ஆறாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - பயிற்சித்தாள் 9 - வாழ்வியல் - திருக்குறள் - 6 TAMIL - WORKSHEET - 9 , QUESTION & ANSWER

 

ஆறாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2

பயிற்சித்தாள் - 9

வாழ்வியல் - திருக்குறள்


***********    ***************    *************


1. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாதது எது?

அ) தெய்வப்புலவர்

ஆ) வான்புகழ் வள்ளுவர்

இ ) பாவேந்தர்

ஈ) பொய்யில் புலவர்

விடை: இ. பாவேந்தர்

2. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் -------- --  ஆகும்.

அ) 1330

ஆ) 1300

இ ) 10

ஈ ) 133

விடை:  ஈ ) 133

3. திருக்குறளில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை ---------   ஆகும்.

அ) 133

ஆ 1330

இ ) 1300

ஈ) 10

விடை : ஆ. 1330

4. திருக்குறள் ---------  நூல்களுள் ஒன்று.

அ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) எட்டுத்தொகை

இ) பத்துப்பாட்டு

ஈ ) ஐம்பெருங்காப்பியம்

விடை: அ. பதினெண்கீழ்க்கணக்கு

5. குறளைப் படித்து வினாவிற்கு விடையளிக்க.

குறள் : கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள் : உரியகாலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.

வினா

மழையின் இயல்புகள் யாவை?

விடை: உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும், உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழையின் இயல்புகள் ஆகும்.

6. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு".

இக்குறளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்தெழுதுக.

விடை: அகர , பகவன் - க - எதுகை

7. கோடிட்ட இடங்களை நிரப்புக.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்".

பொருள் : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.

அ) முடியாத செயலையும் செய்து முடிப்பவர் பெரியோர் ஆவார்.

ஆ) சிறிய வேலையைக் கூட கண்டு அஞ்சுபவர் சிறியோர். ஆவார்.

8 ) குறளைப் படித்து வினாவிற்கு விடையளிக்க.

குறள் : அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள் : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும்தான்.

வினா

குறளின்படி தீயவன் ஒருவனின் உடல் எப்படிப்பட்டது?

விடை: தீயவனின் உடல் எலும்பும் தோலும் நிறைந்தது.

9. கீழ்க்காணும் குறளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்தெழுதுக.

"இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று".

விடை:   இனிய , இன்னாத - இ - மோனை

10. குறிப்புகளைப் படித்துப் பார்த்து, கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானவற்றைத் தெரிவு செய்து குறுக்கெழுத்துப் புதிரை நிரப்புக.

இடமிருந்து வலம்

1) திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர் 

2) இது இருப்பதுதான் உயிருள்ள உடல் -  அன்பு

மேலிருந்து கீழ்

3) மிகச் சிறந்த அணிகளுள் ஒன்று - 

இன்சொல்

4) எழுத்துகளுக்குத் தொடக்கம் - அகரம்

வலமிருந்து இடம்

5) உரிய காலத்தில் பெய்து காப்பது - 

மழை

6) திருக்குறளின் சிறப்புப் பெயர் - வாயுறை வாழ்த்து

கீழிருந்து மேல்

7) முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர்  - பெரியோர்

8) இது இருக்கும்போது காயை உண்ணக்கூடாது - கனி

*************     ************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments