எட்டாம் வகுப்பு - தமிழ் - பயிற்சித்தாள் - 24 - இயல் 7 - கவிதைப் பேழை - விடுதலைத் திருநாள் - எழுத்து & காட்சிப்பதிவாக/ 8 TAMIL WORKSHEET - 24 - QUESTION & ANSWER

 

பயிற்சித்தாள் - 24 - இயல் 7

கவிதைப் பேழை - விடுதலைத் திருநாள்




**********************    *******************

1.'நிர்மூட உறக்கம்' எனக் கவிஞர் மீரா கூறுவதனைத் தெரிவுசெய்க.

அ) கல்லாமை என்னும் உறக்கம்

ஆ ) இயலாமை என்னும் உறக்கம்

இ) அறியாமை என்னும் உறக்கம்

ஈ) இல்லாமை என்னும் உறக்கம்

விடை: இ ) அறியாமை என்னும் உறக்கம்

2. சொல்லையும் பொருளையும் பொருத்துக.

வ.எண்               சொல்        விடை

அ  )             ஆனந்தம்            மகிழ்ச்சி

ஆ )             தரிசனம்             காட்சி

இ )             தேசம்                    நாடு

ஈ )           சத்தியம்                  உண்மை


3. பிரித்தெழுதுக.

அ) விரட்டியடித்து -  விரட்டி + அடித்து

ஆ) குங்குமப்பொட்டு-குங்குமம் + பொட்டு

இதந்தரும் - இதம் + தரும்


4. கீழ்க்காணும் சொற்களைத் தொடரில் அமைத்தெழுதுக.

அ) விடியல் - ஒவ்வொரு விடியலும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தருகிறது.

ஆ) விடுதலை - விடுதலை வேள்வியில் மகாகவி பாரதியின் பாடல்கள் மிகப்பெரும் பங்காற்றின.

இ) புல்லாங்குழல் - கண்ணன் புல்லாங்குழல் இசைக்கும்போது பசுக்கூட்டம' மெய்மறந்து நின்றனவாம்.


5. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

முற்றிப் படர்ந்த
முட்காட்டை எரித்து
விளைந்த மூங்கிலை
வீரமாய்த் துளைத்து
மூச்சுக் காற்றை
மோகித்து நுழைத்து
புரட்சிப்
புல்லாங் குழலில்
பூபாளம் இசைத்தது
எந்த நாளோ
அந்த நாள் இது.

வினாக்கள்

அ) முட்காடு - பிரித்தெழுதுக.

முள் + காடு

ஆ) பாடலில் பயின்று வந்துள்ள உருவகத் தொடரை எடுத்தெழுதுக.

விடை: புரட்சிப் புல்லாங்குழல்

இ) பாடலில் இடம்பெற்றுள்ள பெயரெச்ச, வினையெச்சச் சொற்களைப்
பட்டியலிடுக. 

பெயரச்சம் - படர்ந்த, விளைந்த

வினையெச்சம் - முற்றி, எரித்து, துளைத்து , நுழைத்து 

ஈ ) இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ள சொற்களை
எடுத்தெழுதுக.

விடை: காற்றை - முட்காட்டை

உ) மேற்கண்ட பாடலடிகளில் ஆசிரியர் கூறவருவது என்ன?

விடை: புரட்சி

6. ' பாரத அன்னை காளியாய்ச் சீறிக் கைவிலங் கொடித்தாள்' என்பதன்மூலம் கவிஞர் கூறவருவது என்ன?


விடை: இந்திய தேசத்தின் விடுதலையை.


7. இந்திய நாட்டு மக்களின் நிலையை விடுதலைத் திருநாள் பாடல்வழி எழுதுக.


விடை: 300 ஆண்டுகள் நம்மை அடிமைப் படுத்தி ஆட்சி செய்த வெள்ளையரின் இருண்ட ஆட்சி நிறைவு பெற்றது.
மக்களின் அறியாமை என்னும் இருள் அகன்றது.


8 , உன் பள்ளியில் நடைபெற்ற விடுதலைத் திருநாள் கொண்டாட்டம் குறித்து உன் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.


                                                         பசுமை வீதி,
                                                          பாரதிபுரம் , 
                                                            மதுரை - 20

அன்புள்ள  நண்பா ! வணக்கம். நலம். நீயும் உன் குடும்பத்தினரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். எங்கள் பள்ளியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாக்கொண்டாட்டத்தை உன்னுடன் பகிரவே இக்கடித்தை எழுதுகிறேன்.

         விழா , காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவ , மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார். விழா நிறைவில் இனிப்பு வழங்கப்பட்டது. எதிர்வரும் விடுதலை நாள் நிகழ்வில் நீயும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.


                                         உன் அன்பு அன்பன் , 
                                                         கவியரசன்.

உறைமேல் முகவரி :

மு.தமிழாசன்,
முல்லை வீதி , 
எட்டய புரம்... -628901
தூத்துக்குடி ( மாவட்டம் )

9. குறிப்புகளைக்கொண்டு பத்தியமைக்க.(பக். 148 - நூல்வெளி )

மீரா - இயற்பெயர் - மீ.இராசேந்திரன் - பேராசிரியர் பணி - அன்னம் விடு தூது இதழ் -  நூல்கள் - ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம்

விடை:

1 . மீ.இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா, கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

2. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.

3. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும் , வா இந்தப்பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

4. இவருடைய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒருகவிதை இங்கு தரப்பட்டுள்ளது.

10. கீழ்க்காணும் அடிகளைத் தொடர்ந்து ஐந்து வரியில் கவிதை படைக்க.

இயற்கை வியக்க வைத்தது
செயற்கை விழிக்க வைத்தது
இயற்கை இன்பம் தந்தது
செயற்கை துன்பம் தந்தது
இயற்கை ஆரோக்கியம் தந்தது
செயற்கை அழிவைத் தந்தது.
எனவே இயற்கையைக் காப்போம் !

******************   ***********************

நண்பர்களே ! மேலே உள்ள வினாக்களை விரிவான விடைகளுடன் காட்சிப் பதிவிலும் நீங்கள் கண்டு மகிழலாம். இதோ இந்த வீடியோவில்.






*********************    ********************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை .


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

அழைத்து மகிழ - 97861 41410




Post a Comment

1 Comments