ஒப்படைப்பு
வகுப்பு:10 பாடம்: தமிழ் - இயல் -1
வினக்களுக்கான முழுமையான விடைகள்.
பகுதி - அ
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?
அ. சேரன்
ஆ. சோழன்
இ. பாண்டியன்
ஈ. பல்லவன்
விடை : இ ) பாண்டியன்
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. கால்டுவெல்
ஆ. மாக்ஸ்முல்லர்
இ. க. அப்பாத்துரை
ஈ. தேவநேயபாவாணர்
விடை : அ ) கால்டுவெல்
3. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது யாது?
அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ. ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ. வணிகக்கப்பல்களும் அணிகலன்களும்
விடை : இ ) ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
அ. இளங்குமரன்
ஆ. வேதாசலம்
இ. விருத்தாசலம்
ஈ. துரை மாணிக்கம்
விடை : ஈ ) துரை மாணிக்கம்
5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ. பெருஞ்சித்திரனார்
ஆ. திரு.வி.க
இ. அப்பாத்துரையார்
ஈ. இளங்குமரனார்
விடை : ஈ ) இளங்குமரனார்
6. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. கட்டை
ஆ. கொழுந்தாடை
இ. செம்மல்
ஈ. முறி
7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
அ. தாள்
ஆ. கூலம்
இ. சண்டு
ஈ. சருகு
விடை : அ ) தாள்
8. இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
ஆ. உவமை
இ. சிலேடை
அ. பிறிதுமொழிதல்
ஈ. தனிமொழி
விடை : இ ) சிலேடை
9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
இ. ஐந்து
ஈ. ஒன்பது
ஆ. ஆறு
அ. பத்து
விடை : அ ) பத்து
10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
அ. ஒற்றளபெடை
ஆ. உயிரெளபெடை
இ. இன்னிசையளடை
ஈ. சொல்லிசை அளபெடை
விடை : இசைநிறை அளபெடை
பகுதி - ஆ
II. குறுவினா
11. தமிழக்கும் கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக.
தமிழ்
முத்தமிழ் - இயல் , இசை , நாடகம் ஆகிய முத்தமிழ்
முச்சங்கம் - முதல் , இடை , கடை ஆகிய முச்சங்கம்
மெத்தவணிகலன் - ஐம்பெருங்காப்பியங்கள்
சங்கத்தவர் காக்க - சங்கப்பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை.
கடல்
முத்தமிழ் - முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
முச்சங்கம் - மூன்று வகையான சங்குகள் தருதல்
மெத்தவணிகலன் - மிகுதியான வணிகக் கப்பல்கள்
சங்கத்தவர் காக்க - நீரலையத் தடுத்து நிறுத்திச் சங்கினைக் காத்தல்
12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.
பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு - இளம் காய்
வடு - மாம்பிஞ்சு
மூசு - பலாப் பிஞ்சு
கவ்வை - எள் பிஞ்சு
இளநீர் - முற்றாத தேங்காய்
கருக்கல் - இளநெல்
கச்சல் - வாழைப்பிஞ்சு
13 ) தேவநேயப் பாவாணர் குறிப்பு வரைக.
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் பாவாணர் பல்வேறு இலக்கண கட்டுரைகளையும் , மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
14. இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது?
உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு எடுத்துக்காட்டு உவமையணி என்று பெயர். எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு என்கிறோம்.
15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா.
வினையடி விகுதி தொழிற்பெயர்
நட தல் நடத்தல்
வாழ் கை வாழ்க்கை
பகுதி - இ
III. நெடுவினா
16. அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
அன்னை மொழியே! அழகாய் அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத் தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.
17. தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக..
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
5 Comments
Very nice thanks to all
ReplyDeletePls send 12cls assaingnent Maths physics Chemistry
ReplyDeleteVery useful thanks 😊
ReplyDeleteOne mark 3 question answer is wrong❌❌
ReplyDeleteTqqqq
ReplyDelete