ஒப்படைப்பு - 2 - வினாத்தாள்
ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
(பள்ளிக்கல்வித்துறை வழங்கிய
முன்னுரிமைப் பாடத்திட்டத்தின்
அடிப்படையில்(2021-22) )
இயல் - 2
பெரிய புராணம், புறநானூறு
பகுதி - 1
ஒரிரு சொற்களில் விடை தருக.
1.நாயன்மார்களின் வரலாற்றை
விரிவாகக் கூறும் நூல் எது?
2.பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப்
பாடிய கவிவலவ எனச் சேக்கிழாரைப்
புகழ்ந்தவர் யார்?
3.கருங்குவளை-இலக்கணக்குறிப்பு
தருக.
4.பணிலம் என்பதன் பொருள் யாது?
5.போந்து என்பது எம்மரத்தின் பெயர்?
6.மல்லல் மூதூர் வயவேந்தே - வண்ணமிட்ட
சொல்லின் பொருள் என்ன?
7.வெட்சி முதலான புறத்திணைகளுக்குப் பொதுவான திணை எது?
8'உயிரை உருவாக்குபவர்கள் யார்?
9.'வான் உட்கும் வடிநீண் மதில்' எனத்
துவங்கும் புறநானூற்றுப் பாடலின்
ஆசிரியர் யார்?
10.மூதூர் என்பதைப் பிரித்து எழுதுக.
பகுதி - 2
சுருக்கமான விடை தருக.
11.பெரியபுராணம்-சிறுகுறிப்பு வரைக.
12.புறநானூறு-நூல் குறிப்பு வரைக.
13.உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே-குறிப்பு தருக.
14.நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது ?
15 ) நிலையான புகழைப்பெற யாது செய்ய வேண்டுமெனப் புறநானூறு கூறுகிறது ?
பகுதி - 3
விரிவான விடை தருக.
16 ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
17 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
*************** ************* ************
வினா உருவாக்கம்.
திரு.மணி மீனாட்சி சுந்தரம் அவர்கள் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையப்பட்டி , மதுரை.
***************** ************ ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments