எட்டாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5 - பயிற்சித்தாள் - 19
வாழ்வியல் - திருக்குறள்
******************** *********************
1. 'முருகன் சாலையோரம் நின்ற மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.
இதைப்பார்த்த தலைமையாசிரியர் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாளராக
அவனைத் தேர்வுசெய்தார்'. இவ்வுரைப்பகுதிக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவுசெய்க.
அ) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
ஆ) செய்வானை நாடி வினைநாடிக்காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
இ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஈ) கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
விடை:
இ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
2. சேர்த்தெழுதுக.
அ) என்று+உரைக்கும் = என்றுரைக்கும்
ஆ) கற்று + அறிந்தார் = கற்றறிந்தார்
3. பொருத்துக.
விடை
அ) கொடுஞ்சொல் - கொடுமை +சொல்
ஆ) சொல்லாற்றல் - சொல் +ஆற்றல்
இ) வெல்லும்சொல் - வெல்லும் + சொல்
ஈ) செயலாற்றும் - செயல் +ஆற்றும்
4. பொருந்தாததைத் தெரிவுசெய்க.
அ) வேந்தர் ஆ) மன்னன்
இ) அரசர் ஈ) குடிமக்கள்
விடை: ஈ) குடிமக்கள்
5. கோடிட்ட இடங்களை நிரப்புக.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்
கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
6. கீழ்க்காணும் தொடரில் உரிய நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
கண்ணோடாது என்பது நடுவுநிலையில் நிற்பது என்று பொருள்படும்
விடை:
கண்ணோடாது என்பது , ' நடுவுநிலையில் ' நிற்பது என்று பொருள்படும்.
0 Comments