8 - தமிழ் - ஒப்படைப்பு - 2 , இயல் 2 - முன்னுரிமைப் பாடத்திட்டத்தின்படி( 2021 - 22 ) உருவாக்கப்பட்ட வினாத்தாள் / 8th TAMIL - ASSIGNMENT 2 - UNIT 2 - REDUCED SYLLABUS - QUESTION

 


          ஒப்படைப்பு - 2 - வினாத்தாள் 

                 எட்டாம் வகுப்பு - தமிழ்

( இயல் - 2: ஓடை, திருக்குறள், வினைமுற்று)

                               பகுதி-அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்

அ) பாரதிதாசன். ஆ ) பாரதியார்

இ ) வாணிதாசன். ஈ ) வெ.இராமலிங்கனார்


2.'ஓடை' - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்

அ.கொடிமுல்லை. ஆ. தொடுவானம்

இ.எழிலோவியம். ஈ. குழந்தை இலக்கியம்


3.நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

அ.தாலாட்டு                 ஆ.கும்மிப்பாட்டு

இ.வள்ளைப்பாட்டு.       ஈ.எதுவுமில்லை


4.'சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் - இத்தொடரில் வண்ணமிடப்பட்ட சொல்லின் பொருள்

அ.இசைக்கருவி.        ஆ.வெட்கம்

இ.நெற்பயிர்                ஈ.பாடல்


5. செஞ்சொல் -   பிரித்து எழுதக் கிடைப்பது

அ.செம்மை+சொல்   ஆ.செம்+சொல்

இ.செஞ்+சொல்.          ஈ.செஞ்சை+சொல்


6.நேற்று மாமா வீட்டுக்கு வந்தார். - இத்தொடரிலுள்ள வினைமுற்று

அ.மாமா.              ஆ.வீடு

இ.வந்தார்           ஈ.நேற்று


7.பயனில்லாத களர்நிலத்துக்கு ஒப்பானவர்கள்

அ.வலிமையற்றவர     ஆ.கல்லாதவர்

இ.ஒழுக்கமற்றவர்      ஈ.அன்பில்லாதவர்


8.பெருநாவலர் ,  முதற்பாவலர், நாயனார்
முதலிய சிறப்புப் பெயர்களால்
குறிப்பிடப்படுபவர்

அ.திருவள்ளுவர்.         ஆ.தொல்காப்பியர்

இ.இளங்கோவடிகள்.    ஈ.புகழேந்தி


9.நெடுமை+தேர் என்பதைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்

அ.நெடு+தேர்.                    ஆ.நெடுந்தேர்

இ.நெடுத்தேர்             ஈ.நெடுமைத்தேர்


10.பின்வருவனவற்றுள் வியங்கோள்
வினைமுற்றுச் சொல்

அ.ஓடு.             ஆ.வாழ்க

இ.எழுது.          ஈ.பாடு


                              பகுதி-ஆ

சுருக்கமான விடை தருக

11.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை
உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

12.சான்றோர்க்கு அழகாவது எது?

13.குறளைச் சீர்பிரித்து எழுதுக.

தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால்
காணப்படும்.

14.தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

15.தொடர்களை மாற்றுக.

அ.மல்லிகைப்பூ மிகவும் மணமிக்கது.
  (  உணர்ச்சிக் தொடராக மாற்றுக)

ஆ.தினமும் கல்வித்தொலைக்காட்சியைப்
பார். (செய்தித் தொடராக்குக)

16.எவ்வகைத் தொடர் எனக் கூறுக
அ ) ஆ!புலி வருகிறது!

ஆ ) நீ எத்தனை புத்தகங்களைப்
படித்திருக்கிறாய்?

17.எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.

அ ) உலக இயற்கை நாள் அக்டோபர் 3

ஆ ) உலக வனவிலங்கு நாள் - அக்டோபர் 6 


                                பகுதி - இ

விடை தருக.

18 ) ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன  யாவை ?

19 ) கல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தருக.

                               பகுதி - ஈ

செயல்பாடு 

20 ) படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.



**************     **************    *************

வினா உருவாக்கம்

திரு.மணி மீனாட்சி சுந்தரம் அவர்கள் , 

தமிழாசிரியர் ,    அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி   , மதுரை.

*************    ****************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

1 Comments