என்ற பட்டம் பெற்று அதுவே நிலைத்தது. தந்தையிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் பயின்றார்.
பாரதியின் ஞானகுரு நிவேதிதா தேவி, அரசியல் குரு திலகர். ஆங்கிலப் புலவர் ஷெல்லியிடம் அளவிலா ஈடுபாடு கொண்டு தம்மை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார். இவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் ஊற்றுக்கண்.
செயல்பாடு : 2
தமிழிலே தோன்றிய முதல் சுயசரிதம் பாரதியாரின் சுயசரிதம். முதல் உரைநடைக் காவியம் அவருடைய ஞானரதம் பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார். பதஞ்சலியார் சூத்திரத்திற்கு உரை வகுத்தார். இவர் ஆங்கிலம், இந்தி, வடமொழி, பிரெஞ்சு, வங்காளி, ஜெர்மன், இலத்தீன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
பாரதியாரின் நூல்கள்
* கண்ணன் பாட்டு
* குயில் பாட்டு
* பாஞ்சாலி சபதம்
* புதிய ஆத்திசூடி
* பாரதி 66
* பாப்பா பாட்டு
* நவதந்திரக் கதைகள்
பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலை, தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் இவற்றைப் பக்திப் பாடல்களில் அடக்கலாம். தேசபக்திப் பாடல்களாக அவர் பாடியவை பலவாகும். ' 'பாரத நாடு' என்று தலைப்பில் 19 பாடல்களையும் தமிழ்நாடு, மொழி என்ற தலைப்பில் ஆறு பாடல்களையும் சுதந்திரம் பற்றி ஆறு பாடல்களையும் இயற்றியுள்ளார்.
பாரதியாரின் நூல்கள்
* கண்ணன் பாட்டு
* குயில் பாட்டு
* பாஞ்சாலி சபதம்
* புதிய ஆத்திசூடி
* பாரதி 66
* பாப்பா பாட்டு
* நவதந்திரக் கதைகள்
0 Comments