வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று ஒரு அழகான ஓவியத்தை நம்முடைய ஓவிய ஆசிரியை திருமதி.இலஷ்மி பிரதிபா நமக்கு வரைந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
நம்ம வீட்ல செல்லப்பிராணிகளா என்னென்னால்லாம் வளர்ப்போம் ? அப்படினு கேட்டா நீங்க நிறையச் சொல்விங்க இல்லயா ? பூனை , நாய் , லவ்பேர்ட்ஸ் , அப்றம் கிளி .
இன்று நாம வரையப்போற அழகுப் பறவை எதுன்னா அது கிளிதான். எவ்ளோ அழகான பறவை . கிளியை நினைச்சாலே மகிழ்ச்சிதான்.
நீங்க கூட அடிக்கடி ஒரு கிளி பாட்டு பாடுவிங்களே !
பச்சைக்கிளியே வா வா !
பாலும் சோறும் உண்ண வா !
கொச்சி மஞ்சள் பூச வா !
கொஞ்சி விளையாட வா !
பையப் பைய பறந்து வா !
பாடிப் பாடிக் களித்து வா !
கையில் வந்து இருக்க வா !
கனி அருந்த ஓடி வா !
ஆகா ! அருமையாப் பாடுனிங்க. இப்ப நாம கிளியை எப்படி வரையலாம் அப்படினு ஒவ்வொரு படிநிலையாப் பாக்கலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
இதோ உங்க கிளி கிளையில் !
என்ன செல்லக் குழந்தைகளே ! நீங்களும் அழகா வரைஞ்சிருக்கிங்க. வாழ்த்துகள். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைஞ்சு பழகுங்க. உங்களுக்கு ஆர்வமா இருக்கும். நிஞ்சா கட்டோரிய நினைக்காதிங்க.
பெற்றோர்களே ! தங்கள் குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள். படி படி என வார்த்தை ஊசியால் குத்தாதீர்கள்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஓராயிரம் திறமை !
அதை ஊக்குவிப்பதே நம் கடமை !
வாழ்த்துகள்.
வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா அவர்கள் , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
********************** *****************
0 Comments