ஒப்படைப்பு
வகுப்பு: 8 பாடம்: அறிவியல்
அலகு-16 - பகுதி - அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
1.கீழ்க்கண்டவற்றுள் மிகசிறிய உயிரினம் எது?
அ) ஆல்கா ஆ) வைரஸ்
இ) பாக்டீரியா ஈ) பூஞ்சை
விடை : ஆ ) வைரஸ்
2.பாக்டீரியாவைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவிற்கு என்ன பெயர்?
அ) வைராலஜி
இ) கார்டியாலஜி
ஆ) பாக்டீரியாலஜி
ஈ) ஆர்னித்தாலஜி
விடை : ஆ ) பாக்டீரியாலஜி
3. கீழ்வருவனவற்றுள் செல்சுவரை சுற்றிகசை இழை காணப்படும் உயிரினம் எது?
அ) ரோடோஸ்பைரில்லம்
ஆ ) எ .கோலை
இ) சூடோமோனாஸ்
ஈ)விப்ரியோகாலரே
விடை : ஆ ) எ.கோலை
4. ஈஸ்ட்டில் நொதித்தல் எதன் மூலம் நடைபெறுகிறது?
அ) சைமேஸ் ஆ) அமைலேஸ்
இ) லேக்டேஸ் ஈ) பெப்சின்
விடை : அ ) சைமேஸ்
5.கீழ்க்கண்டவற்றுள் பச்சையத்தின் மூலம் உணவு தயாரிக்கும் உயிரி எது?
அ) பிரியான் ஆ) அமீபா
இ) பாரமீசியம் ஈ) யூக்ளீனா
விடை : ஈ ) யூக்ளினா
6.ஆல்கா வகையை சார்ந்த உயிரி எது?
ஆ) ரைசோபியம்
அ) நைட்ரோபாக்டர்
இ) கிளாமிடோமோனாஸ்
ஈ) பென்சிலியம்
விடை : இ ) கிளாமிடோமோனாஸ்
7.லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ் காணப்படும் மனித உறுப்பு எது?
அ) கல்லீரல்
ஆ)வயிறு
இ) குடல்
ஈ) மண்ணீரல்
விடை : இ ) குடல்
8.பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் எந்த உயிரினத்தைத் தாக்கும்?
அ) தாவரங்கள்
ஆ) மனிதன்
இ ) கால்நடைகள்
ஈ) எதுவும் இல்லை
விடை : இ ) கால்நடைகள்
9.சிட்ரஸ் கேன்கர் நோயை உண்டாகும் நுண்ணுயிரி எது?
அ) ஆப்தோவைரஸ்
ஆ) சாந்தோமோனாஸ்
இ) மைக்கோபாக்டீரியம்
ஈ) பைட்டோபைத்தோரா
விடை : ஆ ) சாந்தோமோனாஸ்
10.நுண்ணுயிரிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி எது?
(அ) மைக்ரோஸ்கோப்
ஆ) பெரிஸ்கோப்
ஈ) பைனாகுலர்
இ)கலைடாஸ்கோப்
விடை : அ ) மைக்ரோஸ்கோப்
பகுதி - ஆ
II. குறு வினா.
1.வைரஸ்களின் உயிரற்ற பண்புகளை எழுதுக.
* தன்னிச்சையான சூழலில் இவை செயலற்ற நிலையில் காணப்படுகின்றன .
* இவற்றைப் படிக்கமாக்கி பிற உயிரற்ற பொருள்களை போல நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும்.
2.ஈஸ்ட்டின் செல் அமைப்பு குறித்து எழுதுக.
* ஈஸ்ட்கள் வளிமண்டலத்தில் தன்னிச்சையாகக் காணப்படுகின்றன . ஈஸ்ட்கள் சர்க்கரை உள்ள அனைத்து ஊடகங்களிலும் வளர்கின்றன.
* இவற்றின் செல்கள் முட்டை வடிவம் உடையவை ,அவை செல்சுவர் மற்றும் உட்கருவைப் பெற்றுள்ளன . இவற்றின் சைட்டோபிளாசம் துகள் போன்றது. அதனுள் வாக்குவோல்கள் , செல் நுண்ணுறுப்புகள் , கிளைக்கோஜன் எனப்படும் எண்ணெய்த்துளிகள் ஆகியவை காணப்படுகின்றன.
* சைமோஸ் எனும் நொதியின் உதவியினால் ஈஸ்ட்கள் நொதித்தலில் ஈடுபடுகின்றன. இவை காற்றில்லா சூழலில் சுவாசிக்கின்றன . மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
3.ஆல்காக்கள் நீர்ப் புற்கள் என அழைக்கப்படக் காரணம் யாது?
* ஆல்காக்கள் எளிய , தாவர உடலமைப்பைப் பெற்ற யூகேரியோட்டிக் உயிரினங்கள் ஆகும் .ஆல்காக்கள் ஈரப்பதமான வாழிடங்களில் காணப்படுகின்றன.
* அதிக அளவில் பசுங்கணிகத்தைப் பெற்றுள்ள இவை ஏரிகள் மற்றும் குளங்களின் மேற்பரப்பில் மெல்லிய படலமாகக் காணப்படுகின்றன .
* எனவே இவை நீர்ப்புற்கள் என அழைக்கப்படுகின்றன.
4.புரோட்டோசோவாக்களின் வகைகள் யாவை?
* சிலியேட்டா : சிலியாக்களால் இடம் பெயர்கின்றன .
எ.கா - பாரமீசியம்
* பிளாஜெல்லேட்டா - கசையிழைகளால் இடம் பெயர்கின்றன .
எ.கா - யூக்ளினா
* சூடோபோடியா - போலிக் கால்களால் பெயர்கின்றன.
எ.கா - அமீபா
ஸ்போரோசோவா - ஒட்டுண்ணிகள் எ.கா - பிளாஸ்மோடியம்.
5.பிரியாங்கள் என்பவை யாவை?
* பிரியான் என்ற சொல் புரதத்தால் ஆன தொற்றுத் துகள் என்ற வார்த்தையிலிருந்து தரப்பட்டது பிரியான்கள் டி. என். ஏ மற்றும் ஆர். என் .ஏ .வைக் கொண்டிருப்பதில்லை எனவே இவை நோய்த்தொற்று ஏற்படுத்துவதில்லை.
* பிரியான்கள் என்பவை பொதுவாகத் திடீர் மாற்றமடைந்த தீங்கு தராத புரதங்கள் ஆகும். மூளையின் அமைப்பு அல்லது நரம்புத் திசுக்களைப் பாதிப்பதன் மூலம் இவை நோய்களை ஏற்படுத்துகின்றன.
* எ.கா - குயிட்ஸ் பெல்ட் , ஜேக்கப் நோய் மற்றும் எடுத்துக்காட்டு குரு ஆகும். இது ஊன் உண்ணிகளுடன் தொடர்புடையது.
பகுதி - இ
III. பெரு வினா.
1.உணவு பதப்படுத்துதலில் பயன் படுத்தப்படும் பாரம்பரிய முறைகள் குறித்து எழுதுக.
1 ) நொதித்தல் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை நுண்ணுயிரிகளின் உதவியினால் ஆல்கஹால் ஆக மாற்றுவது நொதித்தல் எனப்படும் இது உணவை மேலும் சத்து மிக்கதாகவும் சுவை உடையதாகவும் மாற்றுகிறது
2 ) ஊறவைத்தல் :
நுண்ணுயிர்க் கொல்லிகள் உள்ள திரவத்தில் உணவைப் பராமரிக்கும் உரை ஊறவைத்தல் எனப்படும் இது இரண்டு வகைப்படும்.
வேதியியல் முறை - நொதித்தல் முறை
வேதியியல் முறையில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திரவத்தில் வைத்து உணவுப் பொருள்கள் பராமரிக்கப்படுகின்றன .
எ.கா : வினிகர் , ஆல்கஹால் , தாவர எண்ணெய் .
* நொதித்தல் முறையில் ஒரு குறிப்பிட்ட வகை திரவத்தில் உள்ள பாக்டீரியங்கள் உணவைப் பாதுகாக்கும் கரிம அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. அந்த அமிலங்கள் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா மூலம் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.
3 ) கொதிக்க வைத்தல்
திரவ நிலையிலுள்ள உணவுப் பொருள்களைப் கொதிக்க அதன் மூலம் அவற்றிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப் படுகின்றன .
எ.கா : பால், நீர்
4 ) இனிப்பிடுதல் :
ஆப்பிள் , பேரிக்காய் , பீச் , பிளம் போன்ற பழங்கள் சர்க்கரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கெட்டியான திரவத்தில் பதப்படுத்தப் படுகின்றன . அல்லது படிக நிலையிலுள்ள சர்க்கரையை பழங்களுடன் சேர்ப்பதன் மூலம் அவை உலர்ந்த நிலையில் பாதுகாக்கப்படுகின்றன.
பகுதி - ஈ
IV.செயல்பாடு
************** ************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments