பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - கற்கண்டு - தொகாநிலைத் தொடர்கள் - பகுதி 2 - விளி , வினைமுற்று , பெயரெச்ச & வினையெச்சத் தொடர்கள் / 10 TAMIL - EYAL 3 - KARKANU - THOKANILAITH THODARKAL - PART - 2

 

                         வகுப்பு - 10 , தமிழ் 

                       இயல் 3 - கற்கண்டு

     தொகாநிலைத் தொடர்கள் - பகுதி - 2

               2 ) விளித்தொடர் 

           3 ) வினைமுற்றுத்தொடர் 

         4 ) பெயரெச்சத்தொடர் 

       5 ) வினையெச்சத்தொடர் 


**************    **************   ***********

             வணக்கம் நண்பர்களே ! இன்றைய வகுப்பில் நாம் இயல் மூன்றில் கற்கண்டாக அமைந்துள்ள தொகாநிலைத் தொடர்கள் பற்றிக் காண்போம். இதை மூன்று பகுதிகளாகக் காட்சிப் பதிவு விளக்கத்துடன் காணலாம்.

                முதல் பதிவில் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன என்பது பற்றியும் , எழுவாய்த்தொடர் என்றால் என்ன என்பது பற்றியும் விரிவாகக் கண்டோம்.

            இரண்டாவது பதிவில் விளித்தொடர் , வினைமுற்றுத்தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் பற்றி விரிவாகக் காண்போம்.

             முதலில் நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போமா ?




காட்சிப் பதிவில் கற்கண்டின் சுவையை உண்டீர்களா ? இனி , எழுத்து வடிவத்தில் காண்போம்.


2. விளித்தொடர் 

                        விளியுடன்  வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

நண்பா எழுது!   --- "நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.


3. வினைமுற்றுத்தொடர் 

                             வினை முற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

பாடினாள் கண்ணகி

"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில்
நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

4. பெயரெச்சத்தொடர் 

                     முற்றுப் பெறாத வினை
பெயர்ச் சொல்லைத் தொடர்வது
பெயரெச்சத்தொடர் எனப்படும். 

கேட்ட பாடல் "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.


5. வினையெச்சத்தொடர் 

          முற்றுப்  பெறாதவினைச் சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.

             பாடி மகிழ்ந்தனர் "பாடி" என்னும்
எச்சவினை 'மகிழ்ந்தனர்" என்னும்
வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

****************     ************   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********


Post a Comment

0 Comments