ஒப்படைப்பு விடைகள்
வகுப்பு - 9 சமூகஅறிவியல்
புவியியல்
அலகு- 1
நிலக்கோளம்- புவி அகச்செயல்பாடுகள்
பகுதி - அ
1. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. புவி தன்னுள் ------------ கோளங்களை உள்ளடக்கியுள்ளது.
அ) 3 ஆ ) 4 இ ) 5 ஈ) 2
விடை : ஆ ) 4
2. புவிக்கோளங்களில் காற்றால் சூழப்பட்ட பகுதி --------
அ) நிலக்கோளம் ஆ) நீர்ககோளம்
இ) வளிக்கோளம் ஈ) உயிர்க்கோளம்
விடை : இ ) வளிக்கோளம்
3. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி....
அ) கவசம் ஆ) கருவம்
இ) மேலோடு ஈ) கண்டத்திட்டு
விடை : அ ) கவசம்
4. புவி அதிர்வு உருவாகும் புள்ளி ------ என்று அழைக்கப்படுகிறது.
அ) மேல்மையம் ஆ) கீழ்மையம்
இ) புவி அதிர்வு அலைகள்
ஈ) புவி அதிர்வின் தீவிரம்
விடை : ஆ ) கீழ்மையம்
5. முதன்மைப் பாறைகள் -------- என்றும் அழைக்கப்படுகின்றன
அ) படிவுப்பாறைகள் ஆ) தீப்பாறைகள்
இ) உருமாறிய பாறைகள் ஈ) தாய்ப்பாறைகள்
விடை : ஆ ) தீப்பாறைகள்
பகுதி-ஆ
1. குறு வினா:
1. புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக?
* புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் ஆகும்.
* புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.
* புவியின் மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் துருவப்பணி பாலங்களால் ஆன நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.
* உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.
2. புவியின் உள் அடுக்குகள் யாவை?
* புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
3. ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?
* ஆழிப்பேரலைகள் (சுனாமி) என்பது துறைமுக அலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல் ஆகும்.
* கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு மற்றும் கடலோரப்பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் இப்பெரிய அலைகள்
உருவாகின்றன
4. பாறைகளின் வகைகள் யாவை?
* 1. தீப்பாறைகள்
2. படிவுப் பாறைகள்
3. உருமாறிய பாறைகள்
5. புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
* புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.
* புவித்தட்டுகளின் நகர்வு புவி அதிர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.
பகுதி- இ
II. பெரு வினா
1. புவி அமைப்பை விவரி?
புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
புவி மேலோடு (Crust)
* நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவிமேலோடு என்கிறோம்.
* புவியின் தோல் போன்று புவிமேலோடு உள்ளது.
* இது 5 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.
* புவிமேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம்(AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
கவசம் (Mantle)
* புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் (Mantle) எனப்படும்.
* இதன் தடிமன் சுமார் 2900 கிலோமீட்டர் ஆகும்.
* கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.
கருவம் (Core)
* புவியின் கவசத்திற்குக்கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம்
எனப்படுகிறது.
* இது மிகவும் வெப்பமானது. கருவத்தில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe)
அதிகமாகக்காணப்படுவதால், இவ்வடுக்கு நைஃப்(NIFE) என அழைக்கப்படுகிறது.
2. எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
நன்மைகள்
* எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது. அதனால் வேளாண்தொழில் மேம்படுகிறது.
* எரிமலைகள் உள்ளபகுதிகள் புவி வெப்பசக்தியை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
* உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களாக உள்ளன.
* எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத்தொழிலுக்குப் பயன்படுகிறது.
தீமைகள்
* எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர்வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை
சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
* வெகுதூரம் பயணிக்கும் பாறைக் குழம்பானது தன் பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
* அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
* எரிமலைவெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை
ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
*************** ************* *************
விடைத்தயாரிப்பு
திருமதி.ச.இராணி அவர்கள் ,
பட்டதாரி ஆசிரியை ,
அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி ,
இளமனூர் , மதுரை.
************** *************** ***********
1 Comments
மு.
ReplyDeleteசக்திவேல்