மனம் கவரும் மரம்
இசைப்பாடல்
சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க !
இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க !
மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான் !
மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான் !
பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான் ! - அதைப்
பொக்கிஷமாய்க் காக்க வேணும் மனிதர்தான் !
மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்கு தாயடா !
மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா !
உறவு போல பறவைக் கூட்டம் வருகுது !- பழம்
உண்ட பின்னே பாடல்களைத் தருகுது !
எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது !
மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது !
வீடிருக்கும் நண்பர்களே வாருங்கள் !
வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள் !
பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள் !
பிள்ளை போல மரங்களைப் பாருங்கள் !
பாடல் -
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
0 Comments