பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , இயற்கை - விரிவானம்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
********************** *******************
வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் இன்று இயல் இரண்டில் இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த பகுதியில் உள்ள விரிவானம் - புயலிலே ஒரு தோணி என்ற பகுதியைப் படிக்க இருக்கின்றோம். பாடப் பகுதிக்குச் செல்லும்முன் நுழையும்முன் என்ற பகுதியில் உள்ள செய்தியைக் காண்போம்.
நுழையும்முன் :
இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போது இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதே இயற்கையின் அசைவு சீற்றமாய், ஊழித் தாண்டவமாக மாறுகையில் எதிர்நிற்க இயலாது தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ள இயற்கை நம்மைச் சுருட்டிச் செல்ல எத்தனிக்கும்போது, புயலின் பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில் கிடைக்கும் பட்டறிவு அனைவருக்கும் பயன்படும் இலக்கியமாகிறது. இந்த நெடுங்கதையின் சில பக்கங்களும் அப்படித்தான்... புயலின் சீற்றத்தைக் கண்முன் விவரிக்கின்றன , புயல் மழை தெறிக்கும் அக்காட்சி....
நூல் வெளி
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 - 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதிஇங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
******************** *****************
மாணவ நண்பர்களே ! நாம் கதைக்குள் செல்லும் முன்பாக இக்கதை குறித்து நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தைக் காண்போம்.
********************** *******************
முகத்தில் வெள்ளம். உடலில் வெள்ளம். கால் கையில் வெள்ளம். உடை இறுக்கியிறுக்கி ரம்பமாய் அறுக்கிறது. மரத்தூண், கல்தூண், இரும்புத்தூண், உயிர்த்தூண். தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு, கும்மிருட்டு, குருட்டிருட்டு. சிலுசிலு மரமரப்பு. நொய்ங் புய்ங் நொய்ங் புய்ங் நொய்ங் புய்ங். இடி முழக்கச் சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. மூடைகள் சிப்பங்கள் நீந்தியோடி மறைகின்றன. தொங்கான் குதித்து விழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக்கூத்தாடுகிறது. கடலலை அடிக்கிறது...
என்னயிது! சூரிய வெளிச்சம்! சூரியன் சூரியன் சூரியன் தொங்கானில் நீர் நெளிகிறது. பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. பொத்துக் கொப்புளிக்கும் பவ்வ நீரை மாலுமிகள் இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைக்கிறார்கள். ஆப்பு அடிக்கிறார்கள். மரம் வெட்டுகிறார்கள், செதுக்குகிறார்கள்...
தொங்கானின் இருபுறமும், பின்னேயும் தேயிலைப் பெட்டிகளும் புகையிலைச் சிப்பங்களும் மிதந்து வருகின்றன. பாண்டியன் நாற்புறமும் கடலைப் பார்த்து மலைத்து நின்றான்.
கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை.
தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்றுபோயிருந்தன.
தொங்கான் தன்வசமின்றித் தடுமாற செல்கிறது. கடற்கூத்தின்போது மாலுமிகளால் தூக்கி எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும் மூடைகளும் மிதந்து உடன் வந்தன. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முற்றாகத் தெளிச்சி பெறவில்லை. பினாங்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எப்போது போய்ச் சேரலாம்? பதில் சொல்வார் யாருமில்லை.
இரவில் மேல் தட்டுக்கு வந்து கப்பித்தான் வானையும் கடலையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டுத் தலையைச் சொறியலானான். பாண்டியன் நெருங்கிச் சென்று நிலவரத்தைக் கேட்டான். கப்பித்தான் சீனமும் மலாயும் கலந்த மொழியில் சொன்னான்.
"இனிமேல் பயமில்லை. இரண்டு நாளில் கரையைப் பார்க்கலாம்."
அன்றிரவு யாரும் உண்ணவில்லை; பேச்சாடவில்லை.
மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாய், முந்தியதைத் தொடர்ந்த பிந்தியதாய் வந்து மொத்து மொத்தென்று தொங்கானை மோதின. பறவை மீன்கள் இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின.
தொங்கான் மிதந்து சென்றது, கடலின் இழுவைக்கிணங்கி.
பகல் இரவாகி பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம் சிந்திற்று - கருநீலவானில் விண்மீன்கள் ஒளியுடன் கண் சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது. அவுலியா மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகளென முனகல் ஒலியோடு பின் தொடர்ந்தன.
அலைகள் நெளிந்தோடின.
கடற்கூத்துக்குப் பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய்க் கடலோடு கடலாய் மரப்பச்சை தெரிவது போலிருந்தது.
சுமார் அரைமணி நேரத்துக்குப் பின் மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன.
கரை! கரை! கரை!
அடுத்தநாள் முற்பகலில் பினாங்குத் துறைமுகத்தை அணுகினார்கள். மணிக்கூண்டு தெரிகிறது. வெல்ட்கீ கட்டட வரிசை. தெருவில் திரியும் வண்டிகள், ஆட்கள்...
தொங்கான் கரையை நெருங்கிப் போய் நின்றது. தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன. ஒவ்வொன்றிலிருந்தும் கேள்வி எழுந்தது.
"எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கிருந்துவருகிறீர்கள்?"
"பிலவான்... பிலவான்."
சுமத்ரா பிரயாணிகள் துடுப்புப் படசி
இறங்கிப் போய் நடைபாலத்தில் ஏற
நட ந்து சுங்க அலுவலகத்திற்குச் சென்று பிரயாணஅனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
"தமிரோ?" ஜப்பானிய அதிகாரி உறுமினார்.
"யா, மஸ்தா." தமிழர்கள்தாம் என்றுதலைகுனிந்து வணங்கித் தெரிவித்தனர்.
பிரயாணிகளைச் சில விநாடிகள்
நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில் முத்திரைவைத்துத் திருப்பிக் கொடுத்தார்.
********************* *******************
********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments