பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திருக்குறள் - பாடப்பகுதி குறுவினா & சிறுவினா - வினா விடைகள் / 10th TAMIL - EYAL 3 - THIRUKKURAL - QUESTION & ANSWER

 

                 பத்தாம் வகுப்பு - தமிழ் 

                             இயல் - 3 

      வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள்

 


குறுவினா 

1 ) நச்சப்படாதவன் செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

' நச்சப்படாதவன் ' செல்வம் : பொருள் -

                         பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.


2 ) கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இ்ல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம் , துய்ப்பதூஉம்  - இன்னிசை அளபெடை


3 ) பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

* உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்  - ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.

* உயிரினும் ஓம்பப் படும் - உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.

* நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று - ஊரின் நடுவே நச்சு மரம் பழுத்தது போன்றது.


4 ) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது ?

அ ) கூவிளம் தேமா மலர்

ஆ ) கூவிளம் புளிமா நாள்

இ ) தேமா புளிமா காசு

ஈ ) புளிமா தேமா பிறப்பு 

விடை : அ ) கூவிளம் தேமா மலர்


  சிறுவினா

1 ) வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலோடு நின்றான் இரவு.

    - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி .

அணி விளக்கம் 

              உவமை , உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு அமைவது உவமையணி ஆகும்.

அணிப்பொருத்தம் 

 உவமேயம் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டு அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதித்தல்.

உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல்.

உவம உருபு : போலும்

         ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதித்தல் , வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதைப் போன்றதாகும்.

*************     ************   **************

Post a Comment

0 Comments